விழுப்புரத்தில் விவாகரத்தான மனைவி மீது முன்னாள் கணவர் பட்டப்பகலில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீச்சில் பெண் மற்றும் சாலையில் சென்ற முதியவர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடிய முன்னாள் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் – அன்புராணி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட […]
எங்களது கோரிக்கைகளை டிரம்ப் ஏற்கவில்லை என்றால் 2029 வரை ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, முக்கிய கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை (ஜனவரி 20, 2029) அமெரிக்க நிர்வாகத்துடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து […]
அரசு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செல்லும் ஏழை, எளிய மக்களுக்கு, சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் எதிர்பாராத உடல்நலப் பிரச்னைகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், கோவையில் ரத்தம் ஏற்றப்பட்ட பின்னர் தனது மகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகக் கூறி, பல ஆண்டுகளாக போராடி வரும் தந்தை ஒருவர் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் காடாம்பாடியைச் சேர்ந்த தந்தை […]
குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த 28 வயது பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான கணவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி வெற்றிச்செல்வி, 28. இந்த தம்பதிக்கு 10 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தி, மக்களுக்கு எளிதில் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில், அம்மாநில அரசு ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ என்ற புதிய வசதியை ராய்ப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதைப் போல, ரேஷன் அட்டைதாரர்கள் இனி மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையின்றி, 24 மணி நேரமும் தங்களுக்குத் தேவையான தானியங்களை இச்சேவை மூலம் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். சுமார் 2,500 கிலோ […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்திற்கு (FCRA) எதிராகவும் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முக்கியத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவற்றுடன் சேர்த்து, நடப்பு கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்களான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களும் இன்றைய பேரவைக் கூட்டத்தில் நடைபெறுகின்றன. மருத்துவக் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியான […]
தமிழ்நாட்டைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் உன்னத நோக்கில், “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” (Drugs Free Tamil Nadu – Mass Pledge) எனும் மாநிலம் தழுவிய மாபெரும் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் நடைபெறும் இந்த சிறப்பு வாய்ந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் […]
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் 58 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரியின் வாழ்த்துப்பாடல் முதலாவதாக பாடப்பட்டது அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதாவது, நேற்றைய தினத்தில் பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தனி தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். இந்த […]
தினமும் பயன்படுத்தும் தலையணை உறையை பலரும் கவனமாக சுத்தம் செய்வதில்லை. ஒருமுறை போட்டு விட்டால் பல நாட்கள் அல்லது வாரங்கள் வரை மாற்றாமல் பயன்படுத்தும் பழக்கமும் உள்ளது. ஆனால் தூங்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, எண்ணெய், இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்கு ஆகியவை தலையணை உறையில் படிந்து சேரலாம். குறிப்பாக முகம் மற்றும் தலைமுடியுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால், தலையணை உறை சுத்தமாக இருப்பது முக்கியம். […]
குழந்தைகளின் வளர்ச்சியில் படிப்பு, தூக்கம் மற்றும் சத்தான உணவு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தினசரி உடல் இயக்கமும் முக்கியமானது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன், டிவி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால், வெளியில் விளையாடும் நேரம் குறைந்து வருகிறது. குழந்தைகள் தினமும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர். பொதுவாக, 5 முதல் […]

