தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (SIR) நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்து வருகின்றனர். இந்த பணிகள் நீதிமன்ற வழக்கு, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களின் களப்பணி என பல்வேறு தளங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த சிறப்புத் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கணக்கெடுப்புப் […]
சில துரோகிகளும், தீய சக்திகளும் என்னையும் எனது தந்தை ராமதாஸையும் பிரித்துவிட்டார்கள். ராமதாஸை சுற்றியுள்ள சில திமுக கைக்கூலிகள், துரோகிகள் அவரைவிட்டு விலகும் வரை அவருடன் இணையமாட்டேன் என தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெற்ற உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் அன்புமணி அறிவிப்பு. தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியான பா.ம.க.வில் தற்போது அப்பா ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் எழுந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் கட்சிக்கு […]
People with this problem should not eat bread, even by mistake. Do you know why?
“நாடு முழுவதும் டிஜிட்டல் கைது வழியாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரிடம் ரூ.3,000 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக NPCI வெளியிட்டுள்ள வழிக்காட்டுதல் அறிக்கையில், இந்த ‘டிஜிட்டல் கைது’ மோசடியில், குற்றவாளிகள் முதலில் ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, பின்னர் உங்களை நம்ப வைக்க வீடியோ அழைப்புக்கு மாறுவார்கள். அவர்கள் […]
Rasi Palan | These zodiac signs will face difficulties due to lack of money..! How is your zodiac sign today..?
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது, வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் – மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. […]
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி, தாங்கள் தயாரித்த பொருட்களை 100 கிலோமீட்டர் தொலைவு வரை அரசுப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு நகர்ப்புறச் சந்தைகளில் தங்கள் […]
இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு கட்டமைப்பிற்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை வடிவமைக்கும் போட்டிக்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு கட்டமைப்பிற்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை வடிவமைக்கும் போட்டியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அக்டோபர் 16, 2025 அன்று அறிவித்தது. போட்டிகளின் விவரங்கள் https://www.trai.gov.in/dcra-portal என்ற ஆணையத்தின் வலைத்தள இணைப்பில் இடம்பெற்றுள்ளன. போட்டிக்கான உள்ளீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 05, 2025 […]
பணி ஓய்வுக்குப் பின் பெரும்பாலானோருக்குப் பொருளாதார ரீதியாக ஒரு பயம் ஏற்படுவது இயல்பு. மாத வருமானம் நின்ற பிறகு, சேமிப்பு அல்லது குழந்தைகளை நம்பியே வாழ வேண்டிய கட்டாயம் உருவாகலாம். ஆனால், நீங்கள் வசிக்கும் சொந்த வீட்டின் மூலமாகவே நிலையான மாத வருமானம் பெற முடியும் என்றால் நம்புவீர்களா..? ஆம், இந்த நோக்கத்திற்காகவே மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டம்தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டம் (Reverse Mortgage Scheme). இந்தத் திட்டத்தின் […]
மதுபான விற்பனை விவரம், டாஸ்மாக் கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: மதுபானக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ ஆகியவை மூலம் நடைபெறும் நிகழ்வுகளில், மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் மட்டுமே அவைகளை விற்பனை செய்து இருக்க வேண்டும். இந்த நடைமுறையில் […]

