இளைஞர் ஒருவர் ஹைபர் ட்ரிகோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கரடிபோல் உடல் முழுவதும் முடி இருந்ததை ஏளனம் செய்த நிலையில் தன்னம்பிக்கைதளராது முன்னுதாரணமாக உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் நாண்ட்லெட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்டு கரடிபோன்ற தோற்றத்தில் இருக்கின்றார். இதற்கு காரணம் ஹைபர் ட்ரிகோசிஸ் என்ற நோய்தான். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் ரோமம் வளரும். உடல் முழுவதும் குறிப்பாக முகத்தில் அதிக அளவில் ரோமம் இருக்கும். ஓநாய் போன்ற தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.
இந்நோய் உலக அளவில் 50 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் ஒருவர் இந்தியாவின் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். இந்நோய் பாதிக்கப்பட்டது தெரியவந்ததும் குடும்பமே அதிர்ச்சியானார்கள். இது குறித்து லலித்படிதர் கூறுகையில், நான் மிகவும் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவன், என் தந்தை விவசாயி .குழந்தையில் இந்த பாதிப்பு பற்றி எனக்கு பெரிதாக தெரியவில்லை. வளர்ந்த பின்னர் என்னை ஒதுக்கினர். அதை வைத்துதான் நான் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன். என்றார்.
பள்ளிகளில் என்னை சக மாணவர்கள், குரங்கு என கூறி கிண்டல் செய்வார்கள். எனக்கு அது மன வருத்தத்தை அளிக்கும். குழந்தைகளோ நான் கடித்துவிடுவேன் என நினைத்து ஓடுவார்கள். சிலர் என்னை விலங்கு என நினைத்து கல்லால் அடித்து துரத்துவார்கள். இதில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். என் வாழ்க்கை என்னை ஒரு போதும் விட்டுத் தராது. நான் தொடர்ந்து முயல்வேன் என தெரிவித்தார். இவர் கூறும் வார்த்தைகள் பிறருக்கு நம்பிக்கையூட்டுகின்றது. 17 வயதே ஆன இவருக்கு எவ்வளவு பக்குவம். எவ்வளவு தன்னம்பிக்கை என்பதை பார்க்கும் போது நமக்கும் முன்னேற வேண்டும் என்ற எண்ணமே தோன்றும்.
ஹைபர்டிரிகோசிஸ் நோய் என்பது என்ன? ஹைபர்டிரிகோசிஸ் நோய் என்பது மனித உடல் பாகங்களில் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது ஆகும்.இதனை இரண்டு வகைகளாக வகைப்படுத்துகின்றனர், முதல்வகை உடல் பாகம் முழுவதும் அதிகமான முடி வளர்வது, இரண்டாவது வகை சில குறிப்பிட்ட இடங்களை தவிர்த்து மற்ற பாகங்களில் அதிகமான முடி வளர்வது. இந்த நோய் பெரும்பாலும் புராண உயிரினமான ஓநாயின் தோற்றத்தை ஏற்படுத்துவதால் இதனை ஓநாய் நோய் குறைபாடு என்றும் அழைக்கின்றனர்.