மெட்டா இந்தியாவின் துணைத்தலைவராக மெட்டா நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா தேவநாதனை நியமித்துள்ளது.
இது தொடர்பாக ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மெட்டாவின் நீண்ட கால வளர்ச்சிக்கும் இந்தியாவிற்கான அர்ப்பணிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சந்தியா தேவநாதன், நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாய் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்ப்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் தலைவராக இருந்த அஜித் மோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு போட்டி நிறுவனமான ஸ்னாப் இங்க் என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் இதைத் தொடர்ந்து சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/meta.jpg)
வாட்ஸ்ஆப்பின் இந்தியத் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்தியாவில் உள்ள மெட்டா பிளாட்பார்ம்ஸின் பொதுக் கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர். சந்தியா தேவநாதன் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தனது பதவிக்கு மாறுவார். சந்தியாவின் நியமனம் பற்றி மெட்டா தலைமை வணிக அதிகாரி மார்னே லெவின் கூறுகையில், டிஜிட்டல் முன்னேற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும் மெட்டா நிறுவனம் ரீல்ஸ் மற்றும் பிசினஸ் மெசேஜிங் போன்ற பல சிறந்த தயாரிப்புகளை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் எங்கள் முதல் ஷாப்பிங் அனுபவமான வாட்ஸ்அப்பில் ஜியோமார்ட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தியாவின் புதிய தலைவராக சந்தியாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.வங்கி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் 22 வருட அனுபவம் கொண்ட சந்தியா தேவநாதன் 2016 முதல் மெட்டாவில்