தேசிய செய்திகள்

சினிமா 360°

  • விஷாலுக்கு காய்ச்சல் வர அந்த பக்கவிளைவுதான் காரணம்!. ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய சுச்சி!.

    அந்த காலகட்டத்தில் இண்டர்நெட் பயன்பாடு பெரியளவில் இல்லாததால் சுச்சியின் நிகழ்ச்சி தான் நாட்டுநடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வந்தது. ரேடியோவில் சுச்சியின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது. வெறும் 22 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த சுசித்ரா, ஒரே வருடத்தில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதால் அவருக்கு ஒரு லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாம். அதுவும் 2004-05 காலகட்டத்திலேயே ரேடியோவில் பேசி லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார் சுச்சி.

    ரேடியோவில் வேலை பார்க்கும் போதே சிம்புவுடன் சேர்ந்து மன்மதன் படத்தில் என் ஆசை மைதிலியே பாடலை பாடினார் சுச்சி. அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து கந்தசாமி, போக்கிரி போன்ற படங்களில் பாடினார் சுச்சி. அதுமட்டுமின்றி கந்தசாமி படத்தில் ஸ்ரேயாவுக்கு டப்பிங் கொடுத்ததும் சுசித்ரா தான். இப்படி ஆர்.ஜே.வாக மட்டுமின்றி பாடகியாகவும் உச்சத்தில் இருந்தார் சுசித்ரா. இதுதவிர ஸ்டேஜ் ஷோக்களையும் பண்ணியுள்ளார் சுசித்ரா, அதற்காக ஒரு ஷோவுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம்.

    இப்படி உச்சத்தில் இருந்த சுசித்ராவின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டது சுச்சி லீக்ஸ். 4 லட்சம் பாலோவர்களை கொண்ட அவரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கோலிவுட் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் கசியவிடப்பட்டன. இதனால் சில மாதங்கள் பரபரப்பாக பேசப்பட்ட அவர் பின் ஆள் அட்ரஸே தெரியாமல் போனார். பின்னர் பிக்பாஸில் கலந்துகொண்டார். மீண்டும் ஆர்.ஜே.வாக பணியாற்ற தொடங்கி சாத்தான்குளம் விவகாரம் பற்றியும் ஆங்கிலத்தில் இவர் பேசி வெளியிட்ட வீடியோ மிகவும் வைரல் ஆனது.

    சுச்சி லீக்ஸ் மூலம் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, அனுயா போன்ற திரைப்பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டையே கதிகலங்க வைத்தன. பின்னர் கணவர் கார்த்திக் குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் சுச்சி. அதுவும் சமீப கலமாக அவர் அளிக்கும் பேட்டிகளில் விஜய் தொடங்கி திரிஷா, கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்களை பற்றி பல்வேறு அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதுவும் கமல்ஹாசனின் பர்த்டே பார்ட்டியில் தாம்புல தட்டில் வைத்து போதைப்பொருள் பரிமாறப்பட்டதாக கூறி இருந்தார் சுச்சி.

    இந்தநிலையில் தமிழ் தரையுலகில் தற்போது, போதைப்பொருள் பயன்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. பிரபல நடிகர்கள் வலையில் சிக்கி வருகின்றனர். இதுதொடர்பாக பாடகி சுச்சிதா பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகிறது. ஒருகாலத்தில் சுச்சித்ராவும் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருக்கிறார் என்றெல்லாம் பல விஷயங்கள் உலா வந்தன. இதை பற்றி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் தெளிவுப்படுத்தியிருக்கிறார். முதன் முதலில் சுசித்ரா மீது கேஸ் கொடுத்தது திரிஷா மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன்தானாம்.

    அதுமட்டுமில்லாமல் தனுஷ் , கார்த்திக்குமார், விஜய்ஜேசுதாஸ் என ஒரு நான்கு பேர் சேர்ந்துதான் சுசி லீக்ஸை வெளியிட்டார்களாம். அது சுசித்ராவுக்கே தெரியாதாம். இதோடு அவர் போதை பொருளுக்கு அடிமையானார் என்று கேஸ் கொடுத்ததும் போலீஸ் அவருடைய வீட்டிற்கு வந்துவிட்டார்களாம். எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் எல்லாவற்றையும் போலீஸ் கையகப்படுத்திவிட்டார்களாம். நல்ல வேளையாக லேண்ட் லைன் போன் மட்டும் உபயோகத்தில் இருந்ததாம்.

    அப்போது சன் டிவியில் இருந்து சுசித்ராவை தொடர்பு கொண்டு பேசிய போது ‘ நான் செய்யவில்லை’ என்ற ஒரு ஸ்டேட்மெண்ட்டை மட்டும் தன்னால் கொடுக்க முடிந்தது என்று சுசித்ரா கூறினார். மேலும் இதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் நிறைய பேர் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னதும் ஆதாரம் இருக்கிறதா என்று சுசித்ராவிடம் பல பேர் கேட்டார்கள். ஆனால் அது முட்டாள்தனமான கேள்வி. ஆதாரம் இருக்கப் போய்தான் இவ்வளவு வெளிப்படையாக சொல்கிறேன். ஆதாரம் என்பது ஒரு வேளை நான் இக்கட்டான சூழ் நிலையில் மாட்டிக் கொண்டால் நீதிமன்றத்தில் இதை காட்டி நான் தப்பித்துக் கொள்வதற்காகத்தான் வைத்திருப்பேன்.

    இதை போய் எல்லாரிடமும் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை என்று சுசித்ரா கூறினார். அதன் பிறகு போலீஸ் என்னிடம் ‘வீட்டில் ஏதும் பொருள் இருக்கா? இருந்தால் கொஞ்சம் அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ரெய்டு வருகிறது’ என்று சொன்னார்களாம். எந்த போலீஸாவது இப்படி சொல்வார்களா? உடனே நான் ‘என் வீட்டில் அப்படி எதுவும் கிடையாது. சிகரெட் பிடிப்பேன். அதனால் சிகரெட் பாக்கெட்கள் இருக்கும்’ என்று சுசித்ரா சொல்லியிருக்கிறார்.

    அதன் பிறகு இரண்டு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சுசித்ரா வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை. அப்போதும் சுசித்ரா ‘என்கிட்ட நிறைய ஆதாரம் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன் பாருங்க’ என சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் தனுஷ் கார்த்திக் குமார் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் சுசித்ரா கூறினார். மேலும் நடிகர்கள் ஒரு போதையில் இருந்தால் இந்த ரசிகர்கள் ஸ்டார் போதையில் இருக்கிறார்கள். நடிகர்கள் என்ன சொன்னாலும் அதை ரசிகர்கள் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

    விஷாலுக்கு வந்தது வெறும் ஜுரம்தான். வேறு ஒன்னுமில்லை. அதான் அவரால் பேசமுடியவில்லை. கை நடுங்குகிறது. கீழே விழுகிறார். சின்னக் குழந்தைகளுக்கு ஜுரம் வந்தாலே போய் பரீட்சை எழுதி விட்டு வருகிறார்கள். இவர்கள் ஜுரம்னு சொல்வாங்களாம். அதை ஆடியன்ஸும் நம்புகிறார்கள். இதெல்லாம் அதோட பக்கவிளைவுதான் காரணம் என சுசித்ரா கூறினார்.

    Readmore: ஸ்ரீகாந்த் பலியாடுதான்!. மெயின் வில்லன் இந்த நடிகர்தான்!. மிகப்பெரிய நெட்வொர்க்கே இருக்காம்!. போட்டு உடைத்த பாடகி சுசித்ரா!.

உலகம்

  • ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகர்க்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள்.. மீண்டும் கட்டி எழுப்பும் பாகிஸ்தான்..!! – உளவுத்துறை எச்சரிக்கை

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே மாதம் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை மீண்டும் நிறுவ பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவுத்துறை நிறுவனமான ISI மற்றும் அரசாங்கம் கணிசமான நிதியுதவி மற்றும் முழு ஆதரவை வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மே 7 அன்று, இந்தியப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தின. ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய மூன்று முக்கிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பை குறிவைத்தன.

    பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள், ஐ.எஸ்.ஐ உடன் இணைந்து, கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள அடர்ந்த காடுகளில் உயர் தொழில்நுட்ப, சிறிய பயங்கரவாத முகாம்களைக் கட்ட முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது மீண்டும் கட்டப்பட்டு வரும் முகாம்கள் லுனி, புட்வால், தைப்பு போஸ்ட், ஜமிலா போஸ்ட், உம்ரான்வாலி, சாப்ரார், ஃபார்வர்ட் கஹுதா, சோட்டா சக் மற்றும் ஜங்லோரா போன்ற பகுதிகளில் அமைந்துள்ளன.

    இந்த முகாம்கள் வெப்ப இமேஜர்கள், இலைகளை ஊடுருவிச் செல்லும் ரேடார் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் ராணுவமும் ஐஎஸ்ஐயும் கெல், ஷார்டி, துத்னியல், அத்முகாம், ஜூரா, லீபா பள்ளத்தாக்கு, பச்சிபன் சாமன், தந்த்பானி, நயாலி, ஜான்கோட், சகோட்டி, நிகைல் மற்றும் ஃபார்வர்ட் கஹுதா போன்ற பகுதிகள் உட்பட, 13 ஏவுதளங்களை மறுவடிவமைத்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கூடுதலாக, சர்வதேச எல்லையில் உள்ள நான்கு பயங்கரவாத ஏவுதளங்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அகற்றப்பட்டன, அவை மீண்டும் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் வழக்கமான பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் நிலைகளும் அடங்கும். ஜம்மு செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் உள்ள மஸ்ரூர் படா பாய், சப்ரார், லூனி ஆகிய நான்கு ஏவுதளங்களையும், ஷகர்கரில் உள்ள ஒரு ட்ரோன் மையத்தையும் ஐஎஸ்ஐ மறுவடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது.

    பயங்கரவாதிகள் ஒரே இடத்தில் குவிவதைக் குறைப்பதற்கும், தாக்குதல் நடந்தால் ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைப்பதற்கும், பெரிய முகாம்களை சிறிய முகாம்களாகப் பிரிப்பதற்கான புதிய உத்தியை பாகிஸ்தான் உளவு நிறுவனம் பின்பற்றி வருகிறது. ஒவ்வொரு மினி-முகாமிலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் கண்காணிக்கப்படும். இந்தக் காவலர்களுக்கு வெப்ப உணரிகள், குறைந்த அதிர்வெண் ரேடார் அமைப்புகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    பஹாவல்பூரில் சமீபத்தில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஆகியவற்றின் மூத்த தளபதிகள் மற்றும் ஐஎஸ்ஐ அதிகாரிகள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, ​​அழிக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நிதி மற்றும் மனிதவளத்தை வழங்குவதாக ஐ.எஸ்.ஐ உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

    இதன் விளைவாக, பல இடங்களில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் புதிய, மிகவும் பாதுகாப்பான வசதிகளை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    Read more: மகிழ்ச்சி செய்தி…! தலைமை ஆசிரியர் பதவி உயர்வு… இவர்களுக்கும் 4% இட ஒதுக்கீடு…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

தூத்துக்குடி மாவட்டத்தில், மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடு கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவா (34) என்பவர் கடந்த 2014 ஆம் தனது மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது, […]

தமிழகத்தில் விற்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எவ்வித குறைபாடும் இல்லை என்று மாநில மறுத்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாத்திரை, மருந்துகளின் தரம் குறித்து மே மாதம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் சில மாத்திரை, மருந்துகளின் தரம் குறைவாக இருந்தது. இந்த மாத்திரை, மருந்துகளை மக்கள் பயன்படுத்தும்போது அது உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாத்திரை, மருந்துகள் […]

விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்ற காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து […]

ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் மேற்கு பகுதியில் பனியான்கோல் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் பின்பற்றும் வழக்கம் ஒன்று கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த பழங்குடி இனத்தவர்கள் திருமணத்தை ‛குஹிம்கிரா’ என்ற பெயரில் அழைக்கின்றனர். இங்கு 8 வயது முதல் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதில் விசித்திரம் என்னவென்றால் சிறுமியை திருமணம் செய்யப்போகும் ஆண், ‛சிறுமியின் தாயுடன்’ உடலுறவு வைப்பதாகும். சிறுமியை திருமணம் செய்யும் நபர் […]

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே மாதம் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை மீண்டும் நிறுவ பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவுத்துறை நிறுவனமான ISI மற்றும் அரசாங்கம் கணிசமான நிதியுதவி […]

இந்தியாவில் பல முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இந்தியக் கிளையின் முன்னாள் தலைவரான சாகிப் நாச்சன், டெல்லி திகார் மத்திய சிறையில் உயிரிழந்துள்ளார். சிறையில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவருக்கு, மருத்துவ பரிசோதனையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக சாஃப்தார்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத பாதையில் சென்ற பிசினஸ்மேன்: மகாராஷ்டிரா […]

2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலரும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். […]

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் 1: இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், கழகம் எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது […]

சாக்லேட் சாப்பிடுவதை விரும்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். இருப்பினும்.. சாக்லேட்டுகளில் உள்ள சர்க்கரை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், டார்க் சாக்லேட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த டார்க் சாக்லேட்டில் அதிக கோகோ உள்ளடக்கம் உள்ளது. இதில் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. அவை பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. இந்த டார்க் சாக்லெட்களை தினமும் […]

விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்ற காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது காரை ஓரமாக பார்க் செய்யுங்கள் என்று கூறி அஜித்திடம் […]