இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையக் குற்றவாளிகள் பெரும்பாலும் அழைப்புகள், வாட்ஸ்அப் மற்றும் பிற குறுஞ்செய்தி செயலிகள் மூலம் தங்கள் இலக்குகளை அடைகின்றனர். இந்த வழிகள் மூலம் தொடர்புகொண்ட பிறகு, தீங்கிழைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி தொலைபேசிகளில் ஊடுருவ முயற்சிக்கின்றனர். வ்வாறு ஊடுருவி லட்சக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கின்றனர். இணையக் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் […]

தொழில், அரசு மற்றும் சமூக தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தலைமையிலான மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமெடுத்து வரும் நிலையில், உலகளாவிய AI Vibrancy Index பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது.. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்த அறிக்கை, AI துறையில் உலகளவில் கடும் போட்டி நிலவுகிறது என்பதையும், அந்தப் போட்டியில் […]

இந்த அதிநவீன டிஜிட்டல் யுகத்தில் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் கிடைக்கின்றன. நீங்கள் விரும்பும் எந்தச் சேவையையும் உங்கள் மொபைல் மூலம் வீட்டிலிருந்தே செய்துகொள்ளலாம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வங்கித் துறை முன்னணியில் உள்ளது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்குகின்றன. கணக்கு தொடங்குவது முதல் பணப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு மற்றும் கடன் சேவைகள் வரை அனைத்தும் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. இதனால் வங்கிக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டிய […]

ஜியோ சிம் கார்டு பயனர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. நிறுவனம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 நல்ல செய்திகளை வெளியிட்டுள்ளது. அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம். ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்காக புதிய ஹேப்பி நியூ இயர் 2026 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் நீண்ட கால இணைப்புத் தேவை உள்ளவர்களுக்கும், பொழுதுபோக்கை விரும்புபவர்களுக்கும், AI (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான கருவிகளைப் […]

வயதுக்கு மீறிய உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஓடிடி தளங்களில் வலுவான பாதுகாப்பு அம்சங்களை கட்டாயப்படுத்துகிறது மத்திய அரசு. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் பகுதி-III, ஓடிடி தளங்களில் உள்ளடக்கத்தை வெளியிடுபவர்களுக்கான நெறிமுறை குறியீடுகளை வழங்குகிறது. இதன்படி, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு உள்ளடக்கமும் வெளியிடப்படக் கூடாது. மேலும் வயது அடிப்படையிலான உள்ளடக்கம் 5 வகைகளாகப் […]

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறையை திருத்தம் செய்து மேலும் வலுப்படுத்துவதற்கு இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் பயணச் சீட்டு முன்பதிவு முறையை மேம்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐஆர்சிடிசி-யை பயன்படுத்தும் பயனாளர்களின் கணக்குகளை மறு மதிப்பீடு மற்றும் சரிபார்த்தல் மூலம் 2025 ஜனவரி முதல் சந்தேகத்திற்குரிய சுமார் 3.02 கோடி பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. தட்கல் […]

ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை ஏற்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை ஆவணமாக வழங்கலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் பான் கார்டு இனி செல்லுபடியாகாது. இந்த மாற்றம் நவம்பர் 2025 முதல் […]

ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. இந்தப் புதிய, கடுமையான விதிகள் புதன்கிழமை (டிசம்பர் 10, 2025) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். இந்தச் சீர்திருத்தம் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று […]

நாடு முழுவதும் பல்வேறு வகையான சைபர் மோசடி வழக்குகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அந்த வகையில், ​​அகமதாபாத்திலிருந்து ஒரு புதிய வழக்கு வெளிவந்துள்ளது. Zepto ஆர்டர் செய்யப்பட்ட காய்கறிகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற முயன்றபோது ஒரு பெண் மோசடிக்கு ஆளானார்.. என்ன நடந்தது? ஒரு பெண் விரைவு வர்த்தக தளமான Zepto-வில் ரூ.24 மதிப்புள்ள கத்தரிக்காய்களை ஆர்டர் செய்தார். அவர் கத்தரிக்காய்களை ஆர்டர் செய்திருந்தார், ஆனால் டெலிவரி பாய் காய்கறிகளுடன் வந்தபோது, […]

ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் OTT சந்தாக்களை விரும்புவோருக்கு ஜியோ புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் குறுகிய காலத்தை கொண்டிருந்தாலும், நன்மைகள் அதிகம். நீங்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள், மொத்தம் 84 ஜிபி. வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜியோஹோம் சேவைக்கு 2 […]