தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர்: அறுவை சிகிச்சைக் கூட உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: இப்பதவிக்கு மொத்தம் 335 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்: ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி: இப்பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ஒரு ஆண்டு அறுவை சிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பு)
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 23
இப்பணி குறித்த மேலும் விவரங்களுக்கு https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.