இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பாறைகள் விழுந்தது. இதனால் மண்ணுக்குள் பேருந்து புதைந்தது. இதில் பயணித்த 18 […]

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ரஷ்யத் தலைவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ​​இரு தலைவர்களும் இந்தியா-ரஷ்யா இருதரப்பு நிகழ்ச்சி நிரலின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் […]

பூமியின் 77 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பரந்த பெருங்கடல்களில் எண்ணற்ற பொக்கிஷங்கள் மறைந்துள்ளன. ஆனால் அவற்றைப் பிரித்தெடுப்பது எளிதல்ல. கடலில் சுமார் 20 மில்லியன் டன் தங்கம் (Underwater gold) இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். நாடுகள் இந்தப் புதையலைப் பிரித்தெடுக்க முயற்சி செய்கின்றன. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடல் அடிவாரத்தில் பரந்த பகுதிகளில் தங்கம் சிதறிக்கிடக்கிறது. இது மற்ற கனிமங்கள் மற்றும் படிவுகளுடன் கலக்கப்படுகிறது. […]

இந்தியாவில் பண்டிகைக் காலம் என்பது ஷாப்பிங் நிறைந்ததாகவே இருக்கும்.. இ காமர்ஸ் ஆன்லைன் தளங்கள் மூலம் பலரும் ஷாப்பிங் செய்கின்றனர்.. இருப்பினும், சில நாட்களில் தீபாவளி வரவிருப்பதால், பலரும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வார்கள்.. ஆனால் ஆன்லைனில் செய்யும் தவறு சைபர் கிரிமினல்கள் பணம் மோசடி செய்ய வழி வகுக்கிறது.. மேலும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற இடங்கள் வழியாக பல மோசடிகள் நடைபெறுகின்றன.. இந்த மோசடிகள் குறித்தும் அவற்றில் சிக்காமல் […]

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா பகுதியைச் சேர்ந்த மாரம்மா (35) என்பவருக்கும், சங்கப்பா (40) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாரம்மா கடந்த ஓராண்டாக தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சங்கப்பா தனது மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே அவர் மாரம்மாவை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். ஆனால், மாரம்மா […]

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காணக்காரி பகுதியைச் சேர்ந்தவர் சாம் ஜார்ஜ் (59). இவரது மனைவி ஜெஸி சாம் (49). இவர்களின் 3 பிள்ளைகளும் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், கணவன் – மனைவி இருவரும் கேரளாவில் தனியாக வாழ்ந்து வந்தனர். முன்னதாக மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய சாம் ஜார்ஜ், பின்னர் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான படிப்பை மேற்கொண்டுள்ளார். இந்த சூழலில்தான், சாம் […]