தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான உணவளிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1-ம் தேதி நிலவரப்படி, 227 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மத்திய அரசின் தொகுப்பில் கையிருப்பில் உள்ளது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இந்த உணவு தானியங்களின் கையிருப்பு குறித்து […]
பண்டிகை நேரத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, மனநலனில் கவனம் செலுத்தும்படி வீவொர்க் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வீவொர்க் (WeWork) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. இந்த 10 நாள் விடுமுறைகளில் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம் எனவும், மனநலனை மேம்படுத்துவதற்கு ஏற்ற செயல்களில் ஈடுபடலாம் எனவும் வீவொர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி […]
விரைவில் பேன்சி எண்களுக்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர இருக்கிறது. நாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு சார்பில் பதிவு எண் வழங்கப்படுகிறது. இந்த எண்களை கொண்டுதான் வாகனங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது. இதனால், வாகனத்தின் உரிமையாளர் யார்?, எந்த ஊர் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனம் பதிவு செய்யப்பட்டது? எந்த ஆண்டு வாகனம் வாங்கப்பட்டது?, என்ஜின் எண், […]
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 6000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். காலிப் பணியிடங்கள்: கோயம்புத்தூர் – 233 விழுப்புரம் – 244 விருதுநகர் – 164 புதுக்கோட்டை – 135 நாமக்கல் – 200 செங்கல்பட்டு – 178 ஈரோடு – […]
வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக […]
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் SSC CGL 2022 தேர்விற்கான காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பத்திற்கான கடைசி நாள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதற்கான இலவச பயிற்சி […]
தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், […]
நல்ல சத்தானா ஆகாரங்களை உட்கொள்வதாலே ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகின்றது. உலகில் , குறிப்பாக இந்தியாவில் , அதுவும் தமிழ்நாட்டில் ஆண் குழந்தைக்கு ஆசைப்படாதவர்கள் யார்தான் உள்ளார்கள் ? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று! கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் […]
எஸ்பிஐ ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை 20 % வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் அக்டோபர் 15, 2022 முதல் அமலுக்கு வந்ததாக இணையதளம் தெரிவித்துள்ளது. நிலையான வைப்புத்தொகைக்கான அனைத்து காலகட்டங்களுக்கான வட்டி விகிதங்களை வங்கி உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் 3% முதல் 5.85% வரை வட்டி விகிதங்களைப் […]
தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு குறைக்க ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தி, கட்டண நிர்ணய குழு ஆணை பிறப்பித்திருக்கிறது. தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ.29.40 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அநீதியானது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 […]