ரிஷி சுனக் பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்தவரா இந்திய வம்சா வழியை சேர்ந்தவரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரிஷியின் தந்தை வழி தாத்தா பாகிஸ்தானின் குஷ்ரன்வாலா பகுதியை சேர்ந்தவர் அவரது தந்தை வழி பாட்டி டெல்லியை சேர்ந்தவர். இந்த தம்பதி 1937ல் கென்யாவுக்கு சென்றனர். அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் ரிஷியின் தந்தை யஷ்விர். இவர் தான்சானியாவை சேர்ந்த இந்தியாவை சேர்ந்த உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டதன் […]

விஜய்டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளியில் பங்கேற்ற தீபா சங்கரின் பழைய புகைப்படம் அட நம்ம குக் வித் கோளி தீபாவா இது என கேட்கும் அளவிற்கு உள்ளார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீபா பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். அவர் தனது பழைய புகைப்படத்தை வெளியிட்டதில் இருந்து எப்படி இருந்த தீபா இப்படி மாறிட்டாங்க என அனைவரும் கேட்டு வருகின்றனர்.குக்வித் […]

மும்பை கோரேகாவ் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இந்த வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன.இந்த சிறுத்தைகளோடு மக்கள் காடுகளில் வீடு கட்டி வசிக்கின்றனர். இதனால் அடிக்கடி சிறுத்தைகள் மனிதர்கள் நடமாடும் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. அடிக்கடி மனிதர்களை சிறுத்தைகள் தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருக்கிறது. கோரேகாவ் ஆரே காலனியில் வசிப்பவர் அகிலேஷ்.இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் இருந்தார். […]

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. கோவை கோட்டை மேட்டு பகுதியில் கடந்த 23ம் தேதி அதிகாலை கார் ஒன்று சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சசமையல் எரிவாயு வெடித்ததாக கூறப்பட்டிருந்த நிலையில் வெடி பொருட்கள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.இதையடுத்து […]

ஒரு தலையாக இளம்பெண்ணை காதலித்துவந்த நிலையில் தனது காதலை வெளிப்படுத்தியபோது ஏற்றுக் கொள்ள மறுத்ததால் இளம்பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் வசித்து வந்தவர் வினோத் -பிந்து தம்பதி . இவர்கள் இருவருக்கும் விஷ்ணுபிரியா என்ற மகள் உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் இளம்பெண் விஷ்ணு பிரியாவும் அதே […]

இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வெடி வெடிக்க கூடாது என விதிமுறை விதிக்கப்பட்டிருந்தும் விதிகளை மீறினால் கூட மன்னித்துவிடலாம். இப்படிஅட்டூழியம் செய்த மும்பையன்ஸை போலீசார் மன்னிக்கமாட்டார்கள். நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது . இதை ஒட்டி பட்டாசு, வாண வேடிக்கைகள் என மக்கள் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மும்பை அருகே தானேவில் ஒருவர் பட்டாசு வெடித்தது அனைவருக்கும் இடையூறை ஏற்படுத்தியது.அடுக்குமாடி கட்டிடத்தின் ஜன்னல்கள் , பால்கனி […]

பதவியில் நீடிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமைக்கான காரணத்தைக் காட்டுமாறு 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார். கேரள உயர் நீதிமன்றம், வேந்தர் என்ற முறையில் ஆளுநர் இறுதி முடிவு எடுக்கும் வரை, மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை பதவியில் தொடர அனுமதி அளித்துள்ளது.பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, கேரளத்தில் […]

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கும் மருமகன் ரிஷி சுனக்கினை வாழ்த்தி இருக்கிறார் மாமனாரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி. இங்கிலாந்தின் பிரதமராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் 57 வது பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் 42வயது நிரம்பிய நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.ரிஷி சுனக்கிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நெருக்கம் ஏராளம். பெற்றோர் இருவருமே இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் வழி […]

தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சி, நகராட்சி , மாநகராட்சி உள்ளிட் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக 2,760 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிஅரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.துகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், […]

நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் விவகாரத்தில் விதிகளை மீறியதாக கூறப்பட்ட புகாரில் தற்போது விதிகளை மீறியது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மருத்துவமனை நிர்வாகத்திடம் உரிய விளக்கம் கேட்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகின்றது. இந்து விளக்கம் திருப்திகரமாக இல்லை எனும் போது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நயன்-விக்கி […]