பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் உடலில் மட்டுமின்றி, மனநிலையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் சிலருக்கு இந்த மாற்றங்கள் தீவிரமான மனநலப் பிரச்சினைகளாக மாறக்கூடும். இதுபோன்ற சூழலில், “குழந்தை பிறந்ததால் ஏற்படும் வழக்கமான மன அழுத்தம்” என்று அலட்சியப்படுத்தாமல், அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து உரிய மருத்துவ உதவியைப் பெறுவது அவசியம். 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த லிண்ட்சே கிளான்சி வழக்கு, பிரசவத்துக்குப் பிந்தைய […]

தரமானது, இயற்கையானது, ரசாயனங்கள் இல்லாதது என பல்வேறு விளம்பரங்களுடன் சந்தையில் ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உணவுப் பொருட்கள் மட்டுமின்றி பற்பசை, சோப்பு, ஷாம்பு, சமையல் எண்ணெய், தேன், மசாலா பொருட்கள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுப் பொருட்களிலும் தரம் மற்றும் கலப்படம் தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. பொருளின் அட்டையில் இடம்பெறும் “இயற்கையானது”, “ஆர்கானிக்”, “100 சதவீதம் தூய்மையானது” போன்ற வார்த்தைகள் நுகர்வோரின் கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன. ஆனால், […]

மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தடுத்தல் மற்றும் பூச்சிக்கொல்லியின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்துகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நெல், பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியான கார்போசல்ஃபான் (Carbosulfan) மீது மத்திய அரசு முழுமையான தடையைப் பரிந்துரைத்துள்ளது. இதன் நச்சுத்தன்மை மற்றும் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகள் குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை […]

ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசிலுக்கு எதிரான பெரிதும் எதிர்பார்க்கப்படும் மோதலுக்கு முன்பு, இந்திய ஆண்கள் கால்பந்து அணி மற்றொரு முக்கியமான சர்வதேச போட்டியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. பிஃபா சர்வதேச போட்டியின் போது செப்டம்பர் 26 அன்று பனாமா அணியை இந்தியா சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பனாமா அணிக்கு எதிரான போட்டியின் மைதானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, மேலும் அது […]

வர்த்தகப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், எஃகு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா அரசுபதிலடி வரிகளை விதித்துள்ளது. இந்த வர்த்தக மோதலில் கனடா தனது இலக்காக 700-க்கும் மேற்பட்ட அமெரிக்க தயாரிப்புகளைக் குறிவைத்துள்ளது. இந்த வரி விதிப்புப் பட்டியல் தொழில்துறைப் பொருட்களைத் தாண்டி, கடல் உணவுகள், சீஸ், ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் டாய்லெட் பேப்பர் போன்ற […]

குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி மருந்துகள் குறித்து பெற்றோரிடையே உள்ள முக்கிய கவலையைத் தீர்க்கும் வகையில், இந்தியாவில் புதிய மருந்து பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், குளோர்பெனிரமைன் மாலெட்டும் (chlorpheniramine maleate) பெனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடும் (phenylephrine hydrochloride) கலந்த கலவை மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த மருந்துக் கலவையை இந்த வயதுப் பிரிவினருக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற […]

தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் உரிமைப் போராட்ட கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. […]

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பயன்பாடு குறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தது. பரந்தூர் திட்டத்திற்காக ஏறத்தாழ 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ள சூழலில், அந்த நிலங்களை அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். […]

ஒரு மனிதன் கடினமாக உழைத்துச் சம்பாதிக்கும் பணம் நிலைத்து நிற்கவும், தடைபட்ட பணவரவு தடையின்றி கிடைக்கவும், கைவிட்டுப்போன கடன் தொகைகள் திரும்ப வரவும் மகாலட்சுமியின் அருளோடு குரு மற்றும் சுக்கிர பகவான்களின் ஆசியும் மிகவும் அவசியமாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, பெருஞ்செல்வத்திற்கும் கோடீஸ்வர யோகத்திற்கும் அதிபதியாகக் குரு பகவானும், அன்றாட பணப்புழக்கம் மற்றும் ஆடம்பர, மகிழ்ச்சியான வாழ்விற்குரிய காரகராக சுக்கிர பகவானும் விளங்குகின்றனர். இவ்விரு கிரகங்களின் அருளையும் ஒருசேரப் பெற எளிய […]

ஒரு மனிதனின் வாழ்வு மேன்மையடையவும் குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கவும் குலதெய்வத்தின் அருள் மிகவும் இன்றியமையாதது என ஆன்மிக சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி குலதெய்வத்தின் பரிபூரண ஆசியைப் பெறுவதற்குச் சில குறிப்பிட்ட எளிய படையல் வழிபாடுகள் அளப்பரிய நன்மைகளைத் தரும் என ஆன்மிக வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர். அதன்படி, குலதெய்வத்திற்கு தேங்காய் வைத்து வழிபட எடுக்கும் புதிய முயற்சிகளில் உள்ள தடைகள் அகலும்; சர்க்கரைப் பொங்கல் படைக்கப் பணவரவு […]