தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

  • ” குண்டு வீசாதீங்க..” இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்.. காதில் போட்டுக் கொள்ளாத நெதன்யாகு.. என்ன தான் நடக்குது?

    ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய மீறல். உங்கள் விமானிகளை இப்போதே வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!” என்று பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதையடுத்து தனது மற்றொரு பதிவில், “இஸ்ரேல் ஈரானை தாக்கப் போவதில்லை. அனைத்து விமானங்களும் திரும்பி வீட்டிற்குச் செல்லும், அதே நேரத்தில் ஈரானுக்கு நட்புரீதியான விமானங்கள் பறக்கும். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது, போர்நிறுத்தம் அமலில் உள்ளது! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!” என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    இஸ்ரேல் – ஈரான் போர்

    ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது.

    இந்த சூழலில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இன்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.. இதனால் 12 நாட்களுக்கு பின் மோதல் முடிவுக்கு வந்தது.. ஆனால் சிறிது நேரத்திலேயே போர் ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. மேலும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேலின் இந்த கூற்றை ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் போர் நிறுத்தம் ஏற்படவில்லை.. மோதல் நீடித்து வருகிறது.

    டொனால்ட் ட்ரம்ப்மத்தியஸ்தம் செய்து இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களிலேயே ஈரான் அப்பட்டமாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பலமாக பதிலடி கொடுப்பதாக அறிவித்தது.

    இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் “ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்கு தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகளுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்துவதன் மூலம் பலமாக பதிலளிக்க இஸ்ரேலிய இராணுவத்தை நான் அறிவுறுத்தினேன்” என்று கூறினார்.

    ஈரான் எந்த புதிய ஏவுகணை தாக்குதலையும் நடத்தவில்லை என்று மறுத்த போதிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்தம் தொடங்கப்பட்டதிலிருந்து இஸ்ரேலை நோக்கி எந்த ஏவுகணைகளும் ஏவப்படவில்லை என்று இராணுவ அதிகாரிகள் கூறியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    உள்ளூர் நேரப்படி மாலை 7 மணி வரை “சோதனை போர் நிறுத்தம்” கடைபிடிக்கப்பட்டதாகவும், ஈரானின் பதிலை அளவிட இஸ்ரேல் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்ததாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்திருந்தால், இஸ்ரேல் நீண்ட போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

பட்டியலின மக்களின் சமூக உரிமை போன்ற விவகாரங்களில் திமுக அரசு கபட நாடகம் ஆடுவதாக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ திமுக அரசை சமூகநீதி அரசு என ‘மூச்சுக்கு மூச்சு’ விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பர மாடல் தி.மு.க அரசு, உண்மையில், ‘சமுக அநீதி’ அரசாகவே செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக, பட்டியலின […]

ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய […]

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள புனித திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த பொதுநல மனுக்கள் வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். நீதிபதி நிஷா பானு மனுக்களில் எதிலும் தலையீடு தேவை இல்லை என கூறி அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கிறார். […]

நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த 22-ம் தேதி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள், நடிகர்கள், தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.. அந்த வகையில் சக நடிகையும், விஜய்யின் தோழியுமான த்ரிஷா கிருஷ்ணன் விஜய் உடன் இருக்கும் க்யூட்டான அன்சீன் போட்டோவை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த போட்டோவில், த்ரிஷாவின் வளர்ப்பு நாயான இஸியை, விஜய் தூக்கிப் பிடித்துள்ளார்.. விஜய்யை பார்த்து […]

கிரிக்கெட்டர் ரிங்கு சிங் – சமாஜ்வாடி எம்.பி ப்ரியா சரோஜா இருவருக்கும் நவம்பர் 19ல் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங் (வயது 27). இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி […]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இன்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.. இதனால் 12 நாட்களுக்கு பின் மோதல் முடிவுக்கு வந்தது.. ஆனால் சிறிது நேரத்திலேயே போர் ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. மேலும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேலின் இந்த கூற்றை ஈரான் மறுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் மோசமடைந்து வருகிறது. இந்த […]

ஜூன் 22 அன்று, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரின் போது, ​​அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான நிடாஞ்ச், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவை B-2 குண்டுவீச்சு விமானங்களால் தாக்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள அமெரிக்க தளத்தை ஈரான் ஏவுகணைகளால் குறிவைத்தது. இருப்பினும், ஈரானிய ஏவுகணைகளால் அமெரிக்க தளம் அதிக சேதத்தை சந்திக்கவில்லை. ஆனால் மீண்டும் ஒருமுறை இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதம் […]

போதை பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீ காந்த் ஒரு கிராம் ரூ.12,000 என்ற விலையில் மொத்தம் ரூ.4 லட்சம் வரை பணப்பரிமாற்றம் […]

நடிகர் அஜித்தின் புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்.. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் படத்தின் அறிவிப்பு வெளியானாலே அதனை அவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.. நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார், பைக் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.. இந்த […]

மத்திய அரசில் உள்ள லோவர் டிவிசன் கிளார்க்/ஜூனியர் செயலக உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஆகிய பதவிகளில் தேசிய அளவில் 3,131 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறையின் கீழ் உள்ள டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு 12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் கணிதம் பாடம் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]