ஜப்பானில் நேற்று 16 வெவ்வேறு இடங்களைத் தாக்கிய சுனாமி அலைகள், நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தியது. ஜப்பானை மட்டுமல்ல, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஹவாயையும் அலைகள் அடைந்தன, ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் , தீர்க்க தரிசனங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வந்தது. கோவிட் காலத்திற்கு பின்னர் அதிக மக்களால் கணிப்புகள் நம்பப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் கணிப்புகளில் குறிப்பிடப்பட்ட […]

வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் உரிமம் தொடர்பான தற்போதைய சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ல் 85,649-ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை, பழனிசாமி ஆட்சியில் 2020-21ல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல, 2011-12ல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் பழனிசாமி ஆட்சியில் ரூ.12.90 […]

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம். […]

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்களைக் கொன்ற மூன்று பயங்கரவாதிகள், ஆபரேஷன் மகாதேவ் திட்டத்தின் கீழ் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலில் அவர்களின் தொடர்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட வலுவான, வெற்றிகரமான மற்றும் தீர்க்கமான ஆபரேஷன் சிந்தூர் குறித்த மாநிலங்களவையில் சிறப்பு விவாதத்தில் ஷா இவ்வாறு கூறினார். இதனுடன், […]

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அதில் திருத்தம் மேற்கொள்ளலாம் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (என்எஸ்எஸ்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு அனைத்து வகை பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரியர்கள் ‘எமிஸ்’ இணையதளம் வாயிலாக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி […]

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எல்லையோர மாவட்டமான பூஞ்சில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோரை இழந்த 30 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல்காந்தி, அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் எல்லையைத் தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் […]

மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்ட மருத்துவமனையில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு நகராட்சி குப்பை வாகனத்தில் சடலம் கொண்டு செல்லப்படுவதை அதில் பார்க்க முடிகிறது.. குத்லா காவல் நிலையப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு அடையாளம் காணப்படாத இந்த உடல், தகனத்திற்காக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. முறையான சவ வாகனம் அல்லது ஆம்புலன்ஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இரும்பு கம்பியால் இழுத்துச் செல்லப்பட்டு குப்பை வண்டியில் ஏற்றப்பட்டது. […]