பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டுவீழ்த்தி, வீரச் சக்ரா விருது பெற்ற இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான், கோவாவை தளமாகக் கொண்டு இயங்கும் FLY91 என்ற தனியார் பிராந்திய விமான நிறுவனத்தில் பைலட்டாக இணைந்துள்ளார். அபிநந்தன் வர்த்தமான் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் இந்திய விமானப்படை சேவையிலிருந்து ஓய்வுபெற்று, ஆகஸ்ட் மாதத்தில் ‘ஃப்ளை91’ நிறுவனத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஃப்ளை91 நிறுவனத்தின் செய்தித் […]

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் தோல்வி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் […]

2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை முன்னிட்டு, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் எதிர்காலம் குறித்து இன்று நடைபெறும் பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. இங்கிலாந்து தொடரின் கடைசி ஒருநாள் போட்டிக்கு பிறகு ஓய்வு அறிவிக்குமாறு தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் ரோஹித்திடம் கேட்டுக் கொண்டதாக ஆங்கில செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதலால் ரோஹித் சர்மா […]

மகாராஷ்டிராவில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் 4 தலைமுறைகள்) பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அக்குழந்தையை ரதத்தில் வைத்து மேளதாளங்கள் மற்றும் நடனத்துடன் குடும்பத்தினர் விமர்சையாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய ‘கார்கி’ என்ற அந்தப் பெண் குழந்தைக்கும், அவரது தாயாருக்கும் குடும்பத்தினர் பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்துள்ளனர். […]

முதலாவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை நடைபெறவுள்ள இத்தொடரை மும்பை மற்றும் வதோதரா நகரங்கள் இணைந்து நடத்துகின்றன. மும்பையில் உள்ள ‘கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா’ (CCI) மற்றும் ‘வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானம்’ ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை […]

“இது ஏன்?”, “அது எப்படி?”, “நாம் எங்கே போறோம்?”, “அவர் ஏன் அப்படி செய்தார்?” என குழந்தை நாள் முழுவதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறதா? சில நேரங்களில் இது பெற்றோருக்கு சலிப்பாகத் தோன்றலாம். ஆனால், குழந்தையின் இந்த கேள்வி கேட்கும் பழக்கத்தை உடனே தடுக்காமல், அதன் பின்னால் இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொள்வது முக்கியம். சிறு வயதில் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு தெரியாத விஷயங்களை […]

நேபாளத்தில் போடேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்கா மற்றும் சித்வான் ஆகிய 5 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் குடிநீர் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மொத்தம் 7,570 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,253 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளன; 6,317 வீடுகள் மிகக் பலத்த சேதமடைந்துள்ளன. தனியார் வீடுகளுக்கு மட்டும் சுமார் 17.31 […]

முன்னாள் மேற்கத்திய விமானப் படை தளபதியான ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். அறக்கட்டளையின் நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அறக்கட்டளைக்கு மகேஷ் பக்சந்த்கா, மதன் மோகன் பாண்டே மற்றும் நிர்மலா யாதவ் ஆகிய 3 புதிய அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த இவர், […]

இன்றைய நடுத்தர குடும்பங்களில் சொந்த வீடு வாங்குவதற்காகக் கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து ‘கூட்டு வீட்டுக் கடன்’ (Joint Home Loan) பெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், எதிர்பாராத சூழ்நிலைகளால் அந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றுப் பிரிய நேரிட்டால், நிலுவையில் உள்ள வீட்டுக் கடனை யார் அடைப்பது, சொத்து யாருக்குச் சொந்தமாகும், மாதாந்திரத் தவணையை (EMI) யார் செலுத்துவது என்பது போன்ற பல்வேறு சட்ட மற்றும் நிதிச் […]

கடின உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தைப் பாதுகாப்பாகவும், அதேவேளையில் அதிவேகமாகவும் பெருக்குவதே இன்றைய நடுத்தரக் குடும்பங்களின் முதன்மை இலக்காக உள்ளது. பங்குச்சந்தை சார்ந்த ஈக்விட்டி திட்டங்கள் (Equity) முதல் பாதுகாப்பான கடன் பத்திரங்கள் (Debt Funds) வரை சந்தையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், முறையான உத்திகளும் வழிகாட்டுதல்களும் இன்றி கண்மூடித்தனமாக அனைத்துப் பணத்தையும் முதலீடு செய்வது பெரும் நிதி இழப்பிற்கு வழிவகுக்கும். உங்கள் முதலீடு பாதுகாப்பாக வளர்ந்து எதிர்காலத் தேவைகளைத் […]