மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் இருந்த பை காணாமல் போனதாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, எதிர்பாராத திருப்பமாக நாய் ஒன்று அந்த பையை தூக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் பையை மருத்துவமனை வளாகத்திலேயே கண்டுபிடித்து, அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை பத்திரமாக மீட்டுள்ளனர். மந்த்சோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் […]

ஹைதி நாட்டின் தலைநகருக்கு அருகில் உள்ள கென்ஸ்காஃப் கிராமத்தின் மீது ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஹைதியில் நடந்த மிகப்பெரிய பெருந்திரள் கடத்தல்களில் இதுவும் ஒன்றாகும் என்று அஞ்சப்படுகிறது. தேவாலயம் ஒன்றில் பாதுகாப்புத் தேடித் தஞ்சம் புகுந்த 22 பேர் உட்பட குறைந்தது 47 பேர் […]

நடிகை கவுதமி தொடர்புடைய நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தொழிலதிபர் அழகப்பன், நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கடந்த ஜூன் மாதம் அழகப்பனுடன் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். […]

பிறப்புச் சான்றிதழ் முதல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் வரை பல்வேறு அரசு சேவைகளுக்காக அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு புதிய டிஜிட்டல் முயற்சியை மேற்கொள்ள உள்ளது. பொதுமக்கள் தங்களது கைபேசியிலேயே சுமார் 500 அரசு சேவைகளைப் பெறும் வகையில் ‘வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி’ உருவாக்கப்பட உள்ளது. இந்த புதிய செயலி ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரே தளத்தின் மூலம் பல்வேறு துறைகளின் […]

கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. வழக்கு அவசரமாக எடுத்துக்கொள்ளப்படாது என்றும், வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வழக்கமான விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்டாலின் […]

டெபிட் கார்டை வீட்டில் மறந்து சென்றுவிட்டாலும் இனி கவலைப்பட வேண்டியதில்லை. UPI வசதி கொண்ட ஏடிஎம்கள் மூலம், கையில் டெபிட் கார்டு இல்லாமலேயே வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும். இதற்காக Google Pay, PhonePe, Paytm உள்ளிட்ட பிரபலமான UPI செயலிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் உள்ள பல வங்கி ஏடிஎம்களில் தற்போது படிப்படியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. UPI மூலம் […]

திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் விபரீதமாக முடிந்துள்ளது. 32 வயது பெயிண்டரை காரில் மோதி கீழே தள்ளிய மர்ம கும்பல், பின்னர் ஆயுதங்களுடன் விரட்டி சென்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கல் அருகே உள்ள சிற்றத்தூரைச் சேர்ந்த மாரி என்ற ரூபன் (32), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் மீது ஏற்கனவே சில குற்ற […]

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள இந்திய வணிக சமூகத்தினரிடையே உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக விளங்குவதாகவும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது நிகரற்ற வாய்ப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் பாரிய அளவு, நிலையான வளர்ச்சி, இளைய சமுதாயம், அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மூலதனச் சந்தைகள் ஆகியவை கனடிய முதலீட்டாளர்களுக்கு எளிதில் கிடைக்காத […]

அமெரிக்காவில் விசா விதிகள் கடுமையாக்கப்பட்டதன் எதிரொலியாக, நடப்பாண்டில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ‘காமன் ஆப்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காமன் ஆப்’ என்பது அமெரிக்கா மற்றும் பிற 18 நாடுகளில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும். கடந்த 2024-2025 கல்வி ஆண்டைக் காட்டிலும், 2025-2026 கல்வி ஆண்டில் அமெரிக்காவில் சேர விரும்பும் […]

அரியானா மாநிலம் பரீதாபாத்தில் கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். பரீதாபாத்தில் 42 வயதுடைய சியாம்வீர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது மனைவிக்கும் காமத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு குறித்து சியாம்வீருக்கு தெரியவந்ததால், மனைவியுடன் அவர் அடிக்கடி தகராறில் […]