இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே மிகப் பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.. இதனால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களில் கிட்டத்தட்ட 97 சதவீதத்திற்கு விதிக்கப்படும் சுங்க வரிகளை குறைக்கவோ அல்லது முற்றிலும் நீக்கவோ முடியும். இதனால், விவசாயம், கார் உற்பத்தி போன்ற பல துறைகளில் உள்ள பொருட்கள் இந்தியர்களுக்கு எதிர்காலத்தில் மலிவாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய பொருட்களின் […]

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.. இது இரண்டு பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்றும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வு அமெரிக்காவை கலக்கமடையச் செய்ததாகத் தெரிகிறது. […]

சமீபத்தில், ஒரு ஷார்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பனி சூழ்ந்த அண்டார்டிகா பகுதியில், ஒரு சிறிய பென்குயின்தனது கூட்டத்திலிருந்து பிரிந்து தனியாக நடந்து செல்கிறது. கடலை நோக்கிச் சென்றிருக்க வேண்டிய அந்தப் பெங்குயின், அதற்கு நேர் எதிர் திசையில் உள்ள பனிப்பாறைகளை நோக்கி நடந்து சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தக் காட்சி மிகவும் மெதுவாக இருக்கிறது. அதில் எந்த அவசரமும் இல்லை. அந்தப் பென்குயின்திரும்பிப் பார்க்கவில்லை. அது […]

தற்போதைய அளவில் எரிபொருள் (எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு) பயன்பாடு தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலக மக்கள்தொகையில் 50% பேர் கடுமையான வெப்பநிலை சூழலில் வாழ நேரிடும் என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அபாயகரமான அளவிலான வெப்பத்தை எதிர்கொள்ளும் மக்களின் விகிதம் 2010 ஆம் ஆண்டில் இருந்த 23 சதவீதத்திலிருந்து, 2050 ஆம் ஆண்டுக்குள் 41 சதவீதமாக இரட்டிப்பு அளவுக்கு உயரக்கூடும் என்றும் அந்த […]

உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். ஆனால் பல நாடுகளில், ஆண்களை விட பெண்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இந்த பாகுபாடு வளர்ந்த நாடுகளிலும்கூட தொடர்கிறது. இருப்பினும், ஐரோப்பாவில் உள்ள இந்த ஒரு நாட்டில் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் ஐரோப்பாவின் ஒரே நாடு லக்சம்பர்க் ஆகும். இது பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற அனுமதிக்கிறது. சராசரியாக, […]

மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள சலமன்கா நகரில் ஒரு கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.. 12 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு கால்பந்து போட்டி முடிந்த உடனேயே இந்தத் தாக்குதல் நடந்தது. அப்போது, ​​மர்ம நபர் ஒருவர் அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்தவர்களில் ஒருவர் […]

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கை ஒரு பெரும் பனிப்புயல் சூழ்ந்துள்ளது. இது நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 2,000 மைல் பரப்பளவில் கனமழை, உறைபனி, பனி குவிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான குளிரை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 213 மில்லியன் மக்களைப் பாதித்துள்ள இந்தப் புயல் காரணமாக, 8,50,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படுள்ளது.. 14,000-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், தனது நிர்வாக கட்டமைப்பை அதிரடியாக மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் (Streamline), தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் சுமார் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜனவரி 27-ஆம் தேதி முதல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 ஆண்டுகால அமேசான் வரலாற்றில் இல்லாத வகையில், சுமார் 30,000 […]

அமெரிக்காவின் பெரும் பகுதியை உறைபனியில் ஆழ்த்தியுள்ள ஒரு சக்திவாய்ந்த பனிப்புயல், அந்நாட்டின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் தொடங்கி நியூ இங்கிலாந்து வரை நீளும் இந்தப் புயலின் கோரப்பிடியில் சுமார் 14 கோடி மக்கள் சிக்கியுள்ளனர். இது சாதாரணப் பனிப்பொழிவு அல்ல, பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒரு வானிலை மாற்றமாகும். பனியின் தாக்கத்தால் மின்சாரக் கட்டமைப்பு நிலைகுலைந்து போனதால், […]

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.. 82 பேரைக் காணவில்லை என்று இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு பண்டுங் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, இன்று எங்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை உகந்த […]