பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ / டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் […]

உலகளவில் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவது அனைத்து நாடுகளுக்கும் ஒரு பெரிய சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளது. வேகமாக அதிகரித்து வரும் புற்றுநோய் வழக்குகளின் எண்ணிக்கை, ஒரு சில நாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதற்கான சான்றாகும். தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, உலகளவில் புற்றுநோய் வழக்குகள் 61 சதவீதம் அதிகரித்து 2050 ஆம் ஆண்டுக்குள் 30 மில்லியனை எட்டக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் […]

சினிமா ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் வகையில், இந்தியாவில் முதல் முறையாக, டைனிங் டேபிளில் அமர்ந்து சினிமா பார்த்தபடியே சுடச்சுட உணவருந்தும் வசதி பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்கிற்கு செல்லும் போது வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதி இல்லாதது, அத்துடன் இடைவேளையில் காஃபி, பாப்கார்ன் போன்ற நொறுக்குத் தீனிகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, முழுமையான உணவை உட்கொள்ளும் வாய்ப்பை இந்தச் சேவை வழங்குகிறது. பெங்களூருவின் ஓசூர் சாலையில், […]

பிலிப்பைன்ஸில் நள்ளிரவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மின்டானாவோ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10, 2025) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் 58 கிமீ (36.04 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 […]

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் பிரசாத் யாதவ் (58) கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5-ஆம் தேதி இரவு, குலசேகரன்பட்டினம்-உடன்குடி சாலையில் உள்ள தருவைகுளம் மதுபானக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்த அர்ஜூன் பிரசாத் யாதவ், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் தீ வைத்துக் […]

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் நடப்பு தொடரில் இந்தியா முதல் தோல்வியை பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்தாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 23 ரன்களிலும், […]