திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தன்னிடம் ரூ.2 கோடி இருப்பதாக கூறினால் தனது தாயே அதை நம்பமாட்டார் என தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை வெறும் ரூ.12 லட்சத்தை வைத்தே சந்தித்ததாகவும் அவர் கூறினார். ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு […]
சென்னை, ஆக 22 : உணவகத்தை விரிவுபடுத்துவதாக கூறி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில், பிரபல இஸ்லாமிய பேச்சாளரான அப்துல் பாசித் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஈ.சி.ஆர் அக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ் அகமது என்பவர், நீலாங்கரையில் உள்ள “ரூஹி உணவகத்தை நடத்தி வந்த அப்துல் பாசித்துடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். பிரபல பேச்சாளராகவும் சமூகத்தில் மதிப்பிற்குரிய […]
திருச்சி: தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக், முதல்வர் விஜய்யை “வருங்கால பிரதமர்” என அமைச்சர்கள் புகழ்ந்து பேசுவது தேவையற்றது என்று விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து போதிய அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டினார். விவாதங்களை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் […]
புற்றுநோய் என்றாலே வயது முதிர்ந்தவர்களுக்கே ஏற்படும் நோய் என்ற பொதுவான எண்ணம் உள்ளது. ஆனால், இந்தியாவில் 30 வயதுகளிலும் 40 வயதின் தொடக்கத்திலும் உள்ளவர்களிடையே புற்றுநோய் கண்டறியப்படும் சம்பவங்கள் குறித்த கவனம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், இளம் வயதினரிடையே உண்மையாகவே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறதா அல்லது மருத்துவ விழிப்புணர்வு மற்றும் நவீன பரிசோதனை முறைகளால் முன்பு கண்டறியப்படாத பாதிப்புகள் தற்போது வெளிச்சத்திற்கு வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. […]
சென்னை பரந்தூரில் அமைக்க முன்மொழியப்பட்ட 2-வது சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கிராம மக்களின் தொடர் எதிர்ப்புகள் காரணமாகக் கைவிட தவெக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், 2022 ஆகஸ்ட் மாதம் பரந்தூர் விமான நிலையத் […]
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த திட்டங்களில், பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதார சுமையைக் குறைப்பதிலும் மிக முக்கியமான திட்டமாக ‘வெற்றிப் பயணம்’ திட்டம் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தைப் பெருமளவில் விரிவாக்கம் செய்யும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் அமலுக்கு வரவுள்ளதாகச் சட்டமன்றப் பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான […]
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இக்கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்காக மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய் ” கடந்த நான்கு மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் […]
கேரளாவை சேர்ந்த கஸியா லிஸ் மெஜோ என்ற 19 வயதே ஆன இளம்பெண், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 மகுடத்தை சூடினார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட இறுதிப்போட்டியில், கேரளாவின் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான சட்டக்கல்லூரி மாணவி கஸியா லிஸ் மெஜோ (Kaziah Liz Mejo) ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டத்தை வென்றுள்ளார். 52 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில், அவருக்கு முந்தைய வெற்றியாளரான மனிகா […]
உலகளாவிய சாதகமான சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் விலைமதிப்பற்ற உலோகங்களை நோக்கித் திரும்பியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் உயர்ந்தன. இதன் விளைவாக, உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தையும், வெள்ளியின் விலை 15 வார கால உச்சத்தையும் எட்டின. அந்தவகையில் வாரத்தின் முதல்நாளான இன்று (ஆகஸ்ட் 24) அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 […]
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் மஹ்மூதாபாத் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், பகலில் கணவருடனும் இரவில் காதலனுடனும் ஒரே வீட்டில் இணைந்து வாழ அனுமதி கோரி காவல் நிலையத்தில் வைத்த விசித்திரமான கோரிக்கை அங்கிருந்த போலீசாரையே நிலைகுலைய வைத்துள்ளது. சுபம் வர்மா என்பவருக்கும் அஞ்சு வர்மா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சுவிற்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நிதின் விஸ்வகர்மா என்ற வாலிபருடன் […]

