தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதை தடுக்க காவல்துறை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகரில் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று மொத்தமாக 60 கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸ் அக்கா என்ற புதிய திட்டத்தை கோவை மாநகர காவல் துறையினர் துவங்கியுள்ளனர். இதன்படி மாநகரில் […]
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மருத்துவ படிப்பை தமிழ் மொழியில் வழங்க இருப்பதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாட்டில் கல்வியை மாணவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் கற்கும்போது தான் அதன் முழு சாரம்சத்தையும் புரிந்து சிந்திக்க முடியும் என்று பல அறிஞர்களும் கூறுகின்றனர். அதனால், பல மாநிலங்களில் கல்வி வாரியங்களும் தங்களின் மாணவர்களுக்கு தாய்மொழிவைக் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதன் […]
மயிலாடுதுறையில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவரிடம் என்ன சாதி என கேட்டு தொழிலாளி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் செம்பனார் கோவில் அருகே வல்லம் என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கின்றார் 14 வயது சிறுவனான இவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று […]
கிரெடிட் கார்டுகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்காக கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டு என்பது கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் விருப்பம் போல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். அதேசமயம், கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை வங்கியில் தக்க சமயத்தில் செலுத்த வேண்டும். இல்லையென்றால், அபராதம் விதிக்கப்படும். […]
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெற்று வந்த உதவி கலெக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். பிரபல காமெடி நடிகரின் மகனுக்கும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றாராம். திருப்பூர் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரி நாதன் இடம்மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பவர் பணி நியமனம் ஆகியுள்ளார். இதை அடுத்து […]
பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலின் உரிமையாளர்கள் வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை துன்புறுத்தும் வகையிலும் பிராங்க் வீடியோக்களை (Prank Video) எடுத்து சிலர் யூடியூப் சேனல்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் எனவும் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்து வரும் நிலையில் 27 பேரை கட்டி வைத்து சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு தலிபான் அமைப்பு ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியது அறிந்த ஒன்று . ஆனால் தலிபானுக்கு எதிராக ஆப்கனில் சில கிளர்ச்சபடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கிளர்ச்சி படைகளை ஒடுக்குவதில் தலிபான்கள் தீவிரம் காட்டுகின்றனர். அந்த வகையில் […]
ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக 4ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது ரத்தத்தை விற்க முயன்ற சம்பவம் மேற்குவங்கத்தில் அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் தாபானைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு சிறுமி ஒருவர், தனது கிராமத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலூர்காட் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமி அங்கு உள்ள ரத்த வங்கிக்கு சென்று ரத்தம் விற்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதை கேட்டு ரத்த வங்கியில் இருந்த […]
சென்னை வியாசர்பாடியில் சென்ட்ரல் அவென்யூ சாலையில் 58 வயதான மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதில் மணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். மருதுபாண்டிக்கு அமிர்தம் என்ற சகோதரி இருக்கிறார். இந்த சகோதரி இளையான்குடி பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மணிகண்டனும் அமீர்தத்தின் மகள் ஷாலினியும் காதலித்தனர். ஆனால் இந்த காதல் சகோதரி அமிர்தத்திற்கு பிடிக்கவில்லை. எனவே அவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் மருதுபாண்டி தனது மகன் மற்றும் […]
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை..!! ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் […]