உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை, திடீர் வெள்ளம், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உத்தரப் பிரதேச அரசு தீவிரப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பாதிப்புக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் […]
ஆந்திரப் பிரதேசத்தில் மலேரியா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட குளோரோக்வின் மாத்திரைகளை உட்கொண்ட பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதில், 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போலவரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மலேரியா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக அப்பகுதி மக்களுக்கு குளோரோக்வின் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாத்திரைகளை உட்கொண்ட சிலருக்கு அடுத்தடுத்து உடல்நலப் […]
செக் கொடுக்கும்போது பெரும்பாலானவர்கள் கையெழுத்து, தேதி, பெயர் ஆகியவற்றைத்தான் முதலில் கவனிப்பார்கள். ஆனால், செக்கில் எழுதப்படும் தொகையைச் சுற்றி விடப்படும் சிறிய காலி இடம்கூட பாதுகாப்பு விஷயத்தில் முக்கியமானது என்பது பலருக்குத் தெரியாது. ஒரு செக்கில் ரூ.10,000 கொடுக்க வேண்டுமென்றால், தொகையை எண்களில் மட்டும் எழுதாமல் வார்த்தைகளிலும் குறிப்பிட வேண்டும். அப்போது தொகை எழுதப்பட்ட இடத்திற்குப் பிறகு தேவையில்லாமல் இடம் விட்டால், அந்தப் பகுதியில் கூடுதல் வார்த்தைகளைச் சேர்த்து தொகையை […]
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகள் பிரிஷ்டி முகர்ஜி கட்டக், 28, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர்ஹாட்டில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இன்று காலை சுமார் 9 மணியளவில் பிரிஷ்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. குடும்பத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார், உடலை மீட்டு ராம்பூர்ஹாட் […]
ஒரு பேரழிவு வெள்ளம் தாக்கியபோது, சுற்றியிருந்த வீடுகள், வாகனங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், அவற்றுக்கு நடுவே பச்சை நிறத்தில் இருந்த 4 மாடி வீடு மட்டும் அசைக்க முடியாதபடி காட்சியளித்தது. வெள்ளத்தின் வேகத்துக்கு மத்தியிலும் அந்தக் கட்டிடம் எப்படி தப்பியது என்ற கேள்விக்கு, அதன் 40 ஆண்டு பழமையான கட்டுமானமே பதிலாக அமைந்துள்ளது. நேபாளத்தின் போடோ கோஷி ஆற்றில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட […]
இந்தியாவில் விமானப் பயணத்தை சாமானிய மக்களுக்கும் எளிதாக்கும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் செலவில் 100 புதிய விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ‘உடான்’ (UDAN) திட்டத்தின் கீழ் இந்தப் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் […]
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், ராங் நம்பர் மூலம் அறிமுகமான பெண்ணை காதலித்த இளைஞர் ஒருவர், அந்த உறவு ஏற்படுத்திய சிக்கலில் சிக்கி ரூ.4 லட்சத்தை இழந்துள்ளார். அந்தரங்க வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை சைபர் கிரைம் போலீஸார் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கைது செய்துள்ளனர். பரேலியைச் சேர்ந்த இளைஞரின் செல்போனுக்கு எதிர்பாராத வகையில் ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தவறுதலாக அழைத்ததாகக் கூறி அந்தப் பெண் […]
கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ள நிலையில், முறையான பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் ஆயத்த நிலை இருந்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று ‘ஹைரிஸ்க்’ (HiRISK) அறிக்கை தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் படங்களின் மூலம் பனிச்சரிவு ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் இருந்ததாகவும், பனி ஆறு சரிந்து விழுவதற்கு முன்பே அதன் மேற்பரப்பில் விரிசல் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும் […]
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களில் இதுவரை 163 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய நாள் வெளியிடப்பட்ட தகவலுடன் ஒப்பிடும்போது, புதிதாக 5 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சீனாவில் இருந்த 151 இந்தியர்களும் இன்று அங்கிருந்து புறப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் சிலிமே பகுதியில் உள்ள […]
இளம் வயதில் தொடங்கிய ஒரு தாய்மையின் கனவு, பல தசாப்தங்களுக்குப் பிறகு நனவாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எர்ரமட்டி மங்கம்மா, 74 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து, குழந்தைச் செல்வத்துக்காக நீண்ட காலம் காத்திருந்த தம்பதிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் சம்பவமாக மாறியுள்ளார். மங்கம்மாவுக்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 57 ஆண்டுகள் ஆன நிலையிலும், அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. வயது காரணமாக இயற்கையான முறையில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாத […]

