லடாக்கின் கிழக்கு எல்லைகள் வழியாக சீனாவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட தங்கக் கடத்தல் கும்பலை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் ஆயிரம் கிலோவுக்கு அதிகமான தங்கம் மீட்கப்பட்ட ஒரு பெரிய தங்கக் கடத்தலை விசாரித்து வந்த அமலாக்க இயக்குநரகம் இந்த சதித்திட்டத்தை கண்டுபிடித்தது. கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே அதிக அளவு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், 2023 மற்றும் 2024 […]

ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. 8வது சம்பள கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. 2027 வரை தாமதப்படுத்தாமல், 2026 ஆம் ஆண்டில் 8வது சம்பள கமிஷனை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம், அரசு ஊழியர் […]

இந்த வாரம் நேபாளத்தில் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.. மாநிலங்களின் மசோதாக்களை நிறைவேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் ஆளுநர்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ அல்லது எந்த வகையிலும் பொதுமக்களைப் பாதிக்கக்கூடியதாகவோ இருக்கும் எந்தவொரு சட்டப் புள்ளியிலும் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற […]

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் கணவனைக் கொல்ல முயன்ற சுனந்தா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து நடத்திய இந்த கொலை முயற்சியில், கணவர் பீரப்பா காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். விஜயபுரா, இந்தி நகரில் வசித்து வந்த பீரப்பா மாயப்ப பூஜாரி, தனது மனைவி சுனந்தா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். போலீசாரின் கூற்றுப்படி, சுனந்தாவுக்கு சித்தப்பா கயத்தகேரி என்ற நபருடன் கள்ளத்தொடர்பு […]

விபச்சார விடுதியில் பாலியல் தொழிலாளியின் சேவையைப் பயன்படுத்தும் ஒருவரை வாடிக்கையாளர் என்று அழைக்க முடியாது என்றும், பாலியல் தொழிலாளியை “ஒரு பொருளாக இழிவுபடுத்த முடியாது” என்றும் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்த நீதிபதி வி.ஜி. அருண், “எனது பார்வையில், விபச்சார விடுதியில் பாலியல் தொழிலாளியின் சேவையைப் பயன்படுத்தும் […]

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் மார்க்கெடில், தனது தலையில் நீல நிற டிரம் சிக்கிய நிலையில் ஒரு காளை அப்பகுதிக்குள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் குழப்பம் ஏற்பட்டது. காளையால் தானாக அந்த டிரம்மை அகற்ற முடியவில்லை.. அந்த காளையின் பெரிய கொம்புகள் அதில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.. நீண்ட நேர முயற்சிகளுக்குப் பிறகு கிராம மக்கள் டிரம்மில் இருந்து காளையை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி […]

லடாக்கில் உள்ள சியாச்சின் தள முகாமில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் இரண்டு அக்னிவீரர்கள் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். “உலகின் மிக உயரமான போர்க்களம்” என்று அழைக்கப்படும் சியாச்சினில் மீட்புப் பணி நடந்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மணி நேரம் சிக்கிய பின்னர் அவர்கள் இறந்தனர். ஒரு […]

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் திடீரென இரண்டு இளம்பெண்கள் மாயமான நிலையில், போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன பெண்கள் குறித்து அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, காணாமல் போன பெண்களில் ஒருவரின் காதலனான ஸ்ரீகாந்த் சௌத்ரி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தபோது பல அதிர்ச்சித் தகவல்கள் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ஒருவரின் உடல், அவரது வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இறந்தவரின் மனைவியும், மருமகனும் இருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் வேலை செய்து வந்த அந்த நபர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தச் சூழலில், அவரது […]