சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்குத் தாவுவதும், அதனால் மக்களின் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதும் வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் தங்களது […]

மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தனியார் துறை மாதச் சம்பளதாரர்களுக்குப் பயனளிக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) திட்டத்திற்கான மாதாந்திர ஊதிய உச்சவரம்பை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிஎஃப் சேமிப்புத் திட்டத்தில் இணைவதற்கான தற்போதைய மாதாந்திர ஊதிய உச்சவரம்பு ரூ.15,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை […]

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பதவி விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. நகர பொருளாளர் பதவியைப் பெற்றுத்தர பணம் பேசப்பட்டதாக எழுந்த புகாரும், அது தொடர்பான ஆடியோ பதிவும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தவெக உறுப்பினர் பெத்தராஜ், கட்சியில் புதிதாக இணைந்த நிலையில், தனது உறவினர் ஒருவருக்கு நகர பொருளாளர் பதவி பெற்றுத்தர முயன்றுள்ளார். இதற்காக சாயல்குடி மேற்கு ஒன்றிய […]

இன்றைய இளம் தலைமுறையினர் பல்வேறு கவனச்சிதறல்களில் சிக்கி, படிப்பு மற்றும் எதிர்கால இலக்கை மறந்து செல்லும் சூழலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண் குழந்தைகள் தங்களது கனவை நோக்கி தொடர்ந்து பயணித்து கவனம் ஈர்த்துள்ளனர். தினசரி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் பெற்றோரின் பிள்ளைகளான இவர்கள், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற இலக்குடன் படித்து, தற்போது நீட் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். குடும்பத்தின் பொருளாதார நிலை படிப்புக்கு […]

ரூ.4.5 லட்சம் வரை செலவு செய்து புதிய ஸ்மார்ட்போன் வாங்குவது ஒருபுறம் இருக்க, அதே அளவிலான பட்ஜெட்டில் தினசரி குடும்பப் பயன்பாட்டுக்கு ஒரு கார் வாங்க முடியும் என்றால் எப்படி இருக்கும்? ஆப்பிளின் புதிய மடிக்கக்கூடிய ஐபோன் டியோவின் அதிகபட்ச 2TB மாடல் ரூ.4,49,900-க்கு விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இதே பட்ஜெட்டில் கிடைக்கும் சில கார்கள் கவனம் பெற்றுள்ளன. இந்தியாவில் குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்க விரும்புபவர்களுக்கு மாருதி சுசுகியின் […]

13 வயதிலேயே தனது பெற்றோருக்காக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. அப்போது வாடகை வீட்டில் வசித்து வந்த தனது குடும்பத்திற்காக, எதிர்காலத்தில் சம்பாதிக்கும் பணத்தில் வீடு வாங்குவதை இலக்காக வைத்திருந்த அவர், அதற்காக ஒரு வித்தியாசமான முறையையும் பின்பற்றியுள்ளார். வெற்றுத் தொகையுடன் ஒரு காசோலையை எழுதி, அந்தக் கனவை தினமும் மனதில் காட்சிப்படுத்தி வந்துள்ளார். பாட்காஸ்டர் ராஜ் […]

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இரண்டு அழகு கிரீம்கள் தொடர்பாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. CDSCO வெளியிட்ட எச்சரிக்கையில் Chandni Whitening Cream மற்றும் Goree Beauty Cream ஆகிய இரண்டு கிரீம்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக […]

திண்டுக்கல்லில் பிரிந்து வாழ்ந்த மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவர் தகவல்களை வைத்து நடத்திய விசாரணையில் கணவர் சிக்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். நிலக்கோட்டையில் சர்வேயராக பணியாற்றி வரும் இவருக்கும், மனைவி காளீஸ்வரிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். காளீஸ்வரி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற BRICS உச்சி மாநாடு மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விமர்சித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் வகையில் அமெரிக்காவில் புதிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்குவதைத் […]

கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச அளவில் நீடிக்கும் புவிசார் அரசியல் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100 டாலரை கடந்துள்ள நிலையில், பணவீக்கம் மீண்டும் வேகமெடுக்குமா என்ற கவலை உருவாகியுள்ளது. இதன் தாக்கம் பொதுமக்களின் கடன் சுமையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளின் கடன் […]