வால்மார்ட்-ஆதரவு பெற்ற PhonePe பெங்களூரில் Pincode எண்ணம் புதிய வர்த்தக செயலியை அறிமுகம் செய்துள்ளது. வால்மார்ட்-ஆதரவு பெற்ற PhonePe ஆனது, அரசாங்கத்தின் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான தளத்தில் கட்டமைக்கப்பட்ட அதன் செயலியான Pincode என்னும் புதிய அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது இது பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.. இது குறித்து PhonePe நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகம் கூறுகையில், Pincode செயலி முதலில் பெங்களூரில் கிடைக்கும் என்றும், […]

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.. இன்று காலை 137 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து இண்டிகோ விமானம் வாரணாசிக்கு புறப்பட்டது.. ஆனால் சிறிது நேரத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் தெலங்கானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை 6:15 மணிக்கு விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், பின்னர் அந்த அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. எனினும் […]

இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளை ரத்து செய்வதற்கான வரைவை (2023) இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்டுள்ளது. அதோடு, தொலைத்தொடர்புத் துறை சம்பந்தப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் எனவும் ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியன்று வெளியிடப்பட்ட குறைந்த அளவிலான இணைப்புக் கொண்ட இணையதள பயன்பாட்டு சேவை, தொலைபேசி சேவையின் தரம் குறித்த விதிமுறைகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. இந்த ஒழுங்குமுறை […]

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அந்த வகையில், வாட்ஸ்அப் பயனர்கள் குறிப்பிட்ட சில தனிப்பட்ட உரையாடல்களை […]

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. டிஜிட்டல் பேங்கிங்கின் வளர்ச்சியால், சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களை குறிவைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். இதனால் ஹெச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ போன்ற வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த சில வாரங்களாக இது போன்ற மோசடிகள் அதிகமாக நடந்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் வங்கிகளில் இருந்து போலியான செய்திகளை அனுப்பி, வாடிக்கையாளர்களீன் கணக்கு […]

பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.. உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.. இந்தியாவில் சுமார் 500 மில்லியன் பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான செய்தியிடல் தளமாம வாட்ஸ் அப் உள்ளது.. இந்நிலையில் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. வாட்ஸ் நிறுவனம் […]

தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அரசின் கொள்கை குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்ணாடி இழை வடம் மூலம் அதிவேக இணைய இணைப்புகளை உறுதி செய்வதில் பாரத் நெட் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியான தமிழ்நெட் மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்புறங்களையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. TNSWAN, BHARATNET மற்றும் TAMILNET ஆகியவற்றை […]

கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. ஹேக் செய்வதன் மூலம் நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரு சில செயலிகள், நிதி தொடர்பான தகவல்களைத் திருட முயற்சிக்கக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.. எனவே உங்கள் போனில் இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. பேட்டரி வேகமாக குறைந்தால் : உங்கள் தொலைபேசியின் பேட்டரி வழக்கத்தை […]

பொதுவாக, ஒரு கேள்வி நம் மனதில் எழும் போதோ அல்லது நமது சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றாலோ உடனடியாக நாம் கூகுளில் தேடத் தொடங்குவோம். நம் கேள்விக்கான பதிலை, அது தொடர்பான தகவல்களுடன் கூகுள் வழங்குகிறது.. எனவே கூகுள் தற்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.. ஆனால், கஸ்டமர் கேர் நம்பரை கூகுளில் தேடினால் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகலாம் என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம்.. போலி கஸ்டமர் கேர் […]

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் இருசக்கர வாகன விபத்துகளே அதிகம். கடந்த 2019இல் 1.67 லட்சம் சாலை விபத்துகளும், 2020இல் 1.56 லட்சம் சாலை விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இதில் 2019இல் 56,136 பேரும், 2020இல் 56,873 பேரும் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆண்டு தோறும் விபத்துக்களும், விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. விபத்து நடக்கும் போது டூவீலர்களில் செல்பவர்கள் தூக்கி வீசப்படவோ, அல்லது கனமான கல் அல்லது […]