பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவினாலும், நீண்ட காலத்தில் பல துறைகளிலும் இந்தியாவின் முதன்மைப் போட்டியாளராக சீனா இருக்கப் போகிறது என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனே நகரில் ரூபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட தனது புதிய புத்தகமான ‘தி கியூரியஸ் அண்ட் தி கிளாசிஃபைட்: அன்வெர்த்திங் மிலிட்டரி மித்ஸ் அண்ட் மிஸ்டரீஸ்’ (The Curious and […]

கள்ளக்காதல் காரணமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை, இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் செங்குன்றம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீஷியன், தனது மனைவியின் அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த மனைவியின் சகோதரர்கள் அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (32). எலக்ட்ரீஷியனாக […]

திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நிலையில், மனைவியின் தகாத உறவால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொள்ளிடம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). தச்சுத் தொழில் செய்து வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றி […]

ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சிதைத்த கள்ளக்காதல், இறுதியில் கணவரையே தனது மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு கொண்டு சென்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவநாத் ராஜ்பார். இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக ஜீவநாத் டெல்லியில் தங்கி வெல்டிங் தொழில் செய்து வந்த நிலையில், சரிதா குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். கணவர் வீட்டில் […]

ராஜஸ்தானில் கணவருடனான திருமண வாழ்க்கைக்கு இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. தங்களது உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக மனைவி மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த 27 வயதான மகேஷ், கவிதா மீனா (23) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, […]

ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் குச்சியால் தாக்கியதாகவும், அதன்பின்னர் சிறுவன் மயங்கி விழுந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள லிட்டில் கார்டன் பள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பிரணய் தேஜா என்ற அந்த சிறுவன், வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று காலை […]

அலாஸ்காவின் மேற்குப் பகுதியில் உள்ள தொலைதூர ரேடார் தளம் அருகே நேற்று (வியாழக்கிழமை) சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் கூறுகையில், இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்ததாக தெரிவித்தார். அவர்களின் தற்போதைய நிலை […]

அமெரிக்கா – இரான் இடையேயான மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவிவரும் பதற்றம் காரணமாக, அங்குப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய மாலுமிகள் மீண்டும் ஒருமுறை பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர். ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் கடல்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஈரான் தொடர்பான சமீபத்திய மோதல் நிகழ்வுகளில் ஒன்றாக, கடந்த ஏப்ரல் 22 அன்று ஹார்முஸ் ஜலசந்தியில் 21 இந்தியர்கள் உள்பட 22 பணியாளர்களுடன் […]

சோமாலியாவின் புன்ட்லான்ட் கடற்கரை அருகே துருக்கி நாட்டு ராணுவ ஆயுதங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலை கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதில் 6 இந்தியர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் சிக்கியுள்ளனர். கமரூன் நாட்டு கொடியுடன் இயங்கும் ‘எம்/வி லுடுப்’ (M/V LUTUF) என்ற இந்த சரக்குக் கப்பல், சோமாலியாவின் புன்ட்லான்ட் பகுதியில் உள்ள எய்ல் மாவட்டத்தில் உள்ள மர்ரா என்ற இடத்திற்கு அருகில் திங்கள்கிழமை அன்று கடத்தப்பட்டு,  நுகால் […]

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பி.டபிள்யூ.எஃப். உலக சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியுடன் முடிவுக்கு வந்துள்ளன. இதில் ஆயுஷ் ஷெட்டி மற்றும் பி.வி. சிந்து ஆகிய முன்னணி இந்திய வீராங்கனை மற்றும் வீரர் இருவரும் போராடி வெளியேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஷி யுக்கியை முந்தைய சுற்றில் வீழ்த்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தியாவின் ஆயுஷ் […]