எப்போதுமே ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் தான் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறை கொண்ட விஷயங்களை போகிற போக்கில் தனது வசனத்தாலும், உடல்மொழியாலும் விதைத்து செல்லும் வித்தைக்காரர். ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தாகவும், மருந்தாகவும் எப்போதுமே தனது பங்களிப்பை செய்து வருகிறார் கவுண்டமணி. இவர், நடிகர்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர்.
இதற்கிடையே, பல படங்களில் கவுண்டமணியின் வசனம் காமெடியை தாண்டி இரட்டை அர்த்தங்களுடன் சேர்ந்து தான் இருக்கும். உருவ கேலி செய்வது, மட்டம் தட்டும் விதமாக பேசும் வசனங்கள் அனைத்தும் கவுண்டமனிக்கு கை வந்த கலை. இவரின், காமெடியை ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இவர், பெரும்பாலும் சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்களுடன் தான் அதிகம் நடித்துள்ளார். கவுண்டமணியின் காமெடிக்கு ரஜினி, பிரபு கூட தன்னை மறந்து சிரித்து விடுவார்களாம்.
இந்நிலையில், கவுண்டமணி காமெடியானாக பீக்-ல் இருந்த போது நடித்த படம் தான் மேட்டுக்குடி. இந்தப் படத்தில் நக்மாவை தன்னுடன் நடனமாட வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாராம் கவுண்டமணி. இதற்காகவே ஒரு பாடலில் சில நிமிடம் நக்மாவுடன் இவர் கனவில் ஆடுவது போல் காட்சிகளை வைத்தாராம் இயக்குனர். கவுண்டமணி நினைத்ததை சாதித்து விட்டார் என அப்போதே ஷூட்டிங் ஸ்பாட்டில் கமெண்ட்கள் பறந்ததாம்.