தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, X வலைதளத்தில் RCB அணியால் பகிரப்பட்டிருந்த ஒரு கொண்டாட்ட வீடியோ கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது அந்த வீடியோவை RCB தனது பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அணியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக இரங்கல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]

சோசியல் மீடியாவில் பிரைவசி பற்றிய கவலைகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் மெட்டா (Meta) மற்றும் யாண்டெக்ஸ் நிறுவனங்கள், பயனர்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை அனுமதியின்றி சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக, ஆண்டிராய்டில் பாதுகாப்பு அமைப்பு காரணமாக, ஒரே மொபைலில் உள்ள மற்ற செயலிகளில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் அந்த […]

ஹார்வர்ட் பல்கலைக்கழக படிப்புகளில் சேர அமெரிக்காவிற்கு வரும் புதிய வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். உயர்கல்வி, குறிப்பாக ஹார்வர்டு மீதான அதன் அடக்குமுறையை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. குடியரசுக் கட்சி முன்னதாக பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்திருந்தது, அந்த உத்தரவு நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க […]

நடிகர் விஜய், எப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தாரோ, அப்போதில் இருந்து அவரை சுற்றி பிரச்சனைகள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. கட்சிப் பெயரில் தவறு, சின்னம் சர்ச்சை, அது வெற்றிக்கான பூவே கிடையாது என்று பல கருத்துகள் உலா வந்தன. ஆனால், அதையெல்லாம் விஜய் பெரிதாக கண்டுகொள்ளாமல், தன்னுடைய அரசியல் பணியை தீவிரமாக செய்து வருகிறார். இதற்கிடையே, தவெக-வின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளது. இதற்கு […]

ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிகப்படியான உடற்பயிற்சி தசை வலி மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது, ​​உங்கள் உடலில் சில அறிகுறிகள் ஏற்படக்கூடும். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி […]

மேற்குவங்க மாநிலத்தில் மருமகனை கொலை செய்த அத்தை, உடலை துண்டு துண்டாக வெட்டி சுவரில் சிமெண்ட் கொண்டு மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் நடந்தது. மால்டாவைச் சேர்ந்த மௌமிதா ஹசன் நதாப் என்ற பெண் தனது மருமகன் சதாம் நதாப்புடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த உறவு பல ஆண்டுகளாக […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு நேற்று (04.06.2025) முதல் தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் […]

இந்தியாவில் ஒரே நாளில் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,866ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 112 பேருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 106 பேருக்கும் […]

ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸை சமாதானப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அன்புமணி ராமதாஸ் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, […]

பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள ஃபதேபூர் காவல் நிலைய எல்லைக்குள், கிராம மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஜூராங் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர யாதவ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய்க்கு மருத்துவ உதவி வழங்கினார். இதனை விரும்பாத கிராம மக்கள் மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமான முறையில் ரத்தம் சொட்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். […]