சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது தான் வெளிப்படுத்திய உடல்மொழி முற்றிலும் எதேச்சையானது என்றும், எந்தவொரு தனிநபரின் மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் விரிவான பதிலுரையாற்றினார். அப்போது, கடந்த கால திமுக ஆட்சி மற்றும் சர்க்காரியா ஆணைய விவகாரங்களை […]

உக்ரைன் மீதான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உள்நாட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் கடுமையான நெருக்கடிகள் எழுந்துள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரபல சர்வதேச இதழான The Economist மற்றும் புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உக்ரைன் போரில் முழுமையான வெற்றியை ஈட்ட முடியாமல் பின்வாங்கினால், அது புதினின் சொந்த அரசியல் எதிர்காலத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்ற […]

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் மிக முக்கியமான அத்தியாயம் சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை மற்றும் அதன் அறிக்கை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். திமுகவில் இருந்தபோது அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த எம்.ஜி.ஆர், அதன் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிமுகவை தொடங்கிய அவர், திமுக அரசு மீது தீவிர ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த […]

தெலங்கானா சட்டப்பேரவை வளாகத்தில், ஐஏஎஸ் அதிகாரி நவீன் மிட்டலின் தனிச் செயலாளர் திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்ப்பாசனத் துறையின் முதன்மைச் செயலாளரான நவீன் மிட்டலிடம் தனிச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜு என்பவர், எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். அங்கு உடனிருந்த அமைச்சர் வக்கிட்டி ஸ்ரீஹரி (Vakiti Srihari), உடனடியாக நிலைமையைப் புரிந்து கொண்டு களத்தில் இறங்கினார். ராஜுவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக அவருக்கு […]

உறவுகளில் நம்பிக்கையைவிட சந்தேகம் மேலோங்கும்போது, அதன் விளைவுகள் சில நேரங்களில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விபரீதமாக மாறிவிடுகின்றன. அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை கொலை செய்து, உடலை துண்டுகளாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்ததாக அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவுகாத்தி அருகே உள்ள பசிஸ்தாபூர் பகுதியில் […]

நடிகராக நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் ரவிமோகன், தற்போது தனது திரைப்பயணத்தில் புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறார். நடிப்பைத் தாண்டி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள அவர், யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து ‘An Ordinary Man’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு கெனிஷா இசையமைக்கிறார். ரவிமோகனின் தனிப்பட்ட வாழ்க்கை ஏற்கனவே பல்வேறு விவாதங்களை சந்தித்த நிலையில், அவரது புதிய […]

செம்பு விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது. உலக அளவில் நிலவும் கடுமையான தட்டுப்பாடு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட செம்பு இறக்குமதி மீது அமெரிக்கா புதிய வரி விதிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. லண்டன் உலோகம் மற்றும் பங்குச் சந்தையில் இந்தத் தொழிற்துறை உலோகம் தொடர்ச்சியாக நான்காவது நாளாக உயர்ந்து, புதிய சாதனையாக ஒரு டன் 14,617 டாலரை […]

சென்னையின் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்காக 26.5 ஏக்கர் வரை நிலத்தை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டத்துக்கான முதற்கட்ட நிர்வாக அனுமதியை விரைவில் வழங்க அரசு தயாராகி வருகிறது. புதிய வளாகத்தின் முக்கிய கட்டிடம் 15 மாடிகளுடன் சுமார் 20 லட்சம் […]

 ஈரானுடனான போருக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.  ஈரானுடன் நடக்கும் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரியும் என்றும், பெட்ரோல் விலை லிட்டர் 2 டாலருக்கும் கீழே குறையும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களாலேயே எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சண்டை முடிவுக்கு வந்தவுடன் சந்தை […]

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது எழுந்துள்ள புகார் தற்போது காவல் துறை விசாரணைக்கு சென்றுள்ளது. ரூ.4.5 கோடி பணம் வழங்கியதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனவிமல் அளித்த புகார் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல், சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட […]