தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான புதிய கணக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக திமுக, பாஜக, அதிமுக, விசிக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் எதிர்கால நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியலில் உருவாகக்கூடிய புதிய கூட்டணி வாய்ப்புகள் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட 3 தமிழர்களின் உடற்கூறாய்வு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார். அப்போது, கர்நாடக […]
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவர், பள்ளி நிர்ணயித்த சீருடைக்கு மேல் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் இந்திரஜித் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அதில், பள்ளி நிர்வாகம் ஒரே மாதிரியான சீருடை விதிமுறையை அனைத்து மாணவர்களுக்கும் சமமாக […]
ChatGPT-ஐ உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம், ஏஐ சாட்போட்டில் புதிய கஸ்டம் ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாதாரண புகைப்படங்கள், ஐடியாக்கள் அல்லது ஜோக்குகளை உங்களது தனிப்பட்ட ஸ்டிக்கர்களாக எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ChatGPT Images மூலம் இயக்கப்படும் இந்த புதிய அம்சம், வலைதளம் (Web), ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் கிடைக்கவுள்ளது. ChatGPT ஸ்டிக்கர்ஸ்: இதன் சிறப்பம்சம் என்ன? இதன் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால், […]
கள்ளக்காதல் உறவில் இருந்து விலக முயன்றதால் ஏற்பட்ட ஆத்திரம், சென்னையை அடுத்த பகுதியில் பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது. 12 ஆண்டுகளாக நீடித்த உறவை முடித்துக்கொள்ள பெண் முடிவு செய்த நிலையில், அதனை ஏற்க மறுத்த நபர் அவரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயது தூய்மைப் பணியாளர் லதா, பூட்டியிருந்த ஒரு வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, முத்தாபுதுப்பேட்டை […]
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்தமிட்டு விசித்திரமான முறையில் வலம்வந்த வாலிபருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.5,500 அபராதம் விதித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆதித்யா சிகர்வார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வியூஸ்களை அள்ளுவதற்காக இவர் ஒரு விசித்திரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். தனது தோழியை கொண்டு வெள்ளை நிற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் மீது சிவப்பு […]
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பி தாலுகாவைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50), கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகராஜ் (55) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த […]
ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த முஜ்தபா அலி காமெனியின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், அவர் ஒரு மதக் கல்வி அமர்வுக்குத் தலைமை தாங்கும் அபூர்வமான வீடியோ ஒன்று வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஈரானின் அதிகாரப்பூர்வ Fars News Agency பகிர்ந்த இந்த வீடியோவில், முஜ்தபா காமெனியின் குரல் முதல் முறையாகப் பொதுவெளியில் கேட்கப்பட்டுள்ளது. இதில் ஈரானிய ஆட்சியின் “இஸ்லாமிய பாதுகாப்பு மாதிரி” […]
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பிரதிநிதிகள் அடங்கிய மாபெரும் குழுவுடன் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாக இது அமையும் என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலவும் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் […]
இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண முறைமை (Unified Payments Interface – UPI) அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயணத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும், யுபிஐ அமைப்பின் அளப்பரிய வளர்ச்சியையும், அது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்திருப்பதையும் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் […]

