கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர், கடந்த 16-ஆம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, ஒரு இளம்பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, 6.5 சவரன் நகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்துறை பகுதியில் முதியவருடன் பேச்சு கொடுத்த அந்த இளம்பெண், தன்னைத் திட்டக்குடியைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னைத் திட்டக்குடி எல்லையில் கொண்டுபோய் விடுமாறு கோரியுள்ளார். […]

டெல்லி மாநிலம் திமர்பூரில் உள்ள காந்தி விஹார் பகுதியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படித்து வந்த 32 வயது இளைஞர் ஒருவர், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர் ராம் கேஷ் மீனா என்று அடையாளம் காணப்பட்டது. முதலில் இதைத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பாகவே காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால், ராம்கேஷ் மீனாவின் பெற்றோர் […]

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை மோன்தா புயலாக மாறியது.. இந்த நிலையில் மோன்தா புயல் தீவிரப் புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இன்று காலை 15 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், பின்னர் வேகம் குறைந்து 10 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.. இந்த நிலையில் தற்போது இந்த புயல் நகரும் வேகம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.. அதன்படி 15 கி.மீ வேகத்தில் மோன்தா புயல் […]

உயர் ரத்த அழுத்தம் என்பது இன்றைய காலத்தில் ஒவ்வொரு வீட்டையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். இது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களிடையேயும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு உடல்நலப் பிரச்சனையாக மாறியுள்ளது. தூக்கமின்மை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் அதிக உப்பு உணவு ஆகியவை ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாகும். இருப்பினும், சரியான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வாழ்க்கை முறையில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டால், மருந்துகளின் […]

8வது ஊதியக் குழு உருவாக்கப்படும் என்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அது இன்னும் முறையாக அமைக்கப்படவில்லை. 8வது சம்பளக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் பெயரிடப்படவில்லை, மேலும் குழுவிற்கான குறிப்பு விதிமுறைகள் (ToR) இன்னும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் 8வது சம்பளக் குழுவின் முறையான அமைப்பு மேலும் தாமதமாகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து முக்கிய […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் நிலை மற்றும் அவற்றின் சேர்க்கைகளால் ஏற்படும் சுப யோகங்கள் ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், வரிஷ்ட யோகம் உட்பட பல சுப யோகங்கள் இன்று உருவாகி உள்ளன.. வீரத்திற்கு காரணமான பகவான் ஹனுமனை வழிபட செவ்வாய்க்கிழமை மிகவும் உகந்த நாள். இந்த சுப யோக இணைப்பின் காரணமாக, நான்கு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் திறக்கப்படும், மேலும் அவர்கள் அதிர்ஷ்டத்தின் […]

புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3 இல் ஏர் இந்தியா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. எனினும் பேருந்து தீப்பிடித்தபோது அதில் யாரும் இல்லை பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் தீ விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.. இந்த சம்பவம் பிற்பகல் 1 மணியளவில் […]

குளிர்காலம் வந்துவிட்டாலே பலரும் மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.. குளிர் அதிகரிக்கும் போது, ​​மூட்டு வலி அதிகரிக்கிறது. வெப்பநிலை குறையும் போது அது நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பருவத்தில் எலும்பு வலி பிரச்சனையை அதிகரிக்கும் பல காரணிகள் உள்ளன. இப்போது கேள்வி என்னவென்றால், குளிர்காலத்தில் எலும்பு வலி ஏன் அதிகரிக்கிறது. அதிலிருந்து நாம் எவ்வாறு நிவாரணம் பெறுவது? எலும்பு வலி ஏன் அதிகரிக்கிறது? குளிர்ந்த காலநிலையில், […]