மத்திய அரசின் பாதுகாப்பா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்  காலியாக உள்ள இடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு நிறுவனத்தில் ரீசார்ஜ்  அசோசியேட் பணிகளுக்கான  காலியாக உள்ள நான்கு இடங்களை நிரப்புவதற்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பினை இணையதளம் மூலமாக வெளியிட்டு இருக்கிறது  பாதுகாப்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம். இந்த அறிவிப்பின்படி வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிப்பவர்கள்  28 வயது முதல் 35 வயதிற்குள் […]

உலகளவில் பறவைக் காய்ச்சல் தொற்று வேகமாக பரவிவருவதால், அனைத்து நாடுகளும் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பறவைக்காய்ச்சல் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக H5N1 வகையை சேர்ந்த பறவைக்காய்ச்சலால் ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன. அதன்படி, கடந்த மாதம் ஈக்வடாரை சேர்ந்த சிறுமிக்கு H5N1 வகை தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு இருமல், தொண்டை கரகரப்பு, போன்ற அறிகுறிகள் மற்றும் […]

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினத்திற்கு ஏற்ப வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடலாம். ஆனால், 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை பொருந்தும். தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை […]

நாட்டில் உள்ள பொதுத்துறை, தனியார் வங்கிகளைப் போலவே கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வருகிறது. இந்த வங்கிகளின் நிதி நிர்வாகத்தில் விதிமீறல்கள் ஏற்படும் போது ரிசர்வ் வங்கி தலையிட்டு கட்டுப்பாடுகளை விதிக்கும். அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி தற்போது 5 கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, HCBL கூட்டுறவு வங்கி, உரவகொன்டா கூட்டுறவு நகர வங்கி, ஆதர்ஷ் மஹிளா நகரி சஹகாரி வங்கி […]

தமிழ்நாடு அரசில் துறை வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகம் மற்றும் நிரந்தரம் என 2 வகைககளில் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியிட்டப்பட்டுள்ளது. காலியிடங்கள்: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் Graduate Apprentice, Diplomo Apprentice ஆகிய 2 பிரிவுகளில் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் Graduate Apprentice பணிக்கு 335 பேரும் (Civil […]

எங்கள் நாட்டையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியே ஆட்சி செய்யவேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. விலைவாசி உயர்வு, நிலையற்ற பொருளாதாரம், பணவீக்கம், உறுதியற்ற அரசியல் தலைமை, பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்துவரும் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளிட்ட இன்னல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கின்றது. மேலும், […]

இஸ்ரேலில் கி.மு.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இறந்த ஒருவரின் உடலை ஆய்வு செய்தபோது, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில்,15ஆம் நூற்றாண்டில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சகோதரர்களில் ஒருவரது மண்டை ஓடு, அதன் கீழே இருக்கும் […]

கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செஸ் விளையாடிவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மரோட்டிச்சல் என்ற கிராமம் அமைந்துள்ளது. சுமார் 5,000 மக்கள்தொகை கொண்ட இந்த கிராமம், சதுரங்க திறமைகளின் மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. பல தேசிய மற்றும் சர்வதேச செஸ் சாம்பியன்களை உருவாக்கியதன் மூலம் சதுரங்க கிராமம் என்ற புனைப்பெயரை இந்த கிராமம் பெற்றுள்ளது. இதற்கு எப்படி இந்த […]

நத்தையின் உடலில் இருக்கும் உமிழ் நீர் அல்லது ஜெல் போன்ற திரவம் சரும பராமரிப்பில் பலவித நன்மைகள் அளிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் மக்கள் அனைவரும் அதிகளவில் கெமிக்கல் கலக்கப்பட்ட ஃபேஸ் க்ரீம், பவுடர்கள், மாஸ்ட்ரைசர்கள் உள்ளிட்ட பலவகையான அழகுச்சாதனப் பொருட்களை பயன்படுத்திவருகின்றனர். இது சிலருக்கு நன்மை அளித்தாலும், சிலருக்கு எவ்வித பலனும் அளிப்பதில்லை. இதனால், வெவ்வேறு அழகு சாதனப் பொருட்களை நாடி செல்கின்றனர். அந்தவகையில், உலகம் […]

நிலப்பரப்பு மற்றும் புவியியல் அமைப்பு ஆகியவை காரணமாக உலகில் விமானநிலையங்களே இல்லாமல் பல்வேறு நாடுகள் உள்ளன. இதுகுறித்தான பட்டியல் அடங்கிய தொகுப்பை பார்க்கலாம். நவீன காலத்தில் விமான சேவை என்பது உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் மிகவும் இன்றியமைதாக சேவையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் பொதுவாக சிறிய மற்றும் பெரிய நகரங்களில் கூட விமான சேவை அவசியமானதாக உள்ளது. இப்படி இருக்கையில், விமான நிலையங்களே இல்லாமல் சில நாடுகள் உள்ளன. அதுகுறித்தான […]