முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்’ கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம், கடந்த 2023 செப்டம்பர் 15-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாகவும், இது மகளிரின் […]
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய நேரத்தில், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி டெல்லிக்கு பயணம் செய்திருந்ததாகவும், அவரது படங்கள் வெளிவந்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுடனான சமீபத்திய மோதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அபத்தமான மற்றும் ஜோடிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் தூண்டுதலின் பேரில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானைத் தாக்கியது என்று அவர் கூறினார். “பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் […]
செல்வச் செழிப்பிற்கு அதிபதியான மகாலட்சுமியையும், அந்தச் செல்வத்தைக் காக்கும் காவலரான குபேரனையும் தீபாவளி போன்ற திருநாட்களில் ஒரு சேர வழிபட்டு வந்தால், பக்தர்கள் வாழ்வில் செல்வம் நிலைத்து செழிக்கும் என்பது இந்துக்களின் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாகும். தொன்மையான காலத்தில் இருந்தே “வாழப் பிறந்தவனுக்கு வடக்கு” என்ற பழமொழி குபேரனின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தரக்கூடியவர் என்றாலும், உண்மையான செல்வத்தின் கடவுள் மகாலட்சுமிதான். பக்தர்களுக்குச் செல்வத்தை முறையாகப் […]
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவு […]
ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியுடன் 3 முறை பாகிஸ்தான் மோதியது. ஆனால், 3 முறையும் பாகிஸ்தான் தோல்வியையே தழுவியது. இதனால், பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்திற்கும் ஆளானது. ஏனென்றால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது […]
Salary not coming.. Is your boss often threatening to fire you? Do this immediately..!
சென்னையில் திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பார்கவுன்சில் இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், சரவணன் ஆகியோரை கொண்ட சிறப்புக்குழுவை நியமித்து பார்கவுன்சில் உத்தரவு. கடந்த 7-ஆம் தேதி சென்னை உயர் நீதின்றம் அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திருமாவளவன் சென்ற காருக்கு குறுக்கே வந்துள்ளது. […]
ஆன்மீக ரீதியாக வெள்ளிக்கிழமை என்பது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் குறிப்பிட்ட செயல்களைச் செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் மனம் மகிழ்ந்து, வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்நாளில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைத் தவறுதலாகச் செய்தால், மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மிக நடைமுறைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். வெள்ளிக்கிழமையில் செய்ய […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் தொடங்கக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல […]
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சிரப்பால் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் சிரப்பால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்து பாட்டிலில் […]

