பேருந்து நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள் அவசர தேவைகளுக்காக பலரால் பயன்படுத்தப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த கழிப்பறைகள் ஓரிரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகின்றன. சில சமயங்களில் சுத்தமாகத் தெரிந்தாலும், அங்கே கண்ணுக்கு தெரியாத எண்ணற்ற கிருமிகள் மறைந்திருந்து, நோய்த் தொற்றுக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மூலம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அந்தக் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது, அதிக தீங்கு […]

இந்தியாவில் ஆங்காங்கே காணப்பட்ட உடல் பருமன் பிரச்சனை தற்போது ஒரு தேசிய சவாலாக உருவெடுத்துள்ளது. அண்மையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் புள்ளி விவரங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் 20%-க்கும் மேற்பட்டோர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. விரிவான தகவல்களின்படி, நாடு முழுவதும் 24 விழுக்காடு பெண்களும், 23 விழுக்காடு […]

கர்ப்ப காலத்தில் தலைவலி, காய்ச்சல் மற்றும் வலியை நிர்வகிக்க பொதுவாகப் பாதுகாப்பானது என கருதப்படும் பாரசிட்டமால் மாத்திரையை உட்கொள்வது, குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக ஒரு புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் மவுண்ட் சினாய் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் 46 ஆய்வுகளை மேற்கொண்டு இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கையின்படி, கர்ப்பிணிகள் உட்கொள்ளும் பாரசிட்டமால் மருந்து நஞ்சுக் கொடி வழியாகக் […]

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சரியான பொருட்களைப் பயன்படுத்துவதும் மிக முக்கியம். டாக்டர் திவ்யா வோராவின் ஆலோசனையைப் பின்பற்றினால், இந்த ஆறு பொருட்களையும் உடனடியாக வீட்டிலிருந்து அகற்ற வேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்தை பல நோய்களிலிருந்தும் பாதுகாக்கும். ஒவ்வொருவரும் தங்கள் வீடு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் சில சமயங்களில் நாம் சிந்திக்காமல் வீட்டில் […]

புற்றுநோய் குறித்த பாதிப்புகள் ஆங்காங்கே கேள்விப்பட்ட நிலை மாறி, தற்போது நாடு முழுவதும் புற்றீசல் போல அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்த அபாயகரமான நிலையை உறுதிப்படுத்தும் வகையில், சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை, இந்தியா உட்பட உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஆய்வின்படி, உலகளவில் அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் இறப்புகள் 75% அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2050ஆம் ஆண்டுக்குள் […]