திருமண உறவில் ஏற்படும் பிரச்சனையின் போது கூறப்படும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டு அவதூறாகுமா? இதுகுறித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளில் தன்னை ஆண்மையற்றவள் என்று கூறி தனது நற்பெயரை கெடுத்ததாக கணவர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.. ஆண்மைக்குறைவு குற்றச்சாட்டு, விவாகரத்து அல்லது பராமரிப்பு […]

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று பாஜக அரசு மற்றும் நாட்டின் தேர்தல் செயல்முறை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.. தொடங்கினார், 2024 பொதுத் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு வருடாந்திர சட்ட மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஒரு மக்களவைத் தேர்தலில் எவ்வாறு மோசடி செய்ய முடியும்? அல்லது எப்படி மோசடி செய்யப்படலாம் என்பதை […]

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதலான ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பகவான் மகாதேவருக்கு அர்ப்பணித்தார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) 26 பேரைக் கொன்றதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரையும், அதைத் தொடர்ந்து ஆபரேஷன் மகாதேவையும் தொடங்கியது. வாரணாசியில் ஒரு பொதுக் […]

வரும் செப்டம்பர் மாதத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது ஆக உள்ளதால், அவர் ஓய்வு பெறவேண்டும் என எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதில் ஆர்எஸ்எஸ் தீவிரமாக உள்ளதாகவும், அடுத்த பிரதமர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவராக இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜவில் 75 வயதானதும் தலைவர்கள் அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். 2019 மக்களவை தேர்தலின்போது, 75 வயதுக்கு மேற்பட்ட பாஜ தலைவர்களுக்கு பலருக்கு சீட் […]

தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில், ஆணையம் இதற்கு பதிலளித்துள்ளது.. எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.. இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி ” இந்திய தேர்தல் ஆணையம் மிகப்பெரிய வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது.. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்கான வெளிப்படையான […]

மாதம் ரூ.15000 சம்பளம் பெற்ற ஒரு அரசு ஊழியருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இதன் மூலம் மெகா ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர், கொப்பலில் உள்ள கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் (KRIDL) நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 24 வீடுகள், சுமார் 40 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.30 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.. கலக்கப்பா நிடகுண்டி […]

பண்ணை வீடு பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா, தனது பணிப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் வீடியோக்களை பதிவு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல், ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல், ஆடையை களையும் நோக்கத்துடன் பெண்ணைத் […]

உத்தரப்பிரதேசத்தின் அலிகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சரௌதியா கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.. இங்கு, சில நாட்களுக்கு முன்பு கிராமவாசிகளால் ஒரு ஆண் பாம்பு கொல்லப்பட்ட ஒரு வீட்டிற்குள் ஒரு பெண் பாம்பு நுழைந்தது. வனத்துறை அதிகாரிகள் இந்த பாம்பை மீட்கும் வரை, கிட்டத்தட்ட 24 மணி நேரம் கிராமவாசிகளிடம் பெண் பாம்பு சீறிக்கொண்டே இருந்துள்ளது.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் பாம்பு வீட்டில் […]