காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை அனுமதியின்றி ஆபாச நோக்கத்தில் வீடியோ பதிவு செய்ததாக 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்துக்காக காத்திருந்த மாணவியை, செல்போனில் பேசிக்கொண்டிருப்பது போல நடித்து அந்த நபர் ரகசியமாக படம் பிடித்துள்ளார். இதை அருகில் இருந்த மற்றொரு மாணவி கவனித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவளின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்ற போலீசார், அந்த நபரை […]
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் 65 வயது நபர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில், கமலா என்ற நர்ஸ் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்து வந்துள்ளார். இவர், அந்த மருத்துவரிடம் “உன்னை பொய்யான கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பேன் என்றும், உனது அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவேன்” என்று மிரட்டி ரூ.2 கோடி வரை பணம் பறித்துள்ளார். அது மட்டும் இல்லாமல், மருத்துவருக்கு […]
காலை நேரம் என்றாலே பல வீடுகளில் முதலில் கேட்கும் சத்தம் குக்கரின் விசில் தான். குழந்தைகளின் டிபன், அலுவலகம் செல்லும் பெரியவர்களின் மதிய உணவு, வீட்டில் தினசரி சமையல் என எல்லாவற்றிலும் பிரஷர் குக்கர் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இன்று பல புதிய சமையல் சாதனங்கள் வந்தாலும், விரைவாகவும் சுலபமாகவும் உணவு சமைக்க பிரஷர் குக்கருக்கு இருக்கும் முக்கியத்துவம் குறையவில்லை. ஆனால் புதிய குக்கர் வாங்கும்போது பெரும்பாலானவர்களுக்கு வரும் குழப்பம் […]
காலை வேகமாக கிளம்பும் அவசரம், அலுவலக நேரம், பள்ளி நேரம் என இன்றைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. அதனால், காலை சமைத்த உணவை மதியம் வரை சூடாக வைத்திருக்க ஹாட் பாக்ஸ், தெர்மல் கன்டெய்னர் போன்ற சாதனங்கள் பெரும்பாலான வீடுகளில் இடம்பிடித்துள்ளன.ஆனால், இந்த வசதிகள் இல்லாத காலத்தில் நம் பாட்டி, தாத்தாக்கள் எப்படி உணவை பாதுகாத்தார்கள்? மின்சாரம் இல்லாமல், நவீன உபகரணங்கள் இல்லாமல், பல மணி நேரம் உணவை சுவையுடன் […]
தமிழ் திரையுலகில் நடிகையாகவும், மாடலாகவும் அறியப்படும் சனம் ஷெட்டி, பல திரைப்படங்களில் நடித்ததுடன், சமூக விவகாரங்கள் தொடர்பான கருத்துகளையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அவர், மேடையில் பேசும்போது ஏற்பட்ட சர்ச்சை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக […]
நாட்டில் மனிதநேயம் மெல்ல மெல்ல சிதைந்து வருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக குழந்தைகள் முதல் எழுந்து நடக்க முடியாத மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதுமட்டுமின்றி, ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களையும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி, அதை வெளியில் கூறக்கூடாது என மிரட்டி, சில சம்பவங்களில் கொலை செய்யப்படும் குற்றங்களும் பதிவாகியுள்ளன. இதையெல்லாம் விட, விலங்குகளையே பாலியல் வன்கொடுமைக்கு […]
குடும்ப உறவுகளில் நம்பிக்கையின்மை, கருத்து வேறுபாடுகள் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் போன்ற காரணங்களால் குடும்பங்களில் கடும் விரிசல்கள் ஏற்படும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. சில நேரங்களில் இத்தகைய மோதல்கள் வன்முறை, தற்கொலை, கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களாக மாறி சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது திருப்பத்தூரில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சி ராஜபாளையத்தை […]
இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆபாச இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் போலி போலீஸ் அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி அச்சுறுத்தி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, “ஆபாச வீடியோக்கள் பார்த்துள்ளீர்கள்”, “உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”, “உடனே கைது செய்யப்படுவீர்கள்” என பயமுறுத்தி பணம் கேட்கும் மோசடி கும்பல்கள், பொதுமக்களின் அச்சத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. இதேபோன்ற சைபர் மோசடியில் […]
திருமணத்திற்கு புறம்பான உறவுகள் என்பது இருவர் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் நிம்மதியையும் பாதிக்கும். கணவன்-மனைவிக்குள் நம்பிக்கையின்மை, தகராறு, பிரிவு போன்ற பிரச்சினைகள் உருவாகும். சில நேரங்களில் இதுபோன்ற உறவுகள் கொலை உள்ளிட்ட கொடூர சம்பவங்களுக்கும் காரணமாகின்றன. ஆரணி அருகே படவேடு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 33 வயதான ரமேஷ். இவருக்கு 26 வயதான லட்சுமி என்ற மனைவ்வியும், 10 வயதான ஹரிஷ் என்ற மகனும், 5 வயதான சதன்யா […]
ஒரு குழந்தைக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆண்டுக்காண்டு காத்திருக்கும் தம்பதிகள் ஒருபுறம்… பிறந்த குழந்தையின் முதல் அழுகையை கேட்கும் பாக்கியமே இல்லாமல் ஏங்கும் குடும்பங்கள் மறுபுறம். இப்படிப்பட்ட சூழலில், இரண்டாவது குழந்தையும் பெண் என்பதற்காக பிறந்து வெறும் 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தந்தையே தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றதாக வெளியாகியுள்ள கர்நாடக சம்பவம், பெண் குழந்தைகள் மீதான சமூக மனநிலையை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சிக்கபள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்தவர் […]

