கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வில்லிஸ்டன் நீர்த்தேக்கத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த அடர்ந்த மரங்கள் சூழ்ந்த விநோத தீவு ஒன்று, செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து திடீரென மாயமாகி தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 9,800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு, தோராயமாக ஒன்றரை அமெரிக்கக் கால்பந்து மைதானங்களின் அளவுக்கு இணையானதாகும். கடந்த ஜூலை மாத இறுதியில் படகோட்டிகளால் எடுக்கப்பட்ட […]

நெற்றியைத் துளையிடுவது போன்ற தாங்க முடியாத வலியுடன் இருண்ட அறையில் முடங்க வைக்கும் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால், உலகளவில் சுமார் ஏழு பேரில் ஒருவர் (100 கோடிக்கும் அதிகமானோர்) பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் மைக்ரேன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. நரம்பியல் மற்றும் மரபியல் ரீதியாக மூளையில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்புற காரணிகளால் தூண்டப்படும்போது, குறிப்பிட்ட […]

தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களை மிதமான சூட்டில் குடிக்காமல், அதிகப்படியான கொதிக்கும் சூட்டிலேயே தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் (esophageal cancer) ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம் என பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுமார் 10 லட்சம் பேரிடம் நடத்திய இந்த விரிவான ஆய்வு முடிவு, புற்றுநோய் தொடர்பான புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ ஆய்விதழான ‘இன்டர்நேஷனல் ஜர்னல் […]

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெட்டுவான் கோவில், பெரும் பாறையை மேலிருந்து கீழாக குடைந்து செதுக்கப்பட்ட தனித்துவமான கட்டட கலை அமைப்பால் ‘தென்னிந்தியாவின் எல்லோரா’ மற்றும் ‘மினி கைலாசா’ என்று போற்றப்படுகிறது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் மாறஞ்சடையனால் தொடங்கப்பட்ட இந்தக் கோவில், ஏதோ ஒரு காரணத்தால் முழுமையடையாமல் முற்றுப்பெறாத நிலையிலேயே விடப்பட்டது. பண்டைய காலத்தில் ‘அரைமலை’ என்று […]

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (40) மற்றும் அவரது மனைவி தேன்மொழி (35) ஆகியோர், வெள்ளகேட் பகுதியில் உள்ள ஒரு மரக்கிடங்கில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் மரக்கிடங்கின் உரிமையாளரான ஆறுமுகம் என்பவரிடம் ரூ.20,000 கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல […]

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு திடீர் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் நிறைவடைந்த தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையாகப்பங்கேற்றிருந்த எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு, நேற்று அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்பாக […]

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த பிரதீப் ராஜ் (26) என்ற இளைஞர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையிடம் குடும்பத்துடன் நேரில் சென்று புகாரளித்த அடுத்த நாளே, மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதீப் ராஜ், காவல்துறையினர் […]

3 பச்சிளம் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட லின்ட்ஸே கிளான்சி (36) என்ற தாயின் வழக்கில், ஒருமித்த முடிவை எட்ட முடியாததால், இதனை ‘முடிவுக்கு வர இயலாத வழக்கு’ என்று நீதிபதி அறிவித்துள்ளார். கடந்த 2023 ஜனவரி 24 அன்று, அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் டக்ஸ்பரி நகரில் உள்ள தனது வீட்டில் ஐந்து வயது கோரா, மூன்று வயது டாசன் மற்றும் எட்டு மாதக் குழந்தை கேலன் ஆகிய மூன்று […]

வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்ய ஏற்கெனவே போதுமான சட்ட விதிகள் உள்ளன. அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டியது காவல்துறை உள்ளிட்ட அமலாக்க அமைப்புகளின் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குவதற்கான கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இடைத்தேர்தல் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி தற்போதே சூடுபிடித்துள்ளது. மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் போட்டியிடுகின்றனர். இருவரும் ஏற்கனவே அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் […]