நிதின் நவீன் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டு மத்திய அமைப்புக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பில் மொத்தம் 13 தேசிய துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பைஜயந்த் ஜெய் பாண்டா, ரேகா வர்மா மற்றும் தாரிக் மன்சூர் ஆகியோர் துணைத் […]

இரவு முழுவதும் போதுமான நேரம் தூங்கிய பிறகும், காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் உடல் சோர்வும் தூக்க கலக்கமும் ஏற்படுவது பலரது அன்றாட பிரச்சனையாக உள்ளது. தொடர்ச்சியாக நீடிக்கும் இந்த மந்தநிலை அன்றைய நாளின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனையும் உற்சாகத்தையும் பாழாக்கிவிடும் சூழலில், காலை நேரப் பழக்கவழக்கங்களில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலம் உடலையும் மனதையும் இயல்பாகவே சுறுசுறுப்படையச் செய்ய முடியும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விடிந்தவுடன் […]

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான சேர்க்கை தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் கலந்துகொண்டு, மாணவிகளுக்குச் சேர்க்கை ஆணைகளை வழங்கிப் பேசினார். அப்போது பேசிய அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வருவது போல, புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இலவசப் பேருந்து வசதியை ஏற்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். […]

ஓசூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நள்ளிரவில் உள்ளாடை மற்றும் முகமூடி அணிந்த மர்ம கும்பல் உலா வந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் நகர் குடியிருப்புப் பகுதியில் 16-ஆம் தேதி அதிகாலை சுமார் 2.48 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் நுழைந்துள்ளனர். வெறும் உள்ளாடை மற்றும் முகமூடி மட்டுமே அணிந்திருந்த அந்தக் கும்பல், தெருக்களிலும் வீடுகளின் முன்புறமும் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்து ஒவ்வொரு […]

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆகஸ்ட் 17) வெளியிட்ட முக்கிய திட்டங்களின் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். ➣ தமிழகத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்கள் வருமான உச்சவரம்பு ஏதுமின்றி கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சைகள் பெறும் வகையில் “முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். ➣ அனைத்து மாவட்ட […]

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பல தலைமுறைகளாக நடைமுறையில் இருந்து வந்த நிலவரி வசூலிக்கும் முறை, நடப்பு 1436-ஆம் பசலி ஆண்டு முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அதிரடி முடிவின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் நீண்டகால வரிச் சுமையிலிருந்தும், வருவாய்த் துறையின் தேவையற்ற நிர்வாக நடைமுறைகளிலிருந்தும் முழு விடுதலை […]

சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு அளிக்க வேண்டிய மரியாதை மற்றும் சட்டமன்ற மாண்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த உறுப்பினர்கள் கற்றுத்தர வேண்டும் என அமைச்சர் ரமேஷ் பேசியது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தவெக அமைச்சர் ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அவையின் கண்ணியத்தை உறுப்பினர்கள் அனைவரும் […]

காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகா ஏன் தண்ணீர் திறக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாடிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத்த தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி, காவிரி நீர் மேலாண்மை […]

முழுமையாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், 2வது முறையாக கூடுதலாக பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் பேசி வரும் முதலமைச்சர் விஜய்,  விவசாயிகளுக்கு துணை நிற்கும் அரசு இருக்கும் நாடு தான் வளமாக இருக்கும். எனவே த.வெ.க அரசு பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமை குறைக்கப்பட்டது. கடந்த காலங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன் தொகை தாமதமாகவே […]

இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தபோது உதயநிதி என்ன பேசினார்?. போதைப்பொருளுக்கு எதிராக அப்போதைய துணை முதல்வராக இருந்த உதயநிதி என்ன செய்தார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், கோவையில் மாணவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகே மாநிலத்தில் […]