திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் வாழ்க்கையை சில நொடிகளில் சிதைத்துள்ளது கேரளாவில் நடந்த கோர விபத்து. சாலையோரம் பைக்கை நிறுத்தி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 3 வயது மகன் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் மூவரும் உயிரிழந்தனர். திருச்சூர் மாவட்டம் குருவாயூர் – குன்னம்குளம் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நடந்தது. முனீர் (35), […]

ஹிமாச்சலப் பிரதேசத்தில் திருமணமான பெண் மருத்துவர் தொடர்பான கள்ளக்காதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இரண்டு இளைஞர்களை வீட்டிற்கு வரவழைத்து அந்தப் பெண் ரகசியமாக சந்தித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கணவன் எதிர்பாராத நேரத்தில் வீடு திரும்பியபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவத்தன்று வெளியே சென்றிருந்த கணவன், திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்ததால் அவருக்கு […]

மூன்று நாள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தனிநபர் தீர்மானத்தை முன்வைப்பது முதல் திமுக ஆட்சிக்கால ஊழல் விவகாரங்கள் வரை அவையில் பல்வேறு அரசியல் விவாதங்கள் இடம்பெற்றன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்த கடிதம் தொடர்பாக ஏற்பட்ட அமளிக்கு இடையே, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் […]

பல ஆண்டுகளாக நீடித்த ‘கைலாசா’ நாட்டின் இருப்பிட மர்மத்துக்கு நித்தியானந்தா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா-பிசாவ் அருகே, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கைலாசா அமைந்துள்ளதாக அவர் வெளியிட்ட புதிய வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை ரகசியமாக வைத்திருந்த கைலாசாவின் இருப்பிடத்தை அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்ட நித்தியானந்தா, கடந்த 2016ஆம் ஆண்டு தனது சீடர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் வெளிநாட்டில் […]

கள்ளக்காதல் தொடர்பு ஒரு குடும்பத்தில் ஏற்படுத்திய விபரீத முடிவு உத்தரப்பிரதேசத்தின் அமேதி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஒரு நபருடன் இருந்த தொடர்பு நாளடைவில் தீவிரமடைந்த நிலையில், கணவனை கொலை செய்ய மனைவியும் அவரது காதலனும் திட்டமிட்டதாக காவல்துறை விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று இரவு, கணவனுக்கு வழங்கிய உணவு அல்லது பானத்தில் மயக்க மருந்தைக் கலந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதை உட்கொண்ட அவர் ஆழ்ந்த உறக்கத்தில் சென்ற […]

இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகளின் தன்மை தொடர்ந்து மாறி வருகிறது. ஒருபுறம் ஊட்டச்சத்துக் குறைபாடு நீடிக்கும் நிலையில், மறுபுறம் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்காத பிரச்சினையும் பல்வேறு வயதினரிடையே அதிக கவனத்தைப் பெறுகிறது. குறிப்பாக Vitamin B12 மற்றும் Vitamin D குறைபாடு உடலின் ஆற்றல், நரம்புகள், தசைகள், எலும்புகள் உள்ளிட்ட பல முக்கிய செயல்பாடுகளை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் இந்த இரண்டு சத்துகளின் குறைபாடு […]

சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 20 நிகழ்ச்சியில், பிரபல குத்துச்சண்டை வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான மேரி கோம் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு தாயாகவும், பெண்ணாகவும் தனது உண்மையான இயல்பு வெளிப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவருக்கும் ஒழுக்கத்தைக் கொண்டுவரப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 20 புதிய உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. தொலைக்காட்சி நடிகர்கள், சமூக […]

இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்து பாரிய மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேலிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட திடீர் தாக்குதலைப் போன்றே இது இருக்கும் என்றாலும், தொடக்கத்திலிருந்தே மிகத் துல்லியமான ஒருங்கிணைப்புடன் இது திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, ஈரானின் நேரடி ராணுவ வலிமையுடன் லெபனானைச் சேர்ந்த […]

கேப் வெர்டே (Cape Verde) நாட்டின் ஃபோகோ (Fogo) தீவில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பியபோது இந்த நெஞ்சை உலுக்கும் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 9:00 மணியளவில் காம்பனாஸ் டி சிமா (Campanas de Cima) சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சா தாஸ் கால்டெராஸ் […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை தனியார்மயமாக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் “அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” எனத் தெரிவித்துள்ள இஸ்ரோ, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான முதன்மை நிறுவனமாக இஸ்ரோ தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் இது குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ள இஸ்ரோ, விண்வெளித்துறையில் தனியார் துறையின் பங்களிப்பு இஸ்ரோவின் பங்கை குறைப்பதற்காக அல்ல […]