தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வெளி ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே நிர்வாக முடிவுகள் மற்றும் கொள்கை ரீதியாக கூட்டணிக் கட்சிகள் அடுத்தடுத்து வழங்கி வரும் கடும் அழுத்தங்கள், த.வெ.க தலைமைக்குப் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையேயான கபடிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடி வந்தன. அப்போது, களத்தில் தனது அணிக்காக தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர் முகேஷ் (17), எதிர்பாராத விதமாக மைதானத்திலேயே திடீரென நிலைகுலைந்து சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். இதைப் […]
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி அரங்கேறியுள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘எப்.கியூ.எல்’ (FQL) என்ற தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் களமிறங்கிய ஏஜெண்டுகள், கிராமப்புறப் பெண்கள் மற்றும் பொதுமக்களை நேரில் அணுகி குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய ஆயிரக்கணக்கான […]
உலக அளவில் புகழ்பெற்ற பல தீர்க்கதரிசிகளில், பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற பெண்மணியான பாபா வங்காவின் கணிப்புகள் இன்றளவும் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன. அமெரிக்க 9/11 தீவிரவாதத் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்துக் கூறியிருந்த இவர், 1996-ல் மறைந்த போதிலும் இன்னும் 3,000 ஆண்டுகளுக்கான உலக நிகழ்வுகளைத் தொகுத்து வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இவர் கணித்தபடியே போர்கள், சர்வதேசப் பொருளாதாரத் […]
சூறாவளிப் புயல்கள், கொடூர நிலநடுக்கங்கள், வரலாறு காணாத வெப்ப அலைகள், திடீரென உடைந்து சரியும் பனிப்பாறைகள் என 2026ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே மிக தீவிரமான இயற்கை பேரழிவுகளின் ஆண்டாக உருவெடுத்து விஞ்ஞானிகளையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, உலக வரலாற்றில் பல பெரும் பேரிடர்கள் நிகழ்ந்த ’26’ என்ற தேதி, இந்த ஆண்டும் நேபாள பனிப்பாறை சரிவு உள்ளிட்ட சம்பவங்கள் மூலம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. […]
தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற விவாதத்தின் போது, டாஸ்மாக் பணியாளர்களின் 23 ஆண்டுகால சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான அதிரடி ஊதிய உயர்வு மற்றும் பணிச் சலுகைகள் உள்ளிட்ட 6 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார். டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் அரங்கேறும் கூடுதல் கட்டண வசூல் (MRP விதிமீறல்) உள்ளிட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதே வேளையில், […]
சென்னையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் அளித்த சித்திரவதை காரணமாக, 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், புவனேஸ்வரி என்ற இளம்பெண், தனியார் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த 2024 செப்டம்பர் மாதம் திருமணமான இவருக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது புவனேஸ்வரியின் பெற்றோர் […]
தமிழக கோயில்களில் இறை தரிசனத்திற்குப் பிறகு வெண்ணிற திருநீறு வழங்குவதே மரபாக உள்ள நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக ‘கருஞ்சாம்பல்’ பிரசாதம் வழங்கி உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையில் (திருச்செங்கோடு அருகே) அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய முருகன் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலின் தலையாய […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் மீது பால் வேன் மோதிய பயங்கர விபத்தில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது வீட்டின் முன்பாக அவரது மனைவி அஞ்சம்மாள் (60) அமர்ந்திருக்க, அருகிலேயே அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த […]
உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களின் தொடர் கள ஆய்வுகள் மூலம் முல்லைப் பெரியாறு அணை முழுமையான பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும், அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்ற ரீதியில் ஏ.ஐ. (AI) தொழில்நுட்ப வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே தொடர் பீதியை உருவாக்கி வரும் கேரள யூடியூபர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை மூலம் கடுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் […]

