கள்ளக்காதல் ஆரம்பத்தில் ஒரு ரகசிய உறவாக இருந்தாலும், அது வெளியில் தெரிய வரும் சூழல் உருவாகும்போது பிரச்சினைகள் விபரீதமாக மாறிவிடுகின்றன. பணம், மிரட்டல் என அடுத்தடுத்து பிரச்சினைகள் அதிகரித்த நிலையில், தெலுங்கானாவில் கள்ளக்காதல் விவகாரம் இரட்டைக் கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் சூரியபெட் மாவட்டம் மோட்டா பகுதியைச் சேர்ந்தவர் நாகுலு (48). இவரது மனைவி பூபா (41). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் […]

விளையாட்டாக ஆரம்பிக்கும் கள்ளக்காதல் விவகாரங்கள் நாளடைவில் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி, இறுதியில் கொலை, தற்கொலை போன்ற விபரீதங்களிலும் முடிந்து விடுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் பெரும் மனவேதனைக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (48). இவர் எலக்ட்ரிக்கல் கடை […]

ஸ்டாலின் மிசாவில் தான் கைதானாரா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியுமா? என்று உதயநிதிக்கு தவெக சவால் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”அரசியலாகவும், கருத்தியல் ஆகவும் மோதும் வக்கும் திராணியும் இல்லையென்றாலும், வாய்ச்சவடால் விடுவதில் மட்டும் ஆபாசநிதிக்கு குறையொன்றுமில்லை. மிசாவில் கைதானவர் அப்பா என்று திமுகவினரும், திமுகவின் அடிவருடிகளும் உருட்டுவதற்கு, இது தாத்தா காலம் என்றெண்ணி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியிருக்கிறார் உளறல்நிதி. என்ன […]

கர்நாடகாவில் 3 தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த கொடூர செயல் கடும் கண்டனத்துக்குரியது. குற்றம் இழைத்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாக தெரிகிறது. இதனை […]

அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்திற்குள் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடி, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக பதிவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட அரசியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்துள்ளது. இந்த நடைமுறையை மீறி, தேனி மாவட்டம் பெரியகுளம் […]

பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகிய 3 பேருக்கும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, அதாவது FDA நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு விமல் ஏலக்காய் விளம்பரத்தில் இந்த 3 நடிகர்களும் நடித்திருந்தனர். விமல் என்ற பிராண்ட் பெயர் பான் மசாலாவுடன் சந்தையில் பரவலாக தொடர்புபடுத்தப்படுவதால், ஏலக்காய் விளம்பரமும் பான் மசாலாவை மறைமுகமாக […]

தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 2 முக்கிய அமைச்சர்களின் செயல்பாடுகள், முதல்வர் விஜய்க்கு அரசியல் ரீதியாக புதிய தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என்ற பேச்சு டெல்லி அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் மீது தொடக்கத்திலேயே ஊழல் புகார்கள் எழ தொடங்கியுள்ள நிலையில், மற்றொரு அமைச்சர் மத்திய அரசையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் […]

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தற்போது மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி […]

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. டார்வின் நகரில் உள்ள மர்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வங்கதேச அணி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, வங்கதேச வீரர்களின் தரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஸ்டீவ் […]

கோவிட்-19 தொற்று என்பது கடுமையான காய்ச்சல் மற்றும் சோர்வுடன் முடிந்துவிடுவதில்லை; அதற்கு அப்பாலும் நமது உடலில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். மனித உடலில் பல ஆண்டுகளாக, ஏன் பல தசாப்தங்களாக அமைதியாக மறைந்திருக்கும் மற்ற வைரஸ்களை கொரோனா தொற்று தூண்டிவிடுகிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்திய ஆய்வின் முடிவுகளில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,154 கோவிட்-19 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான மரபணு ஆய்வில், […]