தேசிய செய்திகள்

  • ஏர் இந்தியா விபத்து : பலி எண்ணிக்கை 297 ஆக உயர்வு.. காயமடைந்தவர்களுக்கு பிரதமர் நேரில் ஆறுதல்..

    ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 297ஆக உயர்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி காயமடைந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அகமதாபாத் விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒரே ஒரு பயணி மட்டுமே இந்த துயர சம்பவத்தில் உயிர் தப்பினார். இறந்தவர்களில் 229 பேர் பயணிகள் மற்றும் 12 பேர் விமான ஊழியர்கள். மேலும், விமானம் ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதியில் மோதியதில், அப்போது அங்கிருந்த 56 பேர் உயிரிழந்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் தரையிறங்கி விபத்து நடந்த இடத்தைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களையும் அவர் சந்தித்து அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் உடன் உள்ளனர்..

    விபத்து குறித்து அதிர்ச்சியையும் வருத்தத்தையும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் “அஹமதாபாத்தில் நடந்த சோகம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்த சோகமான நேரத்தில், அதனால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாடுபடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்,” என்று பிரதமர் நேற்று ட்வீட் செய்தார்.

    நேற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை மதிப்பிடுவதற்காக சம்பவ இடத்திற்குச் சென்றார். இதற்கிடையில், விபத்து குறித்த விசாரணை வேகமெடுத்துள்ளது. சம்பவம் குறித்து விசாரிக்க அரசாங்கம் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.

    இந்த விமான விபத்தில் இறந்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் ஆவார். அவர் தனது குடும்பத்தினரைச் சந்திக்க லண்டனுக்கு சென்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கினார்..

    நேற்று என்ன நடந்தது?

    நேற்று மதியம் 1.38 மணியளவில், லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே ஒரு குடியிருப்புப் பகுதியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. விமானம் லண்டனுக்கு பறக்கத் தயாராக இருந்ததால் விமான எரிபொருள் நிரப்பப்பட்டதே தாக்கத்தை அதிகப்படுத்தியதாகத் தெரிகிறது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானி “Mayday” என்று கூறப்படும் அவசர அழைப்பை அனுப்பினார், ஆனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு விமானத்தைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தபோதும் எந்த பதிலும் இல்லை என்பதும் தெரியவந்தது.

    சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு நிறுவனங்களுக்கும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் கூறினார். “எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் விமானத்தில் உள்ள அனைவருடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன,” என்று அவர் X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு அறிக்கையில், 8,200 மணிநேர அனுபவமுள்ள கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் 1,100 மணிநேர அனுபவமுள்ள முதல் அதிகாரி கிளைவ் குந்தர் ஆகியோரால் இயக்கப்பட்ட விமானம் விபத்துக்கு முன்பு, ஒரு Mayday அழைப்பை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தது.

சினிமா 360°

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

ஈரானின் 8 நகரங்களில் உள்ள ராணுவ மற்றும் அணுசக்தி மையங்களை குறைவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயர் அதிகாரிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் அழிவடைந்துள்ளன. இஸ்ரேல் மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் ரைசிங் லயன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, […]

அகமதாபாத் ர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நேற்று பிற்பகல் 1.17 மணியளவில் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட 265 உயிரிழந்தனர்.  விமானம் விபத்துக்குள்ளான பிறகு, விமானத்தில் பயணம் செய்யும் […]

சென்னையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் […]

உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் வளர்ந்து வருகிறது. பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, இஸ்லாம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாகும். 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 347 மில்லியன் (34.7 கோடி) அதிகரித்துள்ளது. ஆய்வின்படி, கிறிஸ்தவம் இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் மதமாகக் கண்டறியப்பட்டுள்ளது, அதே நேரத்தில் எந்த மத தொடர்பும் இல்லாத மக்கள் மூன்றாவது வேகமாக வளர்ந்து வரும் குழுவாக […]

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு உதவும் வகையில் உதவி மையங்களை ஏர் இந்தியா அமைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் […]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஆலோசனை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் இராணுவ சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இந்திய அரசு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. “தற்போதைய பிராந்திய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் இஸ்ரேலிய […]