சென்னையில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் தலையில் சுமத்தப்பட்ட பேரிடி என்று கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுவாக நடைமுறையில் இருக்கும் வரியின் மதிப்பீட்டிலிருந்து 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் வரை உயர்த்துவது என்பது வழக்கமானதுதான். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் திடீரென ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற ரீதியில் பெருமளவில் […]
கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இக்கொலை வழக்கின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையை ஆளும் த.வெ.க. அரசு மூடிமறைக்க பார்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். தம்பி அமுதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த சீமான், கல்விக்கூடங்களில் நிலவும் பகைமையும், போதைப்பழக்கமும் […]
மகாராஷ்டிர மாநிலம் ஜள்காவ் மாவட்டம் வறன்காவ் பகுதியில், மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறிச் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தாத்தா வயதுடைய 4 முதியவர்களை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அணுகிய இந்த 4 முதியவர்களும், இனிப்புகள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி சாதுரியமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்திற்குச் சென்று சிறுமியை மாறி மாறி கூட்டு பலாத்காரம் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் இயங்கி வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இந்த வெடிவிபத்து நேரிட்டுள்ளது. விபத்தின் போது பலத்த சத்தத்துடன் மருந்துகள் வெடித்துச் சிதறியதால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேர் சம்பவ […]
திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் இருந்து ரூ.8 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. அறப்போர் இயக்கம் அளித்துள்ள புகாரில், 2025 டிசம்பர் 14ம் தேதி மலப்பம்பாடியில் திமுக வடமண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இந்த மாநாடு நடைபெற்ற 124 ஏக்கர் நிலம், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு […]
தாய்லாந்தில் இருந்து கடந்த 4ம் தேதி டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 8 பணிப்பெண்கள் உட்பட, 145 பேர் பயணித்தனர். விமானம் நடு வானில் பறந்த போது, திடீரென பயங்கரமாக குலுங்கியது. அது பறந்து கொண்டிருந்த உயரத்தில் இருந்து திடீரென பல அடி தாழ்வாக பறந்ததால், பயணிகள் பீதி அடைந்தனர். பணிப் பெண்கள் சிலர், விமானத்திற்குள் இருந்த பயணிகள் மீது தடுமாறி விழுந்ததில், 17 பேர் […]
வீட்டில் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் பிரஷர் குக்கரை சுத்தமாக கழுவினாலும், அதன் மூடியில் இருக்கும் ரப்பர் கேஸ்கட்டை (Gasket) பலர் கவனிக்காமல் விட்டுவிடுவதாக ஆரோக்கிய வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சிறிய ரப்பர் வளையத்தை சரியாக பராமரிக்கத் தவறினால், அதுவே பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். பொதுவாக குக்கரை பயன்படுத்திய பிறகு, இந்த ரப்பர் வளையத்தின் அடியில் எண்ணெய் பிசுக்கு, சிறிய அளவிலான உணவுத் துகள்கள் மற்றும் ஈரப்பதம் […]
தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வடகொரியா குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாகப் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தென்கொரியக் கூட்டுப் படைத் தலைமைத் தளபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வோன்சான் நகரிலிருந்து காலை 6 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. சுமார் 700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பறந்து […]
மூச்சை எவ்வளவு நேரம் அடக்கி வைத்திருக்க முடிகிறது என்பதை கொண்டு ஒருவரின் நுரையீரல் ஆரோக்கியத்தை முழுமையாக மதிப்பிட முடியாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, ஒருவர் நீண்ட நேரம் மூச்சை அடக்கும் போது நுரையீரலின் திறன் சிறப்பாக இருப்பதாக பலரும் தவறாக கருதுகின்றனர். ஆனால், மூச்சை அடக்கும் தருணத்தில் உடலுக்குள் முற்றிலும் வேறு விதமான உடலியல் மாற்றங்களே நிகழ்கின்றன. நாம் மூச்சை அடக்கிய உடனேயே, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை […]
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயம் முதலில் பாட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றாலே கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக […]

