பிலிப்பைன்ஸில் கோர தாண்டமாடிய சூறாவளி மற்றும் கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆங்காங்கே ஆண்டுதோறும் பூங்கம்பம், சூறாவளி, கனமழை, வெள்ளப்பெருக்கு என இயற்கை பேரிடர்கள் பேரழிவை ஏற்படுத்துவிட்டு செல்கின்றன. அந்தவகையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி (Kalmegi) சூறாவளி தாக்கியது. சூறாவளியோடு, திடீர் வெள்ளமும் ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சூறாவளிக்கு இதுவரை 52 பேர் பலியாகி இருக்கின்றனர். பலரும், வீடுகள், […]

பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கிய கல்மேகி புயல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 6 பேரும் பலியான சோகமும் இதில் அடங்கும். புயலின் மையமாக விளங்கிய மத்திய பிராந்தியத்தில், குறிப்பாக செபு தீவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் […]

இன்றைய தினம் (நவம்பர் 5) ஐப்பசி மாதப் பௌர்ணமி என்பதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களிலேயே மிகவும் உயர்ந்ததாக கருதப்படும் இந்த அன்னாபிஷேகம், ஐப்பசி பௌர்ணமியில் சந்திர பகவான் தனது 16 கலைகளுடன் பிரகாசிக்கும் வேளையில் சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தி வழிபடப்படுகிறது. இது மனக்கவலைகளை நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அன்னாபிஷேக திருநாளில் […]

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 2019-இல் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மதுரை கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2020-ல் திருமணம் செய்ததாகவும், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திராவில் உள்ள பாட்டியைப் பார்ப்பதாக சொல்லிவிட்டுச் சென்ற அந்தப் பெண், குழந்தைகளுடன் […]

உலகின் மிக விலையுயர்ந்த காபி: நீங்கள் ஒரு ஓட்டலுக்கு காபி குடிக்கச் சென்று, மெனுவைப் பார்த்த பிறகு மிகவும் விலையுயர்ந்த காபியை ஆர்டர் செய்ய முடிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பணியாளர் அந்த காபியின் விலை 87 ஆயிரம் ரூபாய் என்று உங்களிடம் கூறும்போது, ​​நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் அது உண்மைதான். உலகின் மிக விலையுயர்ந்த காபி துபாயில் உள்ள ஒரு பூட்டிக் […]

அஞ்சல் துறை மதுரை தெற்கு மண்டலத்தில் உள்ள பதினேழு அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் செயல்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள பதினேழு தபால் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஏடிஎம் இயந்திரங்கள் அஞ்சல்துறையால் நிறுவப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையுடன், பாதுகாப்பான […]

2014 ஆம் ஆண்டில் உலகின் பத்தாவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, இன்று ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் மூன்றாவது பெரிய நாடாக மாற உள்ளது என்றும், நிலையான சீர்திருத்தங்கள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியால் இது உந்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லி பொருளாதாரப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய சீதாராமன், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார மாற்றம் கட்டமைப்பு […]