கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் தீவிரமடைந்து பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. பருவமழை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது, சத்தீஸ்கர் மற்றும் சுற்றுப்புறங்களில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தீவிரமடைந்து மத்தியப் பிரதேசம் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு நகர்ந்துள்ளது. மேலும், தெற்கு குஜராத் கடற்கரையில் […]

முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கம்‌ மாநிலத்தில் பொதுக்க கூட்டத்தில்‌ பங்கேற்றுவிட்டு திரும்புகையில்‌ சிலிகுரியில்‌, மோசமான வானிலையால்‌ ஹெலிகாப்டர்‌ அவசரமாக தரையிறக்கவே முதல்வர்‌ மம்தாவுக்கு காயம்‌ ஏற்பட்டு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளார். MRI ஸ்கேன்‌ செய்ததில்‌ அவரின்‌ இடது முழங்கால்‌, இடுப்பு பகுதியில்‌ காயம்‌ ஏற்பட்டது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம்‌ தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி, குழந்தைப்பேறின்மையால் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2009-ல் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் ஆரோக்கியமான இரட்டை பெண் குழந்தைகள் அத்தம்பதிக்கு பிறந்துள்ளன. தங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்து வந்துள்ளனர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல பெற்றோருக்கு குழந்தைகள் விஷயத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ரத்தம் மற்றும் மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவில், இரு பெண் குழந்தைகளின் […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக ஐந்து புதிய வந்தே பாரத் ரயில்களை நாட்டிற்காக அர்பணித்தார். விரைவான மற்றும் சொகுசான ரயில் பயண அனுபவத்தை வழங்கக் கூடிய ஓர் ரயிலே வந்தே பாரத் ரயில்கள் ஆகும். தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் ஐந்து வந்தே பாரத் ரயில்களும் சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டவை ஆகும். ரயில் பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல […]

மணிப்பூர் மாநிலத்தில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் வெடித்தது முதல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், பணிக்கு வராமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அரசின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. எனவே, பணிக்கு வராவிட்டால் ஊதியம் வழங்கப்படாது என மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த […]

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜல்பைகுரியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, பக்தோக்ரா விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​பைகுந்த்பூர் வனப்பகுதி வழியாக ஹெலிகாப்டர் சென்றபோது அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, மம்தா பானர்ஜி பாக்டோக்ரா விமான […]

3 வயது சிறுவனுக்கு தவறுதலாக ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாக்கு அறுவை சிகிச்சைக்காக 3 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஆனால், சிறுவனுக்கு தவறுதலாக ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை (சுன்னத் வகையான அறுவை சிகிச்சை) செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர்கள் கூறுகையில், ’மருத்துவ ஊழியர்கள் கையெழுத்து வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட படிவத்தில் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. […]

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ்(52). தனியார் மருத்துவமனை ஊழியரான இவர் கடன் 2017 ஆம் வருடம் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக கொரட்டூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுவாமிதாசுடன் இருந்த தவறான நட்பின் காரண மாக சுவாமிதாஸ் வீட்டின் பணி பெண்ணாக இருந்த லட்சுமி (32) என்பவர் தன்னுடைய ஆண் நண்பர் முகமது இர்பான்(35) உடன் சேர்ந்து சுவாமிதாசை கொலை செய்தனர் என்பது […]

கடந்த 24 ஆம் தேதி ஏர் இந்தியாவின் AIC 866 விமானம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு சென்றது. இந்த விமானத்தில் ராம் சிங் என்ற பயணியும் சென்றுள்ளார் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் சமையல்காரர் ஆக இவர் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் அந்த ஏர் இந்தியா விமானத்தின் 17F இருக்கையில் அமர்ந்து சென்ற நிலையில், விமானம் நடுவானில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பயணிகள் இருக்கைகள் இருக்கும் […]

கிழக்கு டெல்லியின் ஷாதாராவில் பார்ஷ் பஜார் என்ற பகுதியில் 2️ பேர் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அந்த தம்பதியை இருசக்கர வாகனத்தில் வந்த 2️ பேர் வழிமறித்து நிறுத்தினர் அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை சோதனையிட்ட அந்த 2 நபர்கள் அவர்களிடம் வெறும் 20 ரூபாய் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கொள்ளையர்கள் எவ்வளவு தேடியும் […]