ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல், 35 வயது நபரைக் கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் மோகனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலசபதர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கோபால் என்பவரை, கிராமவாசிகள் அந்த நபரை கழுத்தை நெரித்து கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்து, […]

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதியோருக்கான வய வந்தனா சுகாதார அட்டைகள் வைத்திருப்போர் இடம் பெயர்தல் திறன் என்ற அம்சத்தின் கீழ், பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள 31,466 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டது. ஆயுஷ்மான் வய […]

நோயாளிகளுக்கு மருந்துகளை மலிவு விலையில் வழங்கும் நடவடிக்கையாக, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), முன்னணி மருந்து நிறுவனங்களால் விற்கப்படும் 35 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலைகளைக் குறைத்துள்ளது. விலை குறைக்கப்பட்டுள்ள இந்த மருந்துகளில், அழற்சி எதிர்ப்பு, இருதய நோய், ஆண்டிபயாடிக், நீரிழிவு எதிர்ப்பு மற்றும் மனநல மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் அடங்கும். NPPA-வின் விலை ஒழுங்குமுறையின் அடிப்படையில், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் இந்த […]

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் – ஹிமாயத் நகரில் இடம்பெற்ற தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் அருண்குமார் ஜெயின் என்பவரின் மனைவி பூஜா (வயது 43), மூடநம்பிக்கையின் பேரில் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார். அருண்குமார் ஜெயின், தனது மனைவி பூஜா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஹிமாயத் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை அவர் தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அந்த […]

நாட்டில் மொத்தம் 1,78,184 ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் மூலம் சுகாதார பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்களில் விரிவான சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்த் தடுப்பு முறைகள், தொற்று மற்றும் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சைகள், குழந்தைகள் நலன் மற்றும் இதர சுகாதார சேவைகளும் இந்த மையங்களில் வழங்கப்படும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. […]

உ.பி.யின் ஹாப்பூரில் உள்ள ஹோட்டலில் கணவரின் காதலியுடன் காபி குடிப்பதை பார்த்த மனைவி, அந்த பெண்ணை நடுரோட்டிலேயே கடுமையாக தாக்கினார்.. உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது கள்ளக்காதலியை சந்திக்கச் சென்ற திருமணமான நபர் ஒருவரை அவரது மனைவி கையும் களவுமாகப் பிடித்தார். அந்த நபரின் மனைவிக்கும் அவரது கள்ளக்காதலிக்கும் இடையே நடந்த மோதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தனது கணவரை வேறொரு பெண்ணுடன் பார்த்த […]

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்ணை பண்ணை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது, வீடியோ எடுத்து மிரட்டியது உள்ளிட்ட பல புகார்கள் கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் மீது குவிந்தது.. ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா குடும்பத்தின் கன்னிகாடா பண்ணை வீட்டில் பணிபுரிந்த 48 வயது பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக அவர் மீது […]

திருமண உறவில் ஏற்படும் பிரச்சனையின் போது கூறப்படும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டு அவதூறாகுமா? இதுகுறித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளில் தன்னை ஆண்மையற்றவள் என்று கூறி தனது நற்பெயரை கெடுத்ததாக கணவர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.. ஆண்மைக்குறைவு குற்றச்சாட்டு, விவாகரத்து அல்லது பராமரிப்பு […]