உத்தரப்பிரதேச மாநில நொய்டாவின் செக்டார் 137 இல் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில், கடந்த வாரம் பராமரிப்பாளர் ஒருவர் 15 மாத குழந்தையை, பராமரிப்பாளர் ஒருவர் தாக்கி, அவரது தொடையில் கடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த பராமராப்பாளர் குழந்தையை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வீடியோவில், அந்தப் பெண் குழந்தையுடன் நடந்து செல்வதைக் காணலாம். அவர் குழந்தையை இரண்டு அல்லது மூன்று முறை தரையில் போடுகிறார். […]

பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம், தன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கோயிலில் பூசாரி ஒருவர் தினசரி பூஜை செய்து வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி மீது இவருக்கு விபரீத ஆசை வந்துள்ளது. இதையடுத்து, அவரை மயக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்த நிலையில், அவர் அதிர்ச்சி […]

திருவனந்தபுரத்திலிருந்து புதுடெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் வட்டமடித்த நிலையில், சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) திருவனந்தபுரத்திலிருந்து புது டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானக் குழுவினர் கண்டறிந்தனர். இதனால் உடனடியாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. விமான எண் A12455 […]

1947 க்குப் பிறகு இந்தியாவின் இறையாண்மையை விரைவாக ஏற்றுக்கொண்ட நாடுகளையும், பல ஆண்டுகளாக அங்கீகாரத்தைத் தடுத்து நிறுத்திய நாடுகளையும் பற்றிய தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ஆண்டு இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு சுதந்திரம் பெற்று, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மாறியது. சுதந்திரம் மில்லியன் கணக்கானவர்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் கொண்டு […]

இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது இளைஞர்களை அதிர்ச்சியடைச் செய்தது. ஆனால் இந்த அதிர்ச்சி செய்தி மறைவதற்குள், அங்கு பணிபுரிவோருக்கு ஓர் உற்சாக செய்தியை அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அறிவித்திருப்பது தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதாவது, டிசிஎஸ் நிறுவனம் 80 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் ஆரம்பத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) […]

குருகிராமில் நடந்த நில விவகாரம் தொடர்பான ஊழல் வழக்கில், தொழிலதிபரும், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாத்ரா, சட்டவிரோத முறையில் ரூ.58 கோடி வருமானம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இந்த நிதிகளை ராபர்ட் வாத்ரா சட்டவிரோதமாக பெறப்பட்டதாகக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை, இந்த நிதியை வதேரா அசையா சொத்துக்களை வாங்கவும், முதலீடுகளை செய்யவும், கடன்கள் மற்றும் முன்பணங்களை வழங்கவும், அவருடன் தொடர்புடைய குழு நிறுவனங்களின் பாக்கிகளைத் […]

முன் அறிவிப்பு இல்லாமல், விசாரணை நடத்த வாய்ப்பு இல்லாமல் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து நியாயமான உத்தரவு இல்லாமல் பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த பெயரும் நீக்கப்படாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. துணை தேர்தல் ஆணையர் சஞ்சய் குமார் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் […]