fbpx

பெண்களுக்கு பயன்படும் வகையில் மாதவிடாய் சுழற்சி தெரிந்து கொள்வதற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக சிரோனா ஹைஜீன் என்ற பெண்களுக்கான சுகாதார நிறுவனத்துடன், வாட்ஸ்அப் இணைந்து செயல்பட்டுள்ளது. இந்த வசதியின்படி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. பெண்கள் இனி தங்கள் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க ஒரு ஆண்டிராய்டு செயலி தனியாக வைத்திருக்க அவசியம் இல்லை. இதற்காக 9718866644 என்ற […]

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஊட்டல் பகுதியில் அடர்ந்த காப்புக்காடு உள்ளது. இந்த காட்டில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் உள்ளவர்கள் காப்பு காட்டிற்கு தங்களது வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடுகளை காலையில் ஓட்டிச்சென்று மேய்த்து விட்டு மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிவிடுவர். முனுசாமியும் அவரது மனைவி உமாவும் ஆம்பூர் அருகே உள்ள பைரபள்ளியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தாமாக 15-க்கும் மேற்பட்ட […]

திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ சூட் எடுக்கும் தொழில் செய்து வருபவர், 23 வயதான இளமாறன். இவர் சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வருகிறார். இளமாறன் தனது நண்பர் தீபக்குமார், சோனியா இருவரின் திருமண நாளுக்காக போட்டோ சூட் எடுக்க, மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். மேலும் இவர்களுடன் இவர்களது நண்பர்கள் தினேஷ் விஜய் பிரபா மற்றும் கார்த்தி என்று என மொத்தம் ஏழு பேர் வந்துள்ளனர். மெரினா பின்புறம் உள்ள […]

ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வருபர் சண்முகம் (54). இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இருவரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு பெண் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மற்ற இரண்டு பெண்களும் படித்து வருகின்றனர். ஈரோடு நாராயணவலசு திருமால்நகர் பகுதியில் வசித்து ‌வருபவர் சரவணன். இவருடைய மனைவி காந்திமதி (40). காந்திமதிக்கு தமிழ்ச்செல்வி அக்கா முறையாகும். சரவணன், காந்திமதி […]

கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால், அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்தப் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 11ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் சென்று சேர்ந்திருக்கிறது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஆன்லைன் மூலம் பொதுக்குழுவை நடத்த மாற்றுத் திட்டத்தையும் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இது […]

சென்னையை அடுத்து கேளம்பாக்கம் அருகே உள்ள ஏகாட்டூர் பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு அப்பார்ட்மெண்ட் உள்ளது. 30 மாடிகளை கொண்ட அபார்ட்மெண்ட் குடியிருப்பில் 24 வது மாடியில் வில்லியம் ஜேம்ஸ் என்பவரும் அவரது மகள் ஜெனிபரும்(35) வசித்து வந்தனர். மென்பொருள் பொறியாளராக ஜெனிபர் பல்வேறு ஐ.டி. கம்பெனிகளில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் ஜெனிபரின் வேலை பறிபோனது. இதன் பிறகு பல்வேறு ஐ.டி. கம்பெனிகளில் வேலை தேடியும் அவருக்கு […]

நாகர்கோவில் காசி மீதுள்ள மேலும் இரண்டு வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி.போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். காசியால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய விசாரணை நடந்துவருகிறது. நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் சுஜி என்ற காசி (27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் கடந்த 2020-ம் வருடம் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்து கொண்டு பணம் கேட்டு […]

தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்றும் தற்காலிக அடிப்படையில் நியமிப்பதை தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள போதிலும், அது தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பை போக்கவில்லை. தற்காலிகம் என்பதை தடை செய்துவிட்டு, […]

தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையது அல்ல என்றும் எத்தனை ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை. கடந்த பொதுக்குழுவில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாமல், 23 தீர்மானங்களுக்கு மேல் எந்த […]

பெண்கள் அழகாக இருந்தால் கம்பெனியில் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று திமுக எம்எல்ஏ காந்திராஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, வேலுச்சாமி எம்பி, வேடசந்தூர் எம்.எம்.ஏ. காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், பேசிய எம்எல்ஏ காந்திராஜன், பெண்கள் அழகாக இருந்தால் […]