இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வரும் 2035ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கான தனித்துவமான விண்வெளி நிலையத்தை விண்ணில் அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 300 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான இலக்கு இஸ்ரோவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மனிதரில்லா சோதனை விண்கலம் நடப்பாண்டிற்குள் ஏவப்படவுள்ளதாகவும் […]

தமிழகத்தில் தவெக அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடையும் தருவாயில், இதுவரை அரசால் செயல்படுத்தப்பட்ட முக்கியச் சாதனைகள் மற்றும் முன்னோடித் திட்டங்கள் குறித்த துறைவாரியான அறிக்கையை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதவியேற்றது முதல் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மற்றும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில், 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் திட்டங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து […]

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வரும் 14ஆம் தேதி வரை சிறப்புத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மண்டல இணை ஆணையர்கள், துணை மற்றும் உதவி ஆணையர்கள், கோவில் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ➣ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அறநிலையத்துறை திருக்கோவில்களிலும் ஆகஸ்ட் 10 முதல் 14 வரை (5 […]

தமிழகத்தில் அனைத்து அரசு தொடர்பான நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக கட்டாயமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தனித்தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனோன்மணியம் சுந்தரனாரால் 1891ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘மனோன்மணியம்’ என்னும் புகழ்பெற்ற நாடக நூலில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 1970-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம், அரசு […]

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாநகர், புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், சுமார் 6 […]

நடிகரும் பாஜக மூத்த நிர்வாகியுமான சரத்குமார், தன்னை எளிதில் காண்பதற்கு ஆதரவாளர்கள் கையில் ‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தமது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆதரவாளர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய சரத்குமார், ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு நெருங்கிய பிணைப்பை உருவாக்கவும் இத்தகைய யோசனையை முன்வைப்பதாக குறிப்பிட்டார். […]

திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவை செயல்படாது என்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது சொந்தத் தொகுதிகளுக்குத் திரும்பியுள்ளனர். அதன்படி, அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் […]

மாநில உரிமைகள் மற்றும் கொள்கை விஷயங்களில் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் தமிழக அரசும், முதலமைச்சரும் ஒருபோதும் பணியமாட்டார்கள் என்று அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாநில சுயாட்சி, கொள்கைவாதம் மற்றும் சமூக நீதி குறித்து திமுக பேசுவது முரண்பாடாக உள்ளது. கடந்த கால ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் விவகாரங்கள் காரணமாகவே, வேறு வழியின்றி பாஜகவின் பிடியில் அவர்கள் விழும் சூழல் உருவானது. கொள்கை ரீதியான […]

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாக கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் எழுதிய கடிதத்தில், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி எடுத்த சில ஒருதலைப்பட்சமான முடிவுகளாலேயே கட்சி தொடர் பின்னடைவை சந்தித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். அண்மையில் வெற்றிபெற்ற 47 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர், தலைமை எடுத்த தவறான நகர்வுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். […]

முதல்வர் விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே அரசியல் ரீதியான கருத்து மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றனர். முன்னதாக கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கி உத்தரவிட்டார். இருப்பினும், அரசுப் பணிக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் சூழலில், […]