ஒரு நபர் ஆன்லைன் மூலம் “வாவ் மோமோ” உணவகத்தில் இருந்து வெஜ் டார்ஜிலிங் மோமோ காம்போ (Veg Darjeeling Momo Combo) என்ற உணவு ஆர்டர் செய்தார். அவர் ஒரு சைவ உணவு பழக்கம் பின்பற்றும் நபர். தான் ஆர்டர் செய்த சைவ உணவுக்கு பதிலாக சிக்கன் மோமோ (Chicken Momo) வழங்கப்பட்டதால் அவரது மத உணர்வுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். உணவகத்தின் அலட்சியம் காரணமாக, […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து பிரபல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. பிரபல குழந்தை நல மருத்துவர் டாக்டர் குஷால் அகர்வால் கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், […]
ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.15,000 வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடை செய்யும் சட்டங்களை திருத்திய நிலையில், தற்போது கருவுறுதல் விகிதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ’பூஜ்ஜிய வறுமை’ முயற்சியின் ஒரு பகுதியாக, பணக்காரர்கள் ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுக்கும் ஒரு சுவாரஸ்யமான திட்டத்தை நான் உருவாக்கியுள்ளேன். இது […]
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் குக்கி – மெய்தி இன மக்கள் இடையே கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தின்போது சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கினர். மேலும், மணிப்பூரில் ட்ரோன்கள், சிறிய ரக விமானங்கள், வெடி மருந்து ராக்கெட்டுகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் […]
டெல்லியில் சாலையின் நடுவே ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய இளைஞரை, போலீசார் கைது செய்து, அவருடைய பைக்கை பழைய இரும்பு கடைக்கு ‘பார்ட் பார்ட்டாக’ பிரித்துப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யமுனா விகார், கிழக்கு டெல்லி பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், ஒரு இளைஞர் தன்னுடைய பைக்கில், ஒரு பேருந்தை ஓட்டும் டிரைவரை பயமுறுத்தும் வகையில், திடீரென அவரது கண்ணிமைக்கும் தூரத்தில் வந்து, […]
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் என்ற தம்பதி மேகாலயாவை நோக்கி சென்ற ஹனிமூன் பயணம், தற்போது பெரும் மர்மமான வழக்காக மாறியுள்ளது. தம்பதியர் கடந்த மாதம் சில்லாங், சோஹ்ரா பகுதிகளில் ஹனிமூனுக்காக ஹோம் ஸ்டே விடுதிகளில் தங்கி இருந்தனர். மே 23 ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த ரூமில் இருந்து செக் அவுட் செய்த பின், சில நிமிடங்களிலேயே அவர்கள் மாயமானது மிகப்பெரும் அதிர்ச்சியை […]
மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த இரண்டு நாட்களில் 769 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6,000 ஐத் தாண்டியது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 6,133 செயலில் உள்ள கோவிட் வழக்குகள் உள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் ஆறு இறப்புகளை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கேரளா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, அதைத் […]
இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தி 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தி, 4 முக்கிய ரேடார் மையங்களை அழித்தது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், இந்த தாக்குதல்களில் இந்தியா ரஃபேல் போர் விமானங்கள், தரையிலிருந்து […]
உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலாளர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக யுஜிசி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு […]
இந்திய நகரங்களில் உள்ள பெரும்பாலான கலாச்சாரங்கள் மற்றும் வழக்கங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கிராமங்களில் உள்ள வித்தியாசமான கலாச்சாரம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினர் மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல், லிவிங் ரிலேஷன் வாழும் முறை காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி, 70 ஆண்டுகளுக்கு மேல் லிவிங் முறையில் வாழ்ந்த ஒரு காதல் ஜோடிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் […]

