fbpx

தாயின் சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த 22 வயது இளைஞர்.! நாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்.!

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயின் சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அவர் கைது செய்யப்படவில்லை என காவல்துறையை அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநில தலைநகரான இந்தூர் அருகில் உள்ள பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் 70 வயது பெண்ணின் சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த இளைஞரிடமிருந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காவல்துறையின் விசாரணையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்த அவரது உடலை வாங்கிச் சென்ற அவரது 22 வயது மகன் தனது தாயின் இறந்த சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. மேலும் அந்த நபர் மனநல பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

இந்த மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Tue Dec 5 , 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக தமிழ்நாடு அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக அதிக மழை பெய்துள்ளது. இதனால் […]

You May Like