2026-ம் ஆண்டுக்கான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பென் ஷெல்டனும் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவும் மோதினர். செப்டம்பர் 13 அன்று நியூயார்க்கில் உள்ள ஆர்தர் அஷ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் பரபரப்பான இறுதி ஆட்டத்தில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி வீரர் ஸ்வெரெவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஸ்வெரெவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் ஜெர்மனி வீரர் கைப்பற்றினார். அதைத் […]

நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், ஒரு கால ஆண்டில் 35-க்கும் அதிகமான T20I விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்ரீ சரணி படைத்துள்ளார். ஹர்ஷிதா சமரவிக்ரமாவை ‘காட் அண்ட் போல்’ (Caught and bowled) முறையில் வீழ்த்தியதன் மூலம் அவர் நடப்பாண்டில் தனது 36-வது விக்கெட்டை கைப்பற்றினார். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) அன்று துபாய் […]

கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய பங்களிப்பாக, சென்னை லயோலா கல்லூரிக்கு மார்ட்டின் அறக்கட்டளை ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இந்தத் தொகையை பயன்படுத்தி கல்லூரி வளாகத்தில் 4 புதிய வகுப்பறைகள் உருவாக்கப்பட உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வி தேவைகளுக்கு ஏற்ப கற்றல் இடங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அமையும் வகுப்பறைகளில் நவீன வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் சூழலை வழங்க […]

வீட்டுக்கு வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, சுற்றுப்புறத்தில் இருக்கும் கால்நடைகளையும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ராஜஸ்தானின் அபு ரோடில் நடந்துள்ள சம்பவம், குழந்தைகளை தனியாக வெளியில் விளையாட விடும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை திடீரென அங்கு சுற்றித்திரிந்த மாடு ஒன்று தாக்கியது. எதிர்பாராத விதமாக மாடு சிறுவனை நோக்கி பாய்ந்ததால், […]

ஒரு மாநிலத்தின் அரசியல் தலைவரைப் பற்றி அண்டை மாநில மக்களிடம் கேட்கும்போது என்ன பதில் கிடைக்கும்? அந்த கேள்விக்கு பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் நகரங்களில் சிலர் அளித்த பதில்கள் தற்போது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து இந்த நகரங்களில் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து தெரியும் என்றும், அவரது அரசியல் செயல்பாடுகளை கவனித்து வருவதாகவும் சிலர் […]

12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவருடன் படித்த 4 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியை தொடர்ந்து அவமானப்படுத்தியதாகவும், கேலி கிண்டல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவம் மாணவியின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் படித்து வந்த அந்த மாணவியை சில சக மாணவர்கள் தொடர்ந்து குறிவைத்து பேசியதாக […]

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் அரசியல் பயணத்துக்கு மத்தியில், நடிகர் அஜித்தின் கார் பந்தய அணியைச் சுற்றி யூடியூபர் மாரிதாஸ் எழுப்பியுள்ள கேள்விகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளன. முதலமைச்சர் விஜய், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் செப்டம்பர் 10-ம் தேதி லண்டன் சென்றார். அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கும் சென்றார். அங்கு நடைபெற்ற […]

15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஒரு பழைய டிவி நிகழ்ச்சி மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகிறது. அதுவும், பழைய ‘ஜாக்பாட்’ என்ற பெயருடன் மட்டுமல்லாமல், அதே குஷ்பூவுடன்! இந்த முறை போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி மட்டுமல்ல; அவர்கள் தேர்வு செய்யும் கூட்டணி, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் விதம் என பல விஷயங்களும் வெற்றியை தீர்மானிக்க உள்ளன. ஜெயா டிவியில் செப்டம்பர் 13-ம் தேதி முதல் ‘ஜாக்பாட்’ புதிய சீசன் ஒளிபரப்பாகிறது. […]

ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணம்’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை மாதம் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, இந்தப் புராணக் காவியத்தின் தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்குச் சில சிறப்புப் பரிசுகளை வழங்கியுள்ளனர். அதன்படி, ரன்பீர் கபூர் ராமர் விறைவிலும், சாய் பல்லவி சீதையாகவும் தோன்றும் புதிய ‘சீதா ராம்’ போஸ்டரை இன்று காலை படக்குழு வெளியிட்டது. […]

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் மருந்து நிறுவன அதிபர் ஒருவர் வீட்டின் படுக்கையறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மருமகளே கொலைக்கு திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரூ.6 லட்சம் கொடுப்பதாகக் கூறி முன்னாள் வீட்டு ஊழியர் மூலம் கொலைக்கு ஏற்பாடு செய்ததாக மருமகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கான்பூர், கல்யாண்பூர் பகுதியில் உள்ள ரத்தன் ஆர்பிட் அடுக்குமாடிக் குடியிருப்பில் வினீத் மினோச்சா தனது மகன் […]