சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 7 மாத கர்ப்பிணியாக இருந்த 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அழைத்துச் சென்ற காதலனே, துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கணாபுரம் ஒன்றியம் கருங்குள்ளன் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டரின் மகள் கோகிலா (23), கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 20ஆம் […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அய்யலூர் பகுதியில், தோட்டத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து கொடூரமாக தாக்கிப் பாலியல் பலாத்காரம் செய்த 27 வயது இளைஞரை, அப்பகுதி மக்கள் துரத்திப் பிடித்துக் கட்டிவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அய்யலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, தனது மகன்கள் வெளியூரில் வசித்து வரும் சூழலில், விவசாய தோட்டத்தில் தனியாக தங்கி ஆடு, மாடுகளைப் […]
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கான தீவிர முயற்சிகளில் கர்நாடக அரசு இறங்கியுள்ள நிலையில், அதனைக் கண்டித்து வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. முன்னதாக, மேகதாது விவகாரம் மற்றும் தமிழக விவசாயிகளின் உரிமைகள் தொடர்பாக, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் […]
நேபாளம் நாட்டில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். திடீரென பெருக்கெடுத்து ஓடிய கடும் காற்றாற்று வெள்ளத்தால், அந்நாட்டின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தின் பெரும்பகுதி ஒட்டுமொத்தமாக உருக்குலைந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. வெள்ளத்தின் கோர பிடியில் சிக்கி வீடுகள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், போக்குவரத்துச் சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபையலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பள்ளி மாணவியை தூண்டிவிட்டு சாணி பவுடரை கலக்கச் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில், தினமும் குழந்தைகளுக்கு பரிமாறுவதற்கு முன்பாக உணவுகளை தலைமை ஆசிரியர் சுவைத்துச் சரிபார்ப்பது வழக்கமாக இருந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் […]
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தூய்மைப் பணியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பொதுமக்களின் சுகாதாரப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று அவசரப் பேச்சுவார்த்தை நடத்தியது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பிலிருந்து அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், […]
ஃபஹத் ஃபாசில் ரசிகர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் ஒரு வித்தியாசமான சினிமா அனுபவம் காத்திருக்கிறது. மேஜிக், ஆக்ஷன், காமெடி கலந்த ஃபேன்டஸி கதையில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக செப்டம்பர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. ‘மனா முகூர்த்தி லவ் ஸ்டோரி’ படத்தை இயக்கிய ஷஷாங்க் யெலெட்டி, […]
கணவரின் உடலை காரில் எடுத்துச் சென்று, சாலையில் வைத்து வழிப்பறி கொலை நடந்தது போல் நாடகமாடிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த சோகத்தில் மனைவி கதறிய நிலையில், அவர் சொன்ன தகவல்களையே அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஆனால், அந்தக் கதையின் பின்னால் இருந்த உண்மை விசாரணையின் போக்கையே மாற்றியது. மலூர் அடுத்த வேலகவுண்டன்புதூரைச் சேர்ந்த செங்கல் வியாபாரி பூபதி, செப்டம்பர் 1-ம் தேதி ஓமலூர்–சங்ககிரி […]
தமிழகத்தில் உள்ள 52 முக்கிய கோயில்களுக்குள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கான தடை உத்தரவிலிருந்து கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவிழா நாட்கள் மற்றும் அதிகக் கூட்டம் இருக்கும் நேரங்களில் பக்தர்கள் தங்களது கைபேசிகளை வெளியில் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை; இது தொடர்பான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. கைபேசிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான […]
இந்தியாவை கேவலப்படுத்தி, சுகாதாரமற்ற நாடாக காட்டும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அமெரிக்கப் பெண் ஒருவர் அதற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய நபர் ஒருவர், தனது பெரிய தொப்பையின் மீது ரொட்டி உருட்டுவது போன்றும், நெற்றி வேர்வையை துடைப்பது போன்றும் அருவருப்பான காட்சி ஒன்று இணையத்தில் பரவியது. சுமார் 2.8 கோடி பார்வைகளை கடந்த இந்த வீடியோ, இந்தியாவில் […]

