பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், […]

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் இலக்கினை நிறைவேற்றும் நோக்கில், அக்கட்சியின் தேர்தல் பணி வியூகங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கான அடித்தளமாக, மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் திமுகவில் இணைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். […]

தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருகிறது. முன்பு தினசரி பாதிப்பு 10 ஆக இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து 60-ஐ கடந்துள்ளது. பருவமழைக் காலத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்து வரவிருக்கும் இரண்டு மாதங்களில் இந்த நோய்த்தொற்று பாதிப்பு மேலும் இருமடங்காக உயரக்கூடும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் […]

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் பாரில் பெண் ஒருவரை அறைக்கு அழைத்த விவகாரத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் ரிசார்ட் வைத்திருக்கும் வின்ஸ்டன் பிரபு (37) மற்றும் அவரது தம்பி திவாகர் அரவிந்த் (35) உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர், ஹோட்டலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதே பாரில் கொளத்தூரைச் சேர்ந்த அரவிந்தன் […]

பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 1-ம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ / டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் […]

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த அல்லியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 45), ஒரு தொழிலாளி. கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று தனது வீட்டிலிருந்தபோது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டன. இருப்பினும், திடீரென மருத்துவமனையில் இருந்து […]

பிரதமரின் கிசான் திட்டத்தில் மேலும் அதிக தமிழக விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வேலூரில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நேற்று வருகை தந்தார். பிரதமரின் தனம் தானியம் வேளாண் திட்டம், தேசிய பருப்பு வகைகள் இயக்கம், இயற்கை வேளாண்மை இயக்கம், பருப்பு வகைகள் மீதான […]

பிரபல நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் 9 நிகழ்ச்சியின் நடுவராக அறிமுகமானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், நிகழ்ச்சியின் தற்போதைய மந்தமான மற்றும் சர்ச்சைக்குரிய போக்கு, தொகுப்பாளரான அவருக்கே சலிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், விஜய் சேதுபதி தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். “வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளுறது ரசிக்கும் படியாக இருக்கணும்… இல்ல சகிச்சுக் கொள்ளுற மாதிரியாவது இருக்கணும். ஆனா, […]

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வழங்க வாய்ப்புள்ளது. தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 நாள்கள் பக்தர்கள் […]