சமூக வலைத்தளங்களில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல வோல்கர் ஜோடியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கணவர் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகள் இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவைச் சேர்ந்த அகில் மற்றும் மேகா, சமூக வலைத்தளங்களில் பிரபலமான தம்பதியாக இருந்து வந்துள்ளனர். அகில் இந்திய கடற்படையில் பணியாற்றிய […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2 பிரிவில் 41 இடங்களும், குரூப்-2A பிரிவில் 780 இடங்களும் அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். முதல்நிலைத் […]

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறை ஒன்றில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே அறையில் அவர்களின் தந்தையும் கழுத்தில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை மற்றும் மனைவி மீதான சந்தேகம் இந்தச் சம்பவத்துக்கு பின்னணியாக இருந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். பெங்களூரு நாகவாரா பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜி. இம்ரான் (40), தனது 5 மற்றும் […]

பான் மசாலா பொட்டலங்களுக்கான விதிகளில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பான் மசாலாவை பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களில் பிளாஸ்டிக் சார்ந்த அல்லது பிளாஸ்டிக் லேமினேட் செய்யப்பட்ட உறைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய ஃபாயில் கவர்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, FSSAI வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் […]

மகாராஷ்டிராவில் 7 மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம் தொடர்பாக, அவரது கணவரான ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், மருத்துவர்களின் சந்தேகம் போலீஸ் விசாரணைக்கு வழிவகுத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண்ணின் கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த தீபாலி மத்னே என்பவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். […]

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். பேரவையில் பேசிய அவர், நமது குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றிய தீர்மானம் இது. தொகுதி மறுவரையறை சட்டமானால் தென் மாநில MP-க்கள் எண்ணிக்கை குறையும் பாதிப்பு உள்ளது. தற்போதுள்ள லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையே தொடர வேண்டும். அதன் அடிப்படையில் 33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 2026-27-ஆம் ஆண்டுக்காண தமிழ்நாடு பொது மற்றும் […]

சந்திரன் இன்று சூரியனை முழுமையாக மறைத்து, பகல் நேரத்தை இரவு போல மாற்றவுள்ளது. இயற்கையின் மிக அரிய நிகழ்வுகளில் ஒன்றான இந்த ‘முழு சூரிய கிரகணம்’, வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு கண்கொள்ளாக் காட்சியாக அமையவுள்ளது. புதன்கிழமை இன்று, வடக்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. ஒரு குறுகிய பாதையில் பகல் நேர வானம் இருளாக மாறும் இந்த அபூர்வ நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் […]

சென்னையில் சில சொத்து உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக சொத்து வரி கணக்கிடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இதுவரை ரூ.5,000 வரை செலுத்தி வந்த ஒருவருக்கு தற்போது ரூ.28,000 வரை வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திடீரென இவ்வளவு அதிகரித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் […]

ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் நேற்று (ஆக.11) அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேரைக் காணவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கரிபா ஏரி ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும், மேலும் இது கொள்ளளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியாகும். இது 1950-களின் பிற்பகுதியிலும் 1960-களின் முற்பகுதியிலும் சாம்பேசி […]

ஒரே அறையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், ஒருவர் கூட மற்றவர்களுடன் பேசுவதில்லை. ஒவ்வொருவரும் தங்களது செல்போனில் ரீல்ஸ் மற்றும் ஷார்ட் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களை அருகில் இருப்பவர்களாகக்கூட கவனிக்காத இந்தக் காட்சி, தற்போது பல குடும்பங்களில் சாதாரணமாக மாறி வருகிறது. குறுகிய நேரத்தில் பொழுதுபோக்கை வழங்கும் ரீல்ஸ் மற்றும் ஷார்ட் வீடியோக்கள், நேரத்தை கடத்துவதற்கான எளிய வழியாகத் தோன்றலாம். ஆனால், ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்த […]