அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் கடும் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை இந்திய கணினி அவசரக் குழு CERT-In (Computer Emergency Response Team of India) வெளியிட்டுள்ளது. அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் Google Android இயக்க முறையில் (Operating System) பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை சைபர் தாக்குதலாளர்கள் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட சாதனத்தில் அதிக நிலை அனுமதிகள் (elevated privileges) பெறவோ அல்லது தன்னிச்சையான குறியீடுகளை இயக்கவோ முடியும் […]

நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை கண்காணிக்கவும் பயன்படும் உலகளாவிய இருப்பிட அமைப்பு (GPS – Global Positioning System) மூலம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் மட்டுமின்றி, அந்த சாதனத்தை வைத்திருக்கும் நபர் என்ன செய்துகொண்டிருக்கிறார், அவர் அறையில் இருக்கிறாரா அல்லது வெளியே இருக்கிறாரா என்பது போன்ற பல முக்கியமான கூடுதல் தகவல்களை சேகரிக்க முடியும் என்று டெல்லி இந்திய […]

நாட்டின் மலிவான இணைய சேவை மற்றும் கொரோனா ஊரடங்கு ஆகிய காரணங்களால், யூடியூப் செயலி இன்று மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. இணைய உலகில் யாரும் வீழ்த்த முடியாத சக்தியாக திகழும் யூடியூப், பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், தற்போது ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்ப மாற்றத்தை யூடியூப் களமிறக்க உள்ளது. பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, செயற்கை […]

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் யாரையும் உளவு பார்ப்பது கடினம் அல்ல. காதலர்கள் காதலிகளை, காதலிகள் காதலர்களை, கணவர்கள் மனைவிகளை, மனைவிகள் கணவர்களை எளிதாக உளவு பார்க்கிறார்கள். உளவு பயன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற பயன்பாடுகள் Android மற்றும் iOS தளங்களில் எளிதாகக் கிடைக்கின்றன. இந்த பயன்பாட்டை யாருடைய தொலைபேசியிலும் நிறுவலாம், அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்ற விவரங்களை எளிதாகக் கண்டறியலாம். மேலும் […]

நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உச்சமாக இன்று செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) பார்க்கப்படுகிறது. இன்று அனைத்துத் துறைகளிலும் பரவலாகப் பயன்படும் AI, சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் ஓர் அங்கமாகிவிட்டது. மனித வாழ்வின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட இந்த AI தொழில்நுட்பம், வரும் காலத்தில் நமது வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். மனித […]

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் சாதனத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.இந்த சாதனத்தின் வடிவமைப்பை மறுவரையறை செய்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையின் தரநிலைகளையும் உறுதி செய்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள இந்திய நீரிழிவு நோய் குறித்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் நீரிழிவு நோயால் 10.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய […]

டெல்லியில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டின்போது மூன்று தலைசிறந்த புதிய கண்டுபிடிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு பரிசாக வழங்கி உள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான குவாண்டம் பாதுகாப்பு சிப் (QSIP), கணக்கீட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் இந்தியாவின் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் (25-qubit QPU) மற்றும் இந்தியாவின் முதல் உள்நாட்டு புற்றுநோய் செல் சிகிச்சை (CAR-T செல் சிகிச்சை) ஆகிய மூன்று […]

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிரடி முன்னேற்றமாக, ஒரு ஆல்கோரிதம் சமீபத்தில் ஒரு விந்து மாதிரியின் 25 லட்சம் படங்களை 2 மணிநேரத்தில் ஸ்கேன் செய்து, உயிர் வாழும் இரண்டு விந்தணுக்களை (sperm cells) கண்டறிந்தது. இந்த கண்டுபிடிப்பு, 19 ஆண்டுகளாக குழந்தை பெற முடியாமல் தவித்த ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறக்க வழிவகுத்தது என்று The Lancet இதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தம்பதியில், கணவன் 39 […]

அஞ்சல் துறை மதுரை தெற்கு மண்டலத்தில் உள்ள பதினேழு அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் செயல்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள பதினேழு தபால் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஏடிஎம் இயந்திரங்கள் அஞ்சல்துறையால் நிறுவப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையுடன், பாதுகாப்பான […]