கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியில் கதிரம்மா – வெங்கடரமணா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே மனக்கசப்பு நிலவியதாக கூறப்படுகிறது. ஒரே வீட்டில் இருந்தாலும், ஒருவருடன் ஒருவர் பேசாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், பக்கத்து வீட்டு வேணு என்ற நபருடன் கதிரம்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. பின்னர், […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மத்தியப் பிரதேசத்தில் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட ஹல்வா சாப்பிட்ட 250 கிராமவாசிகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் நடந்த ஒரு மத விருந்தில் உணவு சாப்பிட்ட பின்னர், 250 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் அல்வா தயாரிக்கப்பட்டதால் பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது… சிவபுரி மாவட்டத்தின் கோலாரஸ் தாலுகாவின் மொஹ்ராய் கிராமத்தில் […]
ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.. தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் இன்று […]
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அண்மையில் நடந்த ஒரு காதல் சம்பவம், சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் நம்பிக்கை, துரோகம், நட்பு, திருமணம் என அனைத்தும் இந்த ஒரே சம்பவத்தில் அடங்கியுள்ளது. இந்தூரைச் சேர்ந்த 20 வயதுடைய ஷ்ரத்தா திவாரி, தனது பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, காதலனுடன் சேர்ந்து வாழ திட்டமிட்டிருந்த ஷ்ரத்தா, […]
தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சரூர்நகர் பகுதியில் வசித்து வந்த டிரைவர் சேகருக்கு மனைவி சிட்டி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சேகருக்கும், சிட்டிகும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சேகருக்கு திடீரென தலையில் இடி இறங்கியது போல், ஒரு செய்தி வந்துள்ளது. மனைவி சிட்டிக்கு ஹரீஷ் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த […]
செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்களுக்கு வங்கி விடுமுறை என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் மூடப்படும். 2-வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை நாட்களும் இதில் அடங்கும்.. அனைத்து வங்கிகளும் 2வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொது விடுமுறையைக் கடைப்பிடிக்கும்.. அதே போல் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து […]
சீனாவில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டித்தார்.. மனிதகுலத்திற்கு “மிகக் கடுமையான கவலை” என்றும் பிரதமர் மோடி கூறினார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு 26 பேர் பலியாகியதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா” என்று கேட்டார். பாகிஸ்தான் பிரதமர் கலந்து […]
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோர அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோரல் அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்று கடைசி நாள் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆகஸ்ட் […]
2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதி குறியீட்டை பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (IEP) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஐஸ்லாந்து மீண்டும் உலகின் மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளது. 2008 முதல், இந்த நாடு தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது, இது அதன் சமூக அமைப்பின் நிலைத்தன்மை மற்றும் வலிமையைக் காட்டுகிறது. அதே நேரத்தில், இந்த முறையும் முதல் 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா […]
நாடு முழுவதும் இன்று முதல் ஸ்பீட் போஸ்ட் ( விரைவு அஞ்சல்) மூலம் தான் அனுப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று முதல், தபால் துறை, செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் செயல்திறனை மேம்படுத்தவும், விரைவு அஞ்சல் மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவைகளை நினைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அம்சங்களைச் சேர்ப்பதற்கும் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கும் வாடிக்கையாளர்கள் […]

