நாம் தமிழர் கட்சியின் மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக், அக்கட்சியில் இருந்து விலகி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று, மக்கள் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, 150-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் […]

தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தனது எக்ஸ் தளத்தில்: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவமழை தொடங்கும் முன்பே, […]

சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள், விமானநிலையம், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மர்ம நபர்கள் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸார், வெடிகுண்டு […]

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் மருத்துவத் துறைக்கான முக்கியமான முன்னேற்றம் குறித்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) மூலக்கூறான ‘நபித்ரோமைசின்’ (Nabactromicin) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த புதிய நுண்ணுயிர்க்கொல்லி மருந்து, குறிப்பாக சுவாச நோய்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும், புற்றுநோயாளிகள் மற்றும் […]

தஞ்சையில் நவம்பர் 15ம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டு, நிலம், நீர்,வானம், நெருப்பு, காற்று மாநாடு […]

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவரும், அதிமுக நிர்வாகியுமான ஒருவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் விளம்பரப் பலகைகள் வைக்கும்போது, அதில் தனது படத்தை மிகப் பிரம்மாண்டமாக ஒரு ஓரத்தில் இடம்பெறச் செய்வது இவரது வழக்கம். இவரது இந்த விளம்பர உத்தியைப் பார்த்த திருச்செந்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இவரை அணுகி நிதி நிறுவன வளர்ச்சிக்காக தனியார் நிறுவனத்தில் பெரிய அளவில் கடன் […]

பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள்,திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்; தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 01.04.2025 முதல் 18.10.2025 வரைமொத்தமாக 11,87,000 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் கம்பங்கள் 34,401 […]

செங்கல்பட்டில் நடந்த அரசியல் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜக அரசியல் நிலைப்பாடு மற்றும் விசிகவின் கூட்டணி நிலை குறித்து பேசினார். அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நேரடி எதிர்ப்புக் குரலாக இருப்பது விசிகதான். இங்குள்ள பிரச்சனை விசிகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலானது அல்ல. இதை சாதியப் பிரச்சனையாகத் திரிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். விசிக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என்கிற தவறான […]