இதுவரை ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மே 19-ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப […]
ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்குகள், ஜூலை 13-ம் தேதிக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் தமிழ்நாடு […]
விதிமீறல்கள் காரணமாக இந்தியாவில் மே மாதம் மட்டும் 65 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கிட்டத்தப்பட்ட 500 மில்லியன் வாட்ஸ் அப் பயனாளர்கள் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புதிய வசதிகளையும் செய்யவும் அந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கியூ ஆர் கோட் கொண்டு வாட்ஸ் அப் செயலியின் மூலமாகவே புதிய சாதனத்திற்கு சாட் ஹிஸ்டரியை பரிமாறிக் […]
பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது. இந்த கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் […]
வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நடக்க உள்ள நிலையில், டீம் இந்தியா அதற்காக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை அண்மையில் அறிவிக்கப்பட்டது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்த உடன் இந்தியா […]
வட்டாரக் கல்வி அலுலவர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட்டாரகக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணையகளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் ஜூன் 6-ம் தேதி முதல் ஜூலை 5-ம்தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலர் பணியில் 33 இடங்கள் […]
நில மோசடி வழக்கில் பீகார் துணை முதலவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நிலத்தை பெற்றுக் கொண்டு ரயில்வே துறையில் பணி வழங்கியதாக குற்றம்சாட்டப்படும் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகனும் பீகாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நில மோசடி வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அவரது தந்தையும் முன்னாள் […]
இந்திய அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் பலவீனமானதாக இருக்கிறது. இது பாக், அணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் இருக்காது என்றும் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்புகள் உள்ளதாகவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பவர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் […]
முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி காந்த் இணைத்துள்ள படம் ஜெயிலர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு எப்படியாவது வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நெல்சனுடன் கூட்டணி வைத்தார் சூப்பர் ஸ்டார். கோலமாவு கோகிலா டாக்டர் என தொடர்ந்து இரண்டு படங்களையும் சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் நெல்சனுக்கு, தளபதி விஜய் கூட்டணியில் உருவான பீஸ்ட் படம் மிகப்பெரும் தோல்வியை கொடுத்தது. அந்த படத்தின் தோல்வியால் ஜெயிலர் […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சென்னை உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழையானது ஜூலை 6ஆம் தேதி வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு 42 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அரக்கோணத்திலிருந்து வந்தடைந்துள்ளனர். இதில் 20 பேர் கொண்ட குழு கூடலூர் பகுதிக்கு சென்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 4 நாட்களுக்கு கனமழை […]