சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்பத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்படும் நகைக் கடன் தொகையை கணிசமாக உயர்த்துவதற்குத் தமிழகக் கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 1,454 நகர்ப்புற வங்கிக் கிளைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பதிவாளரின் கீழ் இயங்கும் […]

சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையில் கார் ஒன்றிலிருந்து இறங்கி வரும் இளம் பெண்ணின் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி, அது தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கீர்த்தனா என பரவலாகப் பகிரப்பட்டு வந்த நிலையில், அதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். ஒரு பெண் தனது அன்றாட வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் இயல்பான வீடியோவை வைத்து அரசியல் தளத்தில் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைப்பது, அதைச் செய்பவர்களின் பலவீனமான மற்றும் பிற்போக்குத்தனமான […]

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 23), தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மாற்றங்களால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், […]

தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதிகார மட்டத்திலான ஊழலை வேரறுக்க, சிங்கப்பூர் நாட்டை பின்பற்றி மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “சர்வதேச அளவில் சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பெருமளவிலான ஊழல் குற்றங்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் சமரசமின்றி அமல்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக் […]

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். நேரு தான் ரேஷன் அரிசியையே உணவாக உட்கொள்வதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், நடைமுறையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தகுதியற்ற முறையில் ரேஷன் அரிசி விநியோகிக்கப்படுவதாகப் பரவலான புகார்கள் எழுந்துள்ளன என அவர் குறிப்பிட்டார். இத்தகைய குறைகளைக் களைந்து, பொதுமக்களுக்கு உயர்தரமான உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்குவதற்கு முதலமைச்சர் விஜய் […]

பெங்களூருவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக அவரது உடல் அமைப்பை விவரித்து பில்லில் அச்சிடப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள ‘சப்கோ தி கிராப்டரி’ (Subko The Craftery) என்ற உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கு உணவை உட்கொண்டுவிட்டு பில்லைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். பில்லில் வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக “Little fat black shirt” […]

மும்பையின் புலேஷ்வரம் பகுதியில் புகழ்பெற்ற ‘புலேஷ்வரச்சா ராஜா விநாயகர் சிலையைக் கொண்டு செல்லும் ஊர்வலத்தின் போது, பிரம்மாண்டமான சிலை திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்தனர். சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 22) சுமார் 9:51 மணியளவில் புலேஷ்வரத்தில் உள்ள கபூர்கானா அருகில் உள்ள ஜெய அம்பே சவுக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பிரிஹன்பும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விபத்து எப்படி நடந்தது? […]

மத்தியப் பிரதேசம் சிந்தவாரா மாவட்ட மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வார்மர் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு குழந்தைகள் தீக்காயமடைந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் வார்மர் (குழந்தைகளுக்கான வெப்பமூட்டும் கருவி) இயந்திரத்தின் பிலமென்ட்டில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக இந்த விபத்து நேரிட்டது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளைக் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். […]

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு: திமுக கிளைச் செயலாளருக்கான அதிகபட்ச […]

ஒடிசாவில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் தன்னுடன் வந்து சேரவேண்டும் என்று மூடநம்பிக்கையின் காரணமாக, இளைஞர் ஒருவரை தலையைத் துண்டித்துக் கொன்று, அவரது தலையை பூஜை அறைக்கு அடியில் புதைத்த திடுக்கிடும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சத்ருகன் சாகு (40) மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 18 முதல் காணாமல் போன 45 வயதான சந்தோஷ் கார்செல் […]