காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி மருத்துவர் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு 45 வயதான விநாயகஜோதி என்ற மனைவியும், 21 வயதான வர்ஷா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், வர்ஷாவுக்கும் முத்துக்குமாரின் அக்கா மகன் 32 வயதான யுவராஜா என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன் படி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் நிச்சயதார்த்தம் 2 வீட்டு உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. வர்ஷாவுக்கு 21 […]

குஜராத் மாநிலம், காந்திநகரில் பார்த்த் – ரித்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வசித்து வரும் அதே பகுதியில், 20 வயதான ஹர்திக் என்ற கல்லூரி மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், ரித்தி குளிப்பதை பல நாட்களாக ஹர்திக் வீடியோ எடுத்து வந்துள்ளார். இது குறித்து ரித்திக்கு முதலில் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால் ஒரு சில நாட்களுக்கு பிறகு, […]

காவிரி நீர் பகிர்வு தொடர்பாக டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறை குழுக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகா தெரிவித்துள்ளது. காவிரி நீர் பகிர்வு விவகாரம் பல ஆண்டுகளாக தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையாக உள்ளது. மழை நன்றாக பெய்தால் உபரி நீரை திறந்து விடும் கர்நாடகா. பருவமழை குறைவாக இருக்கும் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை தருவதில்லை. […]

நல்ல தூக்கம் என்பது உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கும் இயற்கையான ஓய்வு. ஆனால், பலர் தூங்குவதற்கு சிரமப்படுவது அல்லது காலையில் சோர்வாக எழுவது போன்ற பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மட்டுமல்ல, நாம் தூங்கும் படுக்கையறையின் சூழலும் முக்கிய காரணமாக இருக்கலாம். படுக்கையறை அமைதியாகவும், சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருந்தால் மட்டுமே மூளைக்கு முழுமையான ஓய்வு கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். படுக்கையறையை அழகுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தேவைக்கு […]

குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான கட்டம் 5 முதல் 18 வயது வரை. இந்த வயதில் எலும்புகளின் நீளமும் அடர்த்தியும் அதிகரிப்பதுடன், தசைகளும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. இந்தக் காலகட்டத்தில் போதுமான புரதம், கால்சியம், வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால், அவர்களின் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தினசரி உணவில் சத்தான உணவுகளை சரியான அளவில் சேர்ப்பது மிகவும் அவசியம். […]

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சுவையாகவும், சில நிமிடங்களில் தயாரிக்கக்கூடியதாகவும் இருப்பதால், பலரின் அன்றாட உணவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆனால், வசதிக்காக இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்வது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நூடுல்ஸ் சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு கிடைத்தாலும், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதில் இருப்பதில்லை. குறிப்பாக புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் குறைவாக இருப்பதால், இதை மட்டும் நம்பி உணவு பழக்கத்தை […]

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை உமா சங்கரி, தற்போது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த உமா சங்கரி, குறிப்பாக ‘சொக்கத் தங்கம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து விலகி, குடும்ப […]

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல பொருட்களின் வடிவமைப்புக்குப் பின்னால் இருக்கும் காரணங்களைப் பற்றி பெரும்பாலும் யோசிப்பதில்லை. அவற்றில் ஒன்று ஆண்கள் அணியும் சட்டை. குறிப்பாக, பெரும்பாலான சட்டைகளில் மார்புப் பாக்கெட் இடது பக்கத்திலேயே இருப்பதை அனைவரும் கவனித்திருப்போம். இது வெறும் ஃபேஷன் அல்ல; பல ஆண்டுகளாக உருவான பழக்கவழக்கங்கள், நடைமுறைத் தேவைகள் மற்றும் வரலாற்றுப் பின்னணியின் விளைவாக இந்த வடிவமைப்பு இன்று வரை தொடர்கிறது. வரலாற்றைப் பார்த்தால், ஆரம்ப […]

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் இரண்டு மாத பெண் குழந்தை மர்மமான முறையில் காயங்களுடன் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் தொடர்ந்து காயங்கள் தென்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர், உண்மையை கண்டறிய ரகசியமாக கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அந்த முடிவே அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. குதா கோர்ஜி பகுதியில் வசிக்கும் தம்பதியரின் 2 மாத குழந்தை அடிக்கடி அழுததால், பெற்றோர் அதை இயல்பானதாகவே கருதினர். […]

பொதுவாகவே, நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணம்தான் நிலைக்கும். ஆனால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால், அந்தப் பணம் நீண்ட நாட்கள் நம்மிடம் நிலைக்காது. சில நேரங்களில், அப்படிப்பட்ட ஆசையே நம் வாழ்க்கையை சீரழித்துவிடும். அதற்கு உதாரணமாக, ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. புச்சிரெட்டிபாலத்தில் வேளாண்மை அதிகாரியாக வேலை செய்து வரும் இவருக்கு லாவண்யா […]