போலி வங்கிகள் நடத்தி வந்த இடங்களில்சோதனை செய்து ரூ.56 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் கூறியுள்ளார். சென்னை உள்பட 9 மாவட்டங்களில்   போலி வங்கிகள் செயல்பட்டு வந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதுகுறுத்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் 9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார்.   நிஜ […]

சென்னை பகுதியில் சாலிகிராமம் காந்திநகரில் உள்ள அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் தில்லைக்கரசி (41) என்பவர். விலை மதிப்புள்ள நாய் ஒன்றை இவர் சில காலங்களாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற 4ம் தேதி அந்த நாய் மாயமாகி விட்டது. பெரும் அதிர்ச்சியடைந்த தில்லைக்கரசி அருகில் உள்ள எல்லா இடங்களிலும் தேடியிருக்கிறார். இருப்பினும் நாய் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து வீட்டிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பெற்று ஆய்வு செய்த […]

சென்னை அமைந்தகரை பகுதியில் அமைந்துள்ள கலெக்டர் காலனியில் நாகூர் கனி (33) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கதீஜா. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. அயனாவரம் மார்க்கெட் சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக கரீம் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இரவு நாகூர் கனி கடையில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 5-க்கும் மேற்பட்ட […]

கனமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பை முன்னிட்டு, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் […]

கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் வடகிழக்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த வெள்ள பணிகளுக்காக அரசு இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பல இடங்களில் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகள் முடங்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருவொற்றியூர் ரெயில்வே சுரங்கப்பாதை எதிர்பாராத வகையில் மழைநீரால் […]

மகிழ்ச்சியாக நண்பர்களுடன் சென்ற மாணவர்களை அலை இழுத்து கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டில் 6 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். அங்குள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிக்கு இந்த 6 நண்பர்களும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். அச்சமயத்தில் கடற்கரை அலையில் நண்பர்கள் 6 பேரும் ஒன்றாக விளையாடி […]

வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து வரும் காரணத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று நள்ளிரவு நேரத்தில் தொடங்கிய இந்த கனமழை இன்று காலை வரை விடாமல் பெய்து வருகிறது. இதனால், சென்னையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. அதை அப்புறப்படுத்துகின்ற முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு அருகே பிரகாஷ் ராவ் காலனியில் சாந்தி என்ற பெண் வசித்து வந்துள்ளார். […]

நாட்டிலேயே மிகப்பெரிய கடற்கரையாக உள்ள சென்னை மெரினாவில் வரும் காலத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரை சுற்றுலாத்தலங்களின் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி சென்னை வாசிகளின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றும் கூட. கடற்கரையை ரசிக்காதவர்கள் சென்னையில் இருக்கவே முடியாது. பல லட்சம் பேர் வருகை தரும் மெரினாவில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த […]

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் […]

நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தங்கி படித்து மற்றும் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி கொண்டாடினர். அந்த வகையில், குன்றத்தூரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்துக்கு சென்ற தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் , அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின்னர் , முதியோர்களுக்கு உணவு வழங்கும் முறை மற்றும் […]