28 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ’மாண்டஸ்’ புயல் உருவாகி வரலாறு காணாத மழையால் கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பெருமளவு வெள்ளம் சூழ்ந்தது. இதனால், நெல் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி நாசமானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர். மேற்கொண்டு […]

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறையில் இருந்த டிஜிபி பிரஜ் கிஷோர் ரவிக்கு ஊர்காவல்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீயணைப்பு துறை டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி ஊர் காவல்படை டிஜிபியாக பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை டிஜிபியாக இருந்த ஆபாஷ் குமாரை தீயணைப்பு துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை […]

சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூகநீதி நோக்கத்தில்‌ நாம்‌ அடுத்த கட்டத்துக்குச்‌ செல்ல, சில பழைய நடைமுறைகளைக்‌ கைவிடலாம்‌ என்பதே இதன்‌ நோக்கம்‌. நமது அன்பு பரிமாற்றத்தில்‌ புத்தகங்கள்‌ இடம்பெற்றதன்‌ மூலம்‌, நாம்‌ அடுத்த கட்ட அறிவு இயக்கத்தைத்‌ தொடங்கி இருக்கிறோம்‌. அதேபோல இப்போது […]

தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே அரசின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். மேற்குவங்க மாநிலத்தில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஹௌரா முதல் நியூ ஜெல்பைகுறி வரை இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று பிரதமர் மோடி, மேற்குவங்கம் செல்வதாக இருந்தது. ஆனால், இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் காலமானதை தொடர்ந்து […]

தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சமூக வலைதளங்களில் பரவும் அவதூறுகள் மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இதற்கிடையே, இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து 2002ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அரசியலில் […]

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் தொலைதூரங்களில் உள்ள வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிக்கும் வகையில் முன்மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 72 தொகுதிகளைச் சார்ந்த பதிவு செய்த வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை பற்றி விளக்கம் அளிக்க, ஜனவரி 16ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்ப்பு […]

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4-ம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றிருந்தார். இன்று அவர் காலமானார். அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை […]

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 100. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது  ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில்  “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் […]

மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உட்பட ரூ.7,800 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக பிரதமரின் செயல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹவுரா மற்றும் நியூ ஜகல்பூரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மற்றும், கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி […]

தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனம்‌ சார்பில்‌, ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ பொங்கல்‌ பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம்‌, அன்னை தெரசா மகளிர்‌ வளாகத்தில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ தயாரிக்கும்‌ பொருட்களின்‌ ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ பொங்கல்‌ விற்பனைக்‌ கண்காட்சியினை இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ இன்று துவக்கி வைக்கவுள்ளார்‌. இக்கண்காட்சியில்‌, தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ கீழ்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ செயல்பட்டு […]