காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இருப்பினும், வேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக பலர் ஆரோக்கியமான காலை உணவை தவிர்க்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இதுபோன்ற சூழலில், குறைந்த நேரத்தில் சத்தான உணவை தயாரிக்க விரும்புபவர்களுக்கு தினை அவல் வெஜிடபிள் உப்புமா சிறந்த தேர்வாக இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினை அவல் (Foxtail Millet Aval) நார்ச்சத்து, புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த […]

பெண்களின் உடல்நலத்தை பிரதிபலிக்கும் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக மாதவிடாய் சுழற்சி கருதப்படுகிறது. மாதவிடாய் நாட்களில் சிறிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், தொடர்ந்து மாதவிடாய் ஒழுங்கில்லாமல் இருப்பது அல்லது அதனுடன் வேறு சில அறிகுறிகளும் இணைந்து காணப்படுவது உடலில் உள்ள சில உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, மாதவிடாய் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்கு பிறகோ தொடர்ந்து வருவது, […]

தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகான குழந்தை பேற்றை தள்ளிப்போடும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக கருவுறுதலில் பல்வேறு சவால்களும் உருவாகி வருகின்றன. தாமதமான திருமணம், சீரற்ற வாழ்வியல் பழக்கவழக்கங்களால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் மற்றும் திட்டமிட்டு கருவுறுதலை தள்ளிப்போடுவது போன்றவை இதன் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எனினும், ஆரோக்கியமான உணவு முறை, மிதமான உடற்பயிற்சி மற்றும் உடல் எடையை சீராக பராமரிப்பது ஆகியவற்றின் மூலம் […]

40 வயதுக்கு பிறகு பெண்களின் உடலில் இயற்கையாகவே பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. குறிப்பாக மாதவிடாய் நிற்கும் காலத்தை (Menopause) நெருங்கும் பெண்களுக்கு எலும்பு ஆரோக்கியம், இதய நலம், உடல் எடை மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, 40 வயதுக்கு மேல் பெண்கள் சோர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை, திடீர் உடல் எடை அதிகரிப்பு, அதிக வியர்வை, […]

உணவு அருந்திய பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சிக்கல்களை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது பொதுவான பரிந்துரையாக உள்ளது. எனினும், பணிச்சுமை காரணமாக பலருக்கும் காலையில் இதற்கான நேரம் […]

வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே சொந்தமாக தொழில் செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வம் தற்போது பல பெண்களிடையே அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பாக துணி பரிசுப் பைகள் (Reusable Fabric Gift Bags) தயாரிப்பு தொழில் பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், துணியால் செய்யப்பட்ட பரிசுப் பைகள், ஷாப்பிங் பைகள் மற்றும் ரிட்டர்ன் கிப்ட் பைகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. […]

அன்றாட அவசரமான வாழ்க்கை சூழலில் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை கண்டுகொள்வதே இல்லை. குறிப்பாக, வேலைப் பளு காரணமாகச் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்கும் பழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால், இந்த அலட்சியப் போக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என வனபர்த்தி அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் எச்சரித்துள்ளார். பொதுவாக, கழிவுகள் நிரம்பும்போது சிறுநீர்ப்பை விரிவடைந்து, சிறுநீர் கழித்தவுடன் மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் […]

தமிழர்களின் பாரம்பரிய உணவுமுறையில் முக்கிய இடம் பிடித்துள்ள கருவாடு, உடலுக்கு பல்வேறு நன்மைகளை தந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது என அரசு பதிவு பெற்ற இயற்கை மற்றும் யோகா மருத்துவப் பொதுநல மருத்துவர் ராகுல் எச்சரித்துள்ளார். கருவாட்டின் மருத்துவக் குணங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசிய அவர், கருவாட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன என்றார். […]

இன்றைய காலத்தில் வீட்டிலிருந்தே சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. ஆனால் எந்த தொழிலை குறைந்த முதலீட்டில் தொடங்கலாம் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு அதிக முதலீடு இல்லாமல், எளிதாக தொடங்கி படிப்படியாக வளர்க்கக்கூடிய தொழில்களில் ஒன்று ஹேர் ஆக்சஸரீஸ் (Hair Accessories) தயாரிப்பு மற்றும் விற்பனை. சரியான தரம், அழகான வடிவமைப்பு மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் இருந்தால் இந்த தொழிலில் நல்ல […]

குழந்தைகளுக்கு காய்கறி கொடுப்பது பல பெற்றோருக்கும் தினசரி சவாலாகவே இருக்கிறது. தட்டில் காய்கறி இருந்தாலே சில குழந்தைகள் முகம் சுளிப்பதும், சாப்பிட மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. இதற்கு குழந்தைகள் பிடிவாதமாக இருப்பது மட்டுமே காரணம் அல்ல என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்களின் சுவை உணரும் திறன், உணவுப் பழக்கம், சுற்றுப்புறச் சூழல் மற்றும் பெற்றோரின் அணுகுமுறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் சுவை உணரும் […]