இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இந்தியா இப்போது நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. தி லான்செட்டின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களுக்கு இந்த நோய் பற்றி தெரியாது, இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது, ஏனெனில் நீரிழிவு என்பது ஒரு அமைதியான கொலையாளியைப் போல உடலில் மெதுவாக பரவி, திடீரென சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு […]

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இருந்து ஒரு இதயத்தை உடைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. வெள்ளிக்கிழமை, ஒரு நபர் தனது பச்சிளம் குழந்தையின் உடலை ஒரு பையில் சுமந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நபர் முழு சம்பவத்தையும் விவரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் “ என் பெயர் விபின் குப்தா. […]

கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக புகார் கொடுத்த சின்னய்யா என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.. தாம் அளித்தது பொய் புகார் என அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, சிறப்பு விசாரணை குழு அவரை கைது செய்தனர்.. இந்த நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சனாதன தர்மத்தின் தூண்களில் ஒன்றான தர்மஸ்தலா கோயிலை இழிவுபடுத்தும் ஒரே […]

இன்றைய வேகமாக மாறிவரும் உலகில், நிதிப் பாதுகாப்பு அவசியம். அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் விலைகளைப் பூர்த்தி செய்ய முதலீடு அவசியம். இல்லையெனில், குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல், திருமணச் செலவுகள் அல்லது ஓய்வூதியத் தேவைகளுக்குத் திட்டமிடுவது கடினமாக இருக்கும். இந்தத் தேவைகளுக்காக நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். அதனால்தான் பாதுகாப்பான, எளிமையான மற்றும் சிறந்த வருமானத்தைத் தரும் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு என்ன வழி? தபால் […]

ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் இன்று சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.2,000 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்சிஓஎம்) மற்றும் அதன் நிறுவனர் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையில் அந்த நிறுவனம் மற்றும் தொழிலதிபருடன் தொடர்புடைய பல இடங்களில் இந்த நிறுவனம் சோதனை நடத்தியதாக தகவல்கள் […]

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி தாலுகாவில் நேற்றிரவு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, பெருமளவு சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் இதில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தின் விளைவாக உள்ளூர் சந்தைகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோட்தீப் தாலுகாவின் தாராலி சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனரக குப்பைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது.. […]