தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

  • அப்ப போர் நிறுத்தம் இல்லயா? மீண்டும் தீவிர தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு.. ஈரான் என்ன சொல்கிறது?

    ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்று, ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். முழுமையான போர் நிறுத்தம் சில மணி நேரங்களுக்குள் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

    ஆனால் ட்ரம்பின் இந்த கூற்றை ஈரான் முதலில் மறுத்தது. பின்னர் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர்நிறுத்தம் உள்ளூர் நேரப்படி காலை 7:30 மணிக்கு அமலுக்கு வந்ததாக ஈரானின் அரசு ஊடகம் அறிவித்தது.

    இதையடுத்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , ஈரானுடன் ஒரு போர் நிறுத்தத்திற்கு தனது நாடு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேல் தனது நாட்டிற்கு எதிரான போர் இலக்குகளை அடைந்துவிட்டதாகவும் கூறினார். போர் நிறுத்த திட்டத்தை முன்வைத்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

    ஆனால் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஈரானும் இஸ்ரேலும் ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சிறிது நேரத்திலேயே, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஈரான் “சரணடையும் நாடு அல்ல” என்று கூறினார்.

    இதனிடையே ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலின் அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், அணுசக்தி பணியைத் தொடர முயன்றால், தெஹ்ரானைத் தொடர்ந்து தாக்குவோம் என்று கூறினார். மேலும் “போர் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அவர்கள் [ஈரான்] தங்கள் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைத் திறன்கள் இரண்டிலும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறார்கள், மேலும் அவர்கள் திட்டத்தை மீண்டும் தொடங்குவார்கள் என்று நான் நம்பவில்லை, ஏனெனில் அது அமெரிக்காவை எதிர்கொள்ளும். அவர்கள் மீண்டும் தொடங்க முயற்சித்தாலும், நாங்கள் தொடர்ந்து தாக்குவோம்…” என்று கூறினார்.

    இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மீறி ஈரான் தங்கள் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட பல ஈரானிய ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றை இடைமறிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறியது. மேலும் ஈரானின் போர் நிறுத்த மீறலுக்கு “வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது..

    இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் “ஈரானின் போர் நிறுத்த மீறலுக்கு எதிராக, தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகளுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்துவதன் மூலம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு வலுவாக பதிலளிக்க நான் அறிவுறுத்தினேன்” என்று தெரிவித்தார்.

    ஆனால் இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணைகளை ஏவவில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

    Read More : “போர் நிறுத்தம் அமலில் இருக்கு.. அதை மீறாதீங்க..” ஈரானின் தாக்குதலுக்கு பிறகு டிரம்ப் கருத்து..

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

நடிகர் அஜித்தின் புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்.. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் படத்தின் அறிவிப்பு வெளியானாலே அதனை அவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.. நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார், பைக் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.. இந்த […]

மத்திய அரசில் உள்ள லோவர் டிவிசன் கிளார்க்/ஜூனியர் செயலக உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஆகிய பதவிகளில் தேசிய அளவில் 3,131 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறையின் கீழ் உள்ள டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு 12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் கணிதம் பாடம் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்தியாவின் மூன்று பாதுகாப்புப் படைகளுக்கும் (ராணுவம், கடற்படை, விமானப்படை) அவசரகால கொள்முதலுக்காக 28 ஆயுத அமைப்புகளை வழங்கியுள்ளது. ராக்கெட்டுகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் இதில் அடங்கும். இந்த நடவடிக்கை, பாதுகாப்புத் துறையின் தன்னம்பிக்கை உந்துதல் (Aatmanirbhar Bharat) நோக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் […]

ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று, ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக […]

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101), மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை மீனா சந்தித்து பேசி உள்ள நிலையில், அவர் மத்திய இணையமைச்சர் ஆகப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை மீனா. 45 ஆண்டுகளை கடந்தும் மீனா திரையுலகில் பயணித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மீனா மாறினார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, […]

பிரான்ஸில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற வருடாந்திர உலக இசை தினம் நிகழ்ச்சியில், 145 பேர் மீது போதை ஊசியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் டீன் ஏஜ் பெண்கள் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் வைத்திருந்த ஊசிகளில் ரோஹிப்னால் அல்லது GHB போன்ற பாலியல் வன்கொடுமை மருந்துகள் இருந்ததா என்பது […]

மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2014-15 மற்றும் 2024-25 க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் என்று இந்துஸ்தான் டைம்ஸ் […]

மனித உடலில் மிகப்பெரிய உள் உறுப்பு கல்லீரல் ஆகும். இது நமது உடலில் நச்சுக்கள் வெளியேற்றம், பித்த நீர் உற்பத்தி, செரிமானம், ஆரோக்கிய குருதி சுழற்சி போன்ற பல அத்தியாவசிய செயல்களை நிறைவேற்றுகிறது. இந்த அளவிற்கு முக்கிய பங்காற்றும் கல்லீரல், நாம் வழக்கமாக செய்யும் சில தவறுகளால் மிகவும் எளிதாக பாதிக்கப்படலாம். எப்படி கல்லீரல் பாதிக்கப்படுகிறது? நாம் உண்பது, பருகுவது, வாழும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் நேரடியாக கல்லீரல் மீது தாக்கம் […]

இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலுக்கு மத்தியில் பாபா வாங்காவின் 2025 ஆம் ஆண்டுக்கான திகிலூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது. பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா தனது எதிர்கால கணிப்புகள் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரின் கணிப்புகளில் பெரும்பாலானவை பலித்ததாக கூறப்படுகிறது. பல்கேரியாவில் வாழ்ந்து வந்த பாபா வங்கா, கண் பார்வையற்றவர். சிறு வயதில் அவர் கண் பார்வையை இழந்த போது அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி அவருக்கு […]