தேசிய செய்திகள்

  • ஆஹா!. இனி பிஎஃப் மூலம் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம்!. 72 மணி நேரத்திற்குள் தீர்வு!.

    வருங்கால வைப்பு நிதி(PF) சந்தாதாரர்கள், இப்போது அவசரகாலங்களில் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம். மேலும் கோரிக்கை 72 மணிநேரத்திற்குள் தீர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார். இது முந்தைய அவசரகால பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ஐந்து மடங்கு அதிகரிப்பு ஆகும்.

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ், கோரிக்கை செயல்முறையை நெறிப்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும், மேற்கொள்ளப்படும் பரந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளர் சுமிதா தாவ்ரா தலைமையில் கடந்த மார்ச் 28ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெற்ற EPFOன் நிர்வாக குழுவின் 113வது கூட்டத்தின்போது பணம் எடுக்கும் வரம்பை அதிகரிக்கும் திட்டத்திற்கு முதலில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    தானியங்கி மூலம் விரைவான கோரிக்கைகள்: EPFO-வின் தானியங்கி தீர்வு அமைப்பின் கீழ் அவசரகால பணம் எடுக்கும் செயல்முறை இப்போது முழுமையாக தானியங்கியாகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சந்தாதாரரின் யுனிவர்சல் கணக்கு எண்(UAN), ஆதார், பான் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் KYC செயல்முறையை டிஜிட்டல் முறையில் சரிபார்த்து செயல்படுத்த முடியும்.

    இந்த தானியங்கி முறை EPFO அதிகாரிகளின் கைமுறை ஒப்புதலை சார்ந்திருப்பதை குறைக்கிறது. அனைத்து தொழில்நுட்ப அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் உரிமை கோரல்கள் 72 மணி நேரத்திற்குள் தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மருத்துவ செலவுகள், கல்வி, திருமணம், வீடு வாங்குதல் மற்றும் கட்டுமானம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கோரிக்கை வகைகளுக்கு தற்போது தானியங்கி தீர்வு கிடைக்கிறது.

    ஓய்வூதிய சலுகைகள் அல்லது இறுதி தீர்வு போன்ற பிற வகையான கோரிக்கைகளுக்கு பாரம்பரிய கையேடு செயல்முறை இன்னும் நடைமுறையில் உள்ளது.இந்த கோரிக்கைகளை செயல்படுத்த பொதுவாக 15 முதல் 30 நாட்கள் ஆகும். மேலும் படிவம், 19, 31 மற்றும்10c போன்ற படிவங்களை சமர்பிக்கவேண்டும்.

    கைமுறை கோரிக்கைகள் EPFO ஊழியர்களால் ஆராயப்படுகின்றன. மேலும் ஆவணங்கள் காணாமல் போனாலோ அல்லது உறுப்பினர்களின் வெளியேறும் தேதி அமைப்பில் புதுப்பிக்கப்பட்டாலோ தாமதங்களை சந்திக்க நேரிடும்.

    UPI மற்றும் ATM பணம் எடுப்பது: EPFO 3.O முயற்சியின் ஒருபகுதியாக, UPI மற்றும் ATM வழியாக நேரடியாக பிஎஃப் பணம் எடுப்பதை செயல்படுத்துவதிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆதாரங்களின்படி, உறுப்பினர்கள் ஏடிஎம் கார்டு போன்ற பிஎஃப் இணைக்கப்பட்ட பணம் எடுப்பு அட்டையை பெறுவார்கள்.

    பணம் எடுப்பதற்கு யுபிஐ-யை பயன்படுத்த பிஎஃப் கணக்கு பயனரின் யுபிஐ ஐடியுடன் இணைக்கப்படவேண்டும். இந்த அம்சம் நிதி அணுகலை மிகவும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேலை இழப்பு; 75% வரை திரும்பப் பெறுதல்: வேலையின்மை ஏற்பட்டால், EPFO விதிகள், உறுப்பினர்கள் வேலை இழந்த ஒரு மாதத்திற்கு பிறகு தங்கள் பிஎஃப் இருப்பில் 75%வரை திரும்பப் பெற அனுமதிக்கின்றன. மீதமுள்ள 25% இரண்டு மாதங்களுக்கு பிறகு திரும்ப பெறலாம். வேலைவாய்ப்பு இடைவெளிகளின்போது நிதி உதவியை வழங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு உறுப்பினர்கள், www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ EPFO வலைதளத்தை பார்வையிடவும் அல்லது 14470 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.

    Readmore: ஜூலை 1முதல் ரயில் கட்டணம் உயர்வு!. ஏசி & ஏசி அல்லாத வகுப்புக்களுக்கான புதிய கட்டணங்களின் விவரங்கள் இதோ!

சினிமா 360°

உலகம்

  • ” குண்டு வீசாதீங்க..” இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்.. காதில் போட்டுக் கொள்ளாத நெதன்யாகு.. என்ன தான் நடக்குது?

    ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய மீறல். உங்கள் விமானிகளை இப்போதே வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!” என்று பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதையடுத்து தனது மற்றொரு பதிவில், “இஸ்ரேல் ஈரானை தாக்கப் போவதில்லை. அனைத்து விமானங்களும் திரும்பி வீட்டிற்குச் செல்லும், அதே நேரத்தில் ஈரானுக்கு நட்புரீதியான விமானங்கள் பறக்கும். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது, போர்நிறுத்தம் அமலில் உள்ளது! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!” என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    இஸ்ரேல் – ஈரான் போர்

    ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது.

    இந்த சூழலில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இன்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.. இதனால் 12 நாட்களுக்கு பின் மோதல் முடிவுக்கு வந்தது.. ஆனால் சிறிது நேரத்திலேயே போர் ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. மேலும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேலின் இந்த கூற்றை ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் போர் நிறுத்தம் ஏற்படவில்லை.. மோதல் நீடித்து வருகிறது.

    டொனால்ட் ட்ரம்ப்மத்தியஸ்தம் செய்து இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களிலேயே ஈரான் அப்பட்டமாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பலமாக பதிலடி கொடுப்பதாக அறிவித்தது.

    இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் “ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்கு தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகளுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்துவதன் மூலம் பலமாக பதிலளிக்க இஸ்ரேலிய இராணுவத்தை நான் அறிவுறுத்தினேன்” என்று கூறினார்.

    ஈரான் எந்த புதிய ஏவுகணை தாக்குதலையும் நடத்தவில்லை என்று மறுத்த போதிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்தம் தொடங்கப்பட்டதிலிருந்து இஸ்ரேலை நோக்கி எந்த ஏவுகணைகளும் ஏவப்படவில்லை என்று இராணுவ அதிகாரிகள் கூறியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    உள்ளூர் நேரப்படி மாலை 7 மணி வரை “சோதனை போர் நிறுத்தம்” கடைபிடிக்கப்பட்டதாகவும், ஈரானின் பதிலை அளவிட இஸ்ரேல் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்ததாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்திருந்தால், இஸ்ரேல் நீண்ட போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

2025-26-ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 2025-26 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைனில் https://tnmedicalselection.net என்ற இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் […]

திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா..? புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா..? புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; […]

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், ரஷ்யா – உக்ரைன் மோதல், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.. இந்த ஆண்டு […]

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 498 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 78 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 72 […]

வருங்கால வைப்பு நிதி(PF) சந்தாதாரர்கள், இப்போது அவசரகாலங்களில் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம். மேலும் கோரிக்கை 72 மணிநேரத்திற்குள் தீர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார். இது முந்தைய அவசரகால பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ஐந்து மடங்கு அதிகரிப்பு ஆகும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ், கோரிக்கை செயல்முறையை நெறிப்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும், மேற்கொள்ளப்படும் பரந்த சீர்திருத்தங்களின் […]

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் இன்று அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் […]

பைரவர் தலை மீது வைக்கப் படும் எலுமிச்சைபழம் தானாக சுற்றும் அதிசயம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடக்கும். அந்த கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் பைரவர் வழிபாடு தமிழகத்தில் பெரும் பக்தி பூர்வமாக நடைபெறுகிறது. காவல் தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படும் பைரவருக்கு பல இடங்களில் தனிக்கோவில்கள் இருந்தாலும், வேலூர் மாவட்டம் இரங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் திருக்கோவில் மிகவும் அதிசயமிக்க, சக்தி […]

வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவின் ரயில் பயணம் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புக்களுக்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் […]

பட்டியலின மக்களின் சமூக உரிமை போன்ற விவகாரங்களில் திமுக அரசு கபட நாடகம் ஆடுவதாக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ திமுக அரசை சமூகநீதி அரசு என ‘மூச்சுக்கு மூச்சு’ விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பர மாடல் தி.மு.க அரசு, உண்மையில், ‘சமுக அநீதி’ அரசாகவே செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக, பட்டியலின […]

ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய […]