ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்து டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூடுதலாக 25% வரியை விதித்தார். ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் ஒரு நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். முன்னதாக ஜூலை 30 ஆம் தேதி, […]

ஒரு காலத்தில் ரூ.40 தான் சம்பளம் பெற்ற இந்த நபர் பின்னர் ரூ.107 கோடி ஆஃபரை நிராகரித்தார்.. அவரின் வெற்றிக்கதை குறித்து தற்போது பார்க்கலாம்.. பல பிரபலமான ஆசிரியர்கள் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். அத்தகைய ஒரு ஆசிரியர் கான் சர், அவர் தனது தனித்துவமான கற்பித்தல் பாணிக்கு பெயர் பெற்றவர். அவர் பாட்னாவில் கான் ஜிஎஸ் ஆராய்ச்சி மையம் என்ற பயிற்சி நிறுவனத்தை நடத்துகிறார். அவர் 2019 இல் […]

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியைச் சேர்ந்த 22 வயதான ஹர்ஷிதா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திராவை இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண விழா உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் பங்கேற்புடன் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் ஹர்ஷிதாவின் இல்லத்தில் தங்கியிருந்தனர். முதல் இரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில், ஹர்ஷிதா தன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரமாக […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தற்போது, ரெப்போ விகிதம் 5.50% ஆக உள்ளது. இந்த நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர், ஆகஸ்ட் மாத நாணயக் குழுக் கூட்டத்தில் (MPC) புதன்கிழமை, […]

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (BCAS) வெளியிட்டுள்ள பதிவில், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை பயங்கரவாதிகள் அல்லது “சமூக விரோத சக்திகளிடமிருந்து” அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று மத்திய பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துமாறு […]

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் சார்பில் போர் நிறுத்த மீறல்கள் நடந்ததாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் எவ்வித போர் நிறுத்த மீறல்களும் நடக்கவில்லை என்றும் இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் போர் நிறுத்த மீறலை மீறி […]