ஆந்திரப் பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சின்சினடா வசிஷ்டா பாலத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தையை தனியாக விட்டுவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் தகவல்படி, ஆற்றில் குதித்தவர்கள் வேல்பூரு கிராமத்தைச் சேர்ந்த சாய் (29) மற்றும் அவரது மனைவி ஷிரீஷா (28) என்பது தெரியவந்துள்ளது. வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், இந்தத் தம்பதியினர் […]
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில், ஒரு பெண் உயிரியல் ரீதியாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவ உலகிலும் சட்ட ரீதியாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஐந்து குழந்தைகளுக்கு தாயான 27 வயதுடைய அப்பெண், குழந்தை இல்லாத வேறொரு தம்பதியினருக்கு உதவுவதற்காக எந்தவொரு பிரதிபலனும் இன்றி ‘வாடகைத் தாயாக’ மாற ஒப்புக்கொண்டார். இதற்காக கருத்தரிப்பு மையத்தின் மூலம் அந்த தம்பதியின் கரு அவரது கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது. அதே காலகட்டத்தில், […]
வீட்டில் வெள்ளை நிற தரை இருந்தால், வீடு சுத்தமாகவும் விசாலமாகவும் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். ஆனால், அதை முறையாக பராமரிக்காமல் விட்டால் தூசி, காலடித் தடங்கள் மற்றும் பல்வேறு கறைகள் எளிதில் படிந்து தரையின் அழகை பாதிக்கலாம். குறிப்பாக வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், தரையில் கறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதுபோன்ற கறைகளை அகற்றுவதற்காக சந்தையில் கிடைக்கும் ரசாயன கிளீனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. […]
ஸ்மார்ட்போன் வாங்கி சில காலம் ஆன பிறகு, முன்பைவிட பேட்டரி சார்ஜ் வேகமாக குறைவதை பலரும் கவனிப்பார்கள். இதற்கு பேட்டரி திறன் குறைந்திருப்பது மட்டும் காரணமாக இருக்காது. போனை நாம் பயன்படுத்தும் விதம், செயலிகளுக்கு வழங்கியுள்ள அனுமதிகள் மற்றும் சில அம்சங்கள் தொடர்ந்து இயங்குவது ஆகியவையும் சார்ஜ் விரைவில் குறைவதற்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, நாள் முழுவதும் அதிக நேரம் மொபைல் டேட்டாவை பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது, கேமிங் செய்வது […]
அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான தங்குமிட வசதிகள் குறித்து கடும் அதிருப்தி எழுந்துள்ளது. ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அடிப்படை வசதிகள் மோசமாக உள்ளதாக பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, அங்கு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கு இந்திய ‘பி’ அணியை அனுப்ப பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் செப்டம்பர் 19 முதல் […]
நேபாளம் – திபெத் எல்லை மற்றும் போடேகோசி (Bhotekoshi) நதிப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமரும், அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தைப் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். அமைச்சரவை ஒப்புதல்: வியாழக்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நேபாள அரசின் செய்தித் தொடர்பாளரும், கல்வி அமைச்சருமான சஸ்மிதா பொகரேல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் இந்த […]
நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கிவிட்டது. மேலும் 2,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பேரிடர் நிகழ்ந்தபோது அப்பகுதியில் வேலை செய்வதற்காகவும், மலையேற்றத்திற்காகவும், புனித யாத்திரைக்காகவும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் அங்கு முகாமிட்டிருந்தனர். ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களில் சிலர் நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேபாளம் மற்றும் சீனா: நேபாள நாட்டின் […]
நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையன்று 586 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. நிலையற்ற தடுப்பு ஏரிகளால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற அபாயத்திற்கு மத்தியிலும், மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். நேபாளத்தின் எட்டு மாவட்டங்களில் 579 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திபெத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் […]
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், பாக்கெட் பால் விற்பனையை தடுத்து தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்குமாறு தனியார் பால் நிறுவனங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மலைப்பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்தக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பிளாஸ்டிக் கவர்களில் பால் விநியோகம் செய்வதற்கு மாற்றாக புதிய வழிகளைக் […]
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சீன எல்லைப் பகுதியில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் பாதுகாப்பாக உள்ள நிலையில், 320 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள தகவலில், மானசரோவர் புனித யாத்திரைக்காக சென்ற […]

