பல ஆண்டுகளாக ஆக்ஷன், எமோஷன், கமர்ஷியல் என பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தனது திரைப்பயணத்தில் சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறார். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வழக்கமான சூர்யா படங்களில் இருந்து மாறுபட்ட குடும்பம், காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி […]
டெல்லியில் 55 வயது நபர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவியே கொலைக்கு திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கணவரை கொலை செய்ய தனது காதலனுக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக அவர் பேரம் பேசியதும், கொலைக்குப் பிறகு வீட்டில் திருட்டு நடந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாலால் (55). ரியல் எஸ்டேட் புரோக்கராக பணியாற்றி வந்த இவர், […]
கடந்த ஆண்டு கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பான முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்டிவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று […]
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு ரீதியாக தற்போது 78 மாவட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. முன்னதாக, தேர்தலுக்கு முன்பாகவே அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அப்போது 6 மாவட்டங்கள் மட்டுமே புதிதாகப் பிரிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன. இதனிடையே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட தோல்வி குறித்து […]
சுதந்திர தின விழாவையொட்டி போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரை அமைந்துள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகியவற்றில் உரிய வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே, வாகனங்களில் செல்லமுடியும். உரிய அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் செல்ல தடை […]
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் NALSAR (National Academy of Legal Studies and Research) எனப்படும் தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில், BCI (Bar Council of India) தலையிட்டதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மாணவர்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டம் நடத்தவும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. NALSAR என்றால் என்ன? NALSAR என்பது ஹைதராபாத்தில் […]
பாக்கெட் உணவுப் பொருட்களில் அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட கொழுப்பு இருந்தால், அதுகுறித்த எச்சரிக்கை தகவலை பேக்கெட்டின் முன்பக்கத்தில் குறிப்பிடுவது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI-க்கு உச்சநீதிமன்றம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பாக்கெட் உணவுகளில் உள்ள சர்க்கரை, […]
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக, தலைமைச் செயலக வளாகத்தில் தற்போது செயல்பட்டு வரும் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அலுவலகங்களை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முதற்கட்டமாக, நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை அலுவலக பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்க அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக சுமார் ரூ.5 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய […]
கன்னியாகுமரி மாவட்டத்தில், பள்ளிச் சீருடையில் இருந்த இரு மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை உடனடியாக தலையிட்டு தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீருடை அணிந்த நிலையில் மாணவிகள் மது அருந்தும் காட்சிகள் […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்பட்டது. இந்நிலையில், நாளை நடக்க உள்ள சுதந்திர […]

