தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு புதிய வேகம் கொடுக்கும் நோக்கில், மாநில அரசு ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு நாளை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார். இதில் நாட்டின் முன்னணித் தொழில் அதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். மாநிலத்தில் தொழிற்கட்டமைப்பை […]

தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்த்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் தூத்துக்குடி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கம். இந்த […]

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ராம்நாத் கோவிந்த வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவம் பற்றி கூறினார். ராம்நாத் கோவிந்த் இப்போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அது பற்றி சுயசரிதையிலும் எழுதி இருக்கிறார். கோவிந்த் சிறுவனாக இருந்தபோது, ஒரு கோடை காலத்தில் அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவரது தாயார் தமது உயிரை பற்றிக்கூட […]

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை டெல்லியில் பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம், இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறும் எனக்கூறினார். இளைய தலைமுறையினர் இந்த புத்தகத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இது ரீல்ஸ் காலம். சோஷியல் மீடியா பிரபலங்கள் இளைஞர்களை வேறு திசையில் ஈர்க்ககூடும். குறுக்கு வழியில் செல்ல நினைப்பவர்கள், ரயில் நிலையங்களில் […]

வங்கி துறையில் அரசு வேலைக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஜூனியர் அசோசியேட் (Customer Support and Sales) பணியிடங்களுக்கு பெரிய அளவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,766 பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் 7,680 வழக்கமான பணியிடங்களும், 2,086 பின்னடைவு பணியிடங்களும் அடங்குகின்றன. இதற்கான ஆன்லைன் […]

சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் சிறுநீர் அதிகம் செறிவடைவது முக்கியமான ஆபத்து காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உடலில் சேரும் சில தாதுக்கள் சிறுநீரில் அதிக அளவில் குவியும்போது, அவை படிப்படியாக படிகங்களாக மாறி கற்களாக உருவாகலாம். இதனால், அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலில் நீர்ச்சத்து […]

திருமண வாழ்க்கையில் ஒருவர் வேறு ஒரு நபருடன் உறவு வைத்திருப்பது என்பது திடீரென நிகழும் ஒரு சம்பவமாக மட்டுமே பார்க்க முடியாது. பல நேரங்களில், அதற்கு முன்பே உறவில் உருவாகும் உணர்வுப்பூர்வமான இடைவெளி, தனிமை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாத நிலை உள்ளிட்ட பல காரணிகள் பின்னணியில் இருக்கலாம். குறிப்பாக, குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆண்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போவது குறித்தும் இந்த விவாதம் கவனம் […]

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரத் தம்பதியான சூர்யா – ஜோதிகா, தங்களது திருமண வாழ்க்கை மற்றும் ஒருவருக்கொருவர் வழங்கும் ஆதரவு குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளனர். குறிப்பாக, சூர்யாவை ‘கிரீன் ஃபிளாக்’ கணவர் என ஜோதிகா பாராட்டியதுடன், இருவரும் வீட்டில் சமமானவர்கள் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆரோக்கியமான உறவில் சமத்துவம் ஏன் முக்கியம் என்பது குறித்து உறவு நிபுணர் விளக்கியுள்ளார். […]

சமூக வலைத்தளங்களில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல வோல்கர் ஜோடியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கணவர் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகள் இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவைச் சேர்ந்த அகில் மற்றும் மேகா, சமூக வலைத்தளங்களில் பிரபலமான தம்பதியாக இருந்து வந்துள்ளனர். அகில் இந்திய கடற்படையில் பணியாற்றிய […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2 பிரிவில் 41 இடங்களும், குரூப்-2A பிரிவில் 780 இடங்களும் அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். முதல்நிலைத் […]