சற்றேற குறைய 9️ ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட திரைத்துறையின் இரு ஜாம்பவான்கள் நடித்த 2 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் சென்ற 11ஆம் தேதி வெளியானது.தமிழகம் முழுவதும் திருவிழாவை போல திரையரங்குகள் காட்சியளித்தனர். ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி தீர்த்து விட்டனர்.
இந்த நிலையில், வாரிசு திரைப்படம் தமிழகத்தில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழகத்தில் கிடைத்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் ஏற்கனவே வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்திப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, அமெரிக்காவிலும் இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய அடி வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் தற்சமயம் கல் நாடுகளில் இதுவரையில் வாரிசு திரைப்படம் 12.5 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்திருக்கிறது ஆனாலும் இதுவரையில் லாபத்தை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக நிச்சயமாக வாரிசு திரைப்படம் நாடுகளிலும் தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. வசூலில் மாபெரும் சாதனையை படைக்கும் விஜய் திரைப்படத்திற்கே இந்த நிலையா? என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.