உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2026 போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதி கோரி மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) கடந்த செப்டம்பர் 7 அன்று வெளியிட்ட தகுதி வரம்புகள் குறித்த சுற்றறிக்கையின்படி, குறிப்பிட்ட போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் மட்டுமே தகுதிச் சுற்றில் கலந்துகொள்ள முடியும். இந்த விதியை ஒருவருக்காக மட்டும் தளர்த்த முடியாது […]
தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள சூழலில், ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் தவிர மற்ற 3 கட்சிகளும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு களப்பணியைத் […]
தமிழ் அறிஞரும், பேராசிரியர், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 90. 13,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி சாதனைப் படைத்த அவர், திருக்குறளுக்கும் உரை எழுதிய சிறப்புக்குரியவர் ஆவார். பேச்சாற்றலாலும் இயல்பான நகைச்சுவையினாலும் பட்டிமன்றக் கலையைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா. 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். குன்றக்குடி அடிகளாரின் […]
திபெத் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், இந்திய நேரப்படி அதிகாலை 4.02 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி 28.365 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 87.594 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்தது. பூமிக்கு அடியில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு […]
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரத்தீஷ் விவகாரம் தற்போது சட்டப்பேரவை விவாதத்திலும் இடம்பிடித்துள்ளது. ரத்தீஷ் பெயர் அவையில் இடம்பெற்றபோது உதயநிதி ஸ்டாலின் காட்டிய எதிர்வினையை மையமாக வைத்து ஆளும் தரப்பும் எதிர்க்கட்சியும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. சட்டப்பேரவையில் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் சில முக்கிய துறைகள் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது ரத்தீஷ் பெயர் முன்வந்துள்ளது. இந்த விவகாரத்தில் முந்தைய ஆட்சிக்கால நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ரத்தீஷ் […]
BRICS நாடுகள் உலக மக்கள் தொகையில் சுமார் பாதியையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 25 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில், பியூஷ் கோயல் மற்றும் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் வர்த்தகத்தை அதிகரித்தல், சந்தைகளைத் திறந்துவிடுதல், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். அமெரிக்காவின் […]
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்து, அந்த மரணத்தை இயற்கையானதாகக் காட்ட முயன்ற சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் நடந்த இந்தக் கொலையில், இளம்பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரட்டைச் சேர்ந்த இளைஞருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பே அந்தப் பெண்ணுக்கு மற்றொரு நபருடன் காதல் தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் […]
குஜராத்தில் 22 வயது இளம்பெண் உயிரிழந்த வழக்கு, காவல்துறையின் விசாரணையில் கொலை வழக்காக மாறியுள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் கருதப்பட்ட நிலையில், சம்பவத்தின் பின்னணி குறித்து நடத்தப்பட்ட விசாரணை குடும்பத்தினரையே குற்றவாளிகளாகக் கொண்டு சென்றுள்ளது. சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த சோபியா பரூக், தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஆண் நண்பருடன் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் […]
லக்னோவில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாயும் அவரது கள்ளக்காதலரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை சிறுமி நேரில் பார்த்த நிலையில், அதை வெளியில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக காவல்துறை விசாரணையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லக்னோவைச் சேர்ந்த ரோஷினிக்கு கணவர் உள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் உதித் என்ற தனது கள்ளக்காதலரை அவர் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். […]
திருமணத்துக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்த நிலையில், மணமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண வீட்டில் உறவினர்கள் குவிந்திருந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், இளைஞரின் தந்தையே முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஜிம் நடத்தி வந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன. மெஹந்தி உள்ளிட்ட சடங்குகளும் முடிந்த நிலையில், திருமண ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் […]

