பலரின் வாழ்க்கையில் எதிர்பாராத சவால்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். நீடித்த மனஅழுத்தம், குடும்பத்தில் தொடரும் கருத்து வேறுபாடுகள், பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு, தனிமை உணர்வு, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணிகள் சிலரின் மனநிலையை கடுமையாக பாதிக்கக்கூடும். இத்தகைய சூழலில், உரிய ஆதரவும் ஆலோசனையும் கிடைக்காமல் போகும்போது சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றும் அபாயம் அதிகரிக்கிறது. பல நேரங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கடுமையான […]
மனிதன் தனது அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறான். அவற்றில் பல கண்டுபிடிப்புகள் மனித வாழ்க்கையை வசதியாக மாற்றியிருந்தாலும், சில கண்டுபிடிப்புகள் தவறான முறையில் பயன்படுத்தப்படும்போது ஆபத்துகளையும் ஏற்படுத்தக்கூடும். இருந்தாலும், நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் வசதிக்காக மக்கள் அவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று பெரும்பாலான வீடுகளில் தவிர்க்க முடியாத சமையல் பாத்திரமாக மாறியுள்ளது பிரஷர் குக்கர். அரிசி, பருப்பு போன்றவற்றை […]
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், உணவே நமது முதல் மருந்தாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில், உணவை மருந்தாக சாப்பிடுவதற்குப் பதிலாக, மருந்துகளை உணவைப் போல உட்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் இயற்கை உணவுகளை போதுமான அளவில் சாப்பிடாததே. பலருக்கு எந்த காய்கறியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது கூட தெரியாமல் இருக்கிறது. இதனால், இயற்கையாகவே உணவின் […]
உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். குறிப்பாக, உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகளையும் டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், சமீப காலமாக “No Sugar”, “No Milk”, “No Oil” போன்ற பல டயட் முறைகள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பாக, “No Milk, […]
பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவு திரையுலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைந்து சில நாட்கள் ஆகியிருந்தாலும், அவருடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ந்து அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாக்யராஜ் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய வாய்ப்பு பெற்ற நடிகை ஊர்வசி, சமீபத்திய பேட்டியில் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியில், பாக்யராஜின் மறைவு குறித்து தனக்கு உடனடியாக […]
சமூக ஊடகங்களில் பல்வேறு டிரெண்ட்கள் வேகமாக உருவாகி மறைந்து விடுகின்றன. ஆனால், சில கருத்துகள் மட்டும் மக்களின் உணர்வுகளுடன் ஆழமாக இணைந்து நீண்ட காலம் பேசப்படுகின்றன. தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வரும் அத்தகைய ஒரு கருத்துதான் Burnt Toast Theory. Instagram, TikTok போன்ற சமூக ஊடகங்களில் குறிப்பாக Gen Z தலைமுறையினரிடையே இந்தக் கருத்து மிகவும் பிரபலமாகி வருகிறது. வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்கள் மற்றும் எதிர்பாராத […]
மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனை திருமணம்தான். ஒரு மனிதனின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதும், சில நேரங்களில் அதையே சீரழிவுக்கு தள்ளுவதும் திருமண வாழ்க்கையாக இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பலர் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையை தாங்களே தேர்வு செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில், சிலர் பெற்றோரின் வற்புறுத்தலால் விருப்பமில்லாத திருமணத்தில் இணைகின்றனர். […]
மனிதனின் முதல் எதிரி ஆசை என்று சொன்னால் அது மிகையாகாது. ஆசை சில நேரங்களில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தாலும், பல நேரங்களில் அதுவே பெரிய இழப்புகளுக்கும் காரணமாகி விடுகிறது. ஆசைக்காக வாழ்க்கையையே இழந்த பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் தனது ஆசையால் செய்த ஒரு செயல், இறுதியில் அவருக்கே பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டியை சேர்ந்தவர் 40 வயதான […]
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் அடுத்த முகாம்பிகை நகர் 2வது வீதியில் உள்ள வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று முன்தினம் இரவு வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, வீட்டிற்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டும், ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். இதையடுத்து, இருவரின் […]
கோவை மாவட்டம் சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வீடியோ எடிட்டிங் செய்யும் தொழிலை சொந்தமாக அலுவலகம் எடுத்து செய்து வருகிறார். கடந்த 2019-இல் இவருக்கு திருமணமான நிலையில், இவருக்கு தற்போது 4 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023 முதல் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். […]

