உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 17,500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண ஆணையர் அலுவலகம் வெளியிட்ட […]

பெங்களூரு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக நம்ப வைத்து, பெண் பயணியை பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஊழியரை ரயில்வே நிர்வாகம் உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளது. ஒடிசா மாநிலம் நுவாபடா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இரண்டு உறவினர்களுடன் வேலை தேடி பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த புதன்கிழமை திட்லாகர் பகுதியில் இருந்து ரயிலில் பயணத்தை தொடங்கியுள்ளனர். […]

ஈரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஈரானின் அரசு சார்ந்த ‘நூர்நியூஸ்’ (Nournews) செய்தி வெளியிட்டுள்ளது. […]

கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை நிலச்சரிவைத் தொடர்ந்து நேபாளத்தில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 5,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இந்தத் துயரத்தின் சுவடுகள் இன்னும் மாறாத நிலையில், தார்ச்சுலா (Darchula) மாவட்டத்தில் ஏற்பட்ட புதிய நிலச்சரிவால் மீண்டும் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தார்ச்சுலா மாவட்டத்தின் அபி ஹிமால் பகுதியில் உள்ள பட்டார் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அதிக அளவிலான மண் மற்றும் இடிபாடுகள் […]

பொலிவியாவில் ராணுவ முகாமுக்குள் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிவியாவின் லா பாஸ் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வியாச்சா (Viacha) நகராட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ராணுவ முகாமின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியிலேயே வெடிபொருட்கள் […]

தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், முக்கிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பலரும் வங்கி லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர். வங்கி லாக்கரில் பொருட்களை வைத்துவிட்டால் அவை முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும், ஏதேனும் திருட்டு நடந்தால் பொருட்களின் முழு மதிப்பையும் வங்கி வழங்கும் என்றும் சிலர் நினைக்கின்றனர். ஆனால், வங்கி லாக்கர் தொடர்பான விதிகளில் இதற்கு வரம்புகள் உள்ளன. ரிசர்வ் வங்கி (RBI) வகுத்துள்ள விதிகளின்படி, லாக்கரில் […]

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் C. ஜோசப் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு நடுவே, காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாடுகளுக்கு இடையே செப்டம்பர் 9-ஆம் தேதி கூட்டணித் தலைவர்களின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் கூட்டத்தை கூட்ட தவெக திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் கோவளத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது. 2026 தமிழ்நாடு […]

காதல் மற்றும் திருமணம் தொடர்பான சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் நிலையில், பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது ரூபியும், இரண்டு குழந்தைகளின் தாயான சந்தியாவும் அருகருகே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட […]

திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்த 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த ரஹீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென காணாமல் போனதால், அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

கேரளாவில் ஒருவயது பெண் குழந்தையின் உடலுக்குள் ஊசி இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது இந்த ஊசி குழந்தையின் உடலிலேயே விட்டுச் செல்லப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். கோழிக்கோடு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த வினீஷ் – அஞ்சு தம்பதியரின் குழந்தைக்கு, கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனையில் வலது விலா எலும்புப் பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்தது. […]