இந்தியாவில் கள்ளக்காதல் தண்டனைக்குரிய குற்றமல்ல என்றாலும், அது சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படாத, பாவ செயலாகவே கருதப்படுகிறது. அதேசமயம், சில நாடுகளில் கள்ளக்காதல் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஆனால், ஒரு சில நாடுகளில் இதற்கு எவ்விதச் சட்டத் தடைகளும் இல்லை. அங்கு மக்கள் பாலின வேறுபாடின்றிச் சுதந்திரமாக திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். தாய்லாந்து : தாய்லாந்து உலகிலேயே மிக அதிக திருமணம் மீறிய உறவு விகிதத்தை கொண்டுள்ளது. இந்த நாட்டில் […]

வரும் நாட்களில், நீங்கள் ஜப்பானுக்குப் பயணம் செய்தால், பணம் செலுத்துவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியாவைப் போலவே, UPI கட்டண வசதிகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த அம்சம் விரைவில் ஜப்பானிலும் தொடங்கப்பட உள்ளது. செவ்வாயன்று, NPCI (தேசிய கொடுப்பனவு கழகம்) இன் உலகளாவிய பிரிவான NIPL (NPCI International Payments Ltd) மற்றும் ஜப்பானின் NTT DATA ஆகியவை இந்த நோக்கத்திற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தின்படி, NTT […]

கருவுறுதலுக்கு முன் தந்தைக்கு ஏற்பட்ட கோவிட் ( SARS-CoV-2) தொற்று, அவர்களின் விந்தணுக்களில் (sperm) மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பது ஒரு புதிய விலங்கு ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, அவர்களின் சந்ததிகளின் மூளை வளர்ச்சி மற்றும் நடத்தை மீது தாக்கத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழ்க்கையில் அதிகப்படியான கவலை அபாயத்தை (anxiety risk) உருவாக்கக்கூடும். இந்த கண்டுபிடிப்புகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) இதழில் வெளியிடப்பட்டுள்ளன.. இந்த ஆய்வு முடிவுகள் எதிர்கால தலைமுறைகளில் […]

மத்தியப் பிரதேசத்தில் கலப்பட இருமல் சிரப்பை உட்கொண்ட பல குழந்தைகள் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தியாவில் இதுபோன்ற மூன்று சிரப்களை அடையாளம் கண்டுள்ளது.. மேலும் அவர்களின் நாடுகளில் ஏதேனும் ஒன்று கண்டறியப்பட்டால் சுகாதார நிறுவனத்திடம் புகாரளிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் இறப்புக்குப் பிறகு சமீபத்தில் பெரும் எதிர்ப்பைத் தூண்டிய கோல்ட்ரிஃப் சிரப், WHO எச்சரித்த மூன்று மாசுபட்ட […]

கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இஸ்லாமாபாத்திற்கும் காபூலுக்கும் இடையில் தற்போது எந்தவிதமான உறவும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளை மிகவும் மோசமாக்கியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ஆசிஃப், “தற்போதுள்ள நிலைமை ஒரு இறுக்கமான தேக்கநிலை தான். நேரடிப் பகைமை இல்லை. ஆனால், சூழல் […]

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு காசா போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது “மிகவும் நல்ல நண்பர்” பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டின் போது பேசிய ட்ரம்ப், “இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய மிகச் சிறந்த நண்பர் ஒருவர் தலைமை பதவியில் இருக்கிறார், அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார்” என்று […]

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஒரு பள்ளி ஆசிரியைக்கும் அதே பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ள உறவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான அந்த ஆசிரியை, பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட ஒரு முன்னாள் மாணவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், அந்த […]

உலக அளவில் காலநிலை மாற்றங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதேபோல், பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தான், ஜப்பானில் காய்ச்சல் மற்றும் சளி தொற்றுகள் தேசிய அளவில் ‘தொற்று அபாய எச்சரிக்கையை’ (Epidemic) அறிவிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளன. பொதுவாக, ஒரு நோய் குறிப்பிட்ட பகுதிக்குள் மிக அதிகமாகப் பரவும்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். ஜப்பான் முழுவதும் பல நூறு பள்ளிகள், […]

பாகிஸ்தானில் நடந்த வன்முறை போராட்டங்களின் போது TLP(Tehreek-e-Labbaik Pakistan)) தலைவர் சாதிக் ரிஸ்வி மீது 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மேலும் 250 போராட்டக்காரர்கள் மற்றும் 48 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா அமைதித் திட்டத்திற்கு எதிராக தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) என்ற தீவிரவாதக் கட்சி பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தியதால் பாகிஸ்தான் கடுமையான வன்முறையைச் சந்தித்தது. இந்த மோதல்களின் போது TLP தலைவர் மௌலானா சாதிக் […]

“இந்தியாவும் பாகிஸ்தானும் இனிமையாக இணைந்து வாழப்போகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். எகிப்தில் நடத்தப்பட்ட காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தெற்காசிய உறவுகள் குறித்து நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்தார். அப்போது, “பாகிஸ்தானும் இந்தியாவும் மிகவும் நன்றாக ஒன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து கூறினார். இதற்கு ஷெபாஸ் ஷெரீப் […]