அருணாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 5 ராணுவ வீரர்கள் உள்பட பலர் மாயமாகியுள்ளனர்; இந்த பேரிடரில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை மற்றும் கடுமையான நீர் தேக்கத்தையும் பொருட்படுத்தாமல், அண்டை முாம்களில் இருந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் […]

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதனையடுத்து சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாடாளுமன்றத்திலும் […]

ஒரே பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும், தங்களின் சுதந்திர தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடி வருகின்றன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும், இந்தியா ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்கு பின்னால் பிரிட்டிஷ் சட்டம், வைஸ்ராய் மவுண்ட்பேட்டனின் பயணத் திட்டம் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. உண்மையில், 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் […]

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வேளையில், பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ‘டும்ராவ்ன்’ (Dumraon) நகர மக்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்றும் மீண்டும் திரண்டு தேசியக் கொடியை ஏற்றி, பேரணிகள் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளுடன் இரண்டாவது நாளாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்படும் இந்தப் பாரம்பரியத்தின் பின்னணியில் ஒரு வீரமிக்க வரலாற்றுத் தியாகம் ஒளிந்துள்ளது. 1942 […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாக டெல்லி செங்கோட்டை விளங்குகிறது. பிரதமர் செங்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொடிமர உரையிலிருந்து தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாகும். 1947-ல் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையான தருணத்தை, தற்போதைய சுதந்திரக் கொண்டாட்டங்களோடு இணைக்கும் ஒரு பாலமாக இப்பாரம்பரியம் திகழ்கிறது. இந்த மரபு 1947-ல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமான மரபாக திகழ்கிறது. பல தசாப்த கால போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய இந்த வரலாற்று நாளுக்குப் பின்னால் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. […]

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மும்பையில் உள்ள ‘பார்லே அக்ரோ’ (Parle Agro) நிறுவனத்தின் கிடங்கில் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள காலாவதியான Frooti மற்றும் Appy Fizz பானங்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மும்பை செம்பூர் பகுதியில் உள்ள பிரயாக் நகரில் அமைந்த பார்லே அக்ரோ நிறுவனத்தின் கிடங்கில் கடந்த ஆகஸ்ட் 13 மாலை 6 மணிக்கு […]

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த நீர்மின் திட்ட சுரங்கத்தில் திடீரென தண்ணீர் மற்றும் மண் குவியல்கள் புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிபால்கோட்டி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (THDC) நிறுவனத்தின் நீர்மின் திட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் […]

தாய்லாந்து புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் கஞ்சா பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளன. டாடா குழுமத்திற்குச் சொந்தமான இந்த இரண்டு விமான நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட விமானிகள் பணிபுரிகின்றனர். விமானப் போக்குவரத்துத் துறை விதிகளின்படி தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் […]

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இத்தீர்மானத்தின் முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டிப் பிரதமருக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தொகுதி மறுவரையறை குறித்துத் தமிழக பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை […]